Archive | August 2014

ஆதி முதல் அருள் கடவுள் ஆலயம் புத்தகம்

ஆதி முதல் அருள் கடவுள் ஆலயத்தின் இரண்டாம் புத்தக பதிப்பை இந்த LINK DOWNLOAD செய்து வாசிக்கலாம்,

 

https://www.mediafire.com/?2pw5hxx302oxq6u

 

 

IMG_20140828_152805

 

 

தடுப்பூசிகள்: மருந்தா? வணிகமா?

போலியோ சொட்டு மருந்தால்தான் போலியோ உள்பட பல நோய்கள் ஏற்படுகின்றன என்றால் நம்ப முடிகிறதா? இந்த உண்மையை சொல்பவர் யாரோ, எவரோ அல்ல. போலியோ சொட்டு மருந்தை கண்டுபிடித்தவரேதான்.

”1961ம் ஆண்டுக்குப் பின், அமெரிக்காவில் ஏற்பட்ட அனைத்து போலியோவுக்கும் காரணம் போலியோ சொட்டு மருந்துதான்!” என்று அமெரிக்க செனட் கமிட்டியில் ஒப்புக் கொண்டிருக்கிறார் ஜோனல் சால்க். இவர்தான் போலியோ சொட்டு மருந்தை கண்டுபிடித்தவர்.

”போலியோவிலிருந்து பாதுகாத்துக் கொள்ள கொடுக்கப்பட்ட தீவிர தடுப்பு மருந்து முயற்சிக்குப் பின்னரும், இம்மருந்தால் பெருமளவு பலன் ஏதும் ஏற்படவில்லை என்பது அரசு ஆவணங்களை உற்று நோக்கும்போது தெரிகிறது…” இப்படி சொன்னவரும் போலியோ தடுப்பு மருந்தை உருவாக்கியவர்தான். அவர், சாபின்.

அம்மை நோய்க்கான மருந்தை 1796ல் எட்வர்ட் ஜென்னர் கண்டுபிடித்தார். தன்னுடைய மகனுக்கு முதன்முதலில் இந்த மருந்தை கொடுத்து தன் கண்டுபிடிப்பை நிரூபித்தார். அனைத்து மருத்துவர்களாலும் இந்த மருந்து ஏற்றுக்கொள்ளப்பட்ட பின்பு அந்த வேதனையான சம்பவம் நிகழ்ந்தது. ஆமாம், சிலவருடங்களில் அம்மை தடுப்பு மருந்து முதன்முதலில் யாருக்கு போடப்பட்டதோ, அந்த ஜென்னருடைய மகனும், இன்னொருவரும் மருந்தின் வீரியத்தால் மரணமடைந்தனர். இதனால் எட்வர்ட் ஜென்னர் தன்னுடைய 2வது மகனுக்கு அம்மைத் தடுப்பூசியை போடவில்லை. ஆனால், அதற்குள் உலகம் முழுவதும் அம்மைத் தடுப்பூசி புழக்கத்துக்கு வந்துவிட்டது…

மேலே சொன்ன மூன்று சம்பவங்களும் முதலாளித்துவத்தின் கோர பசிக்கு மனிதர்கள் தடுப்பூசிகள் என்ற பெயரில் இரையாகும் கொடூரத்தின் சில மாதிரிகள்தான். இப்படி உலகையே குறிப்பாக மூன்றாம் உலக நாடுகளையே சுடுகாடாக மாற்றும் போக்கு முதலாளித்துவ சமூகம் எப்போது பிறந்ததோ அப்போது முதலே நடைமுறைக்கு வந்துவிட்டது. முதலாளித்துவத்தின் அடுத்தகட்டமான ஏகாதிபத்தியத்தில் இந்தப் போக்கு உச்சநிலையை எட்டியிருக்கிறது.

இது எப்படி என்பதை சுருக்கமாக பார்த்துவிட்டு தடுப்பூசிகளின் விபரீதம் குறித்து பார்ப்போம்.

எந்தவொரு அறிவியலும், தொழில்நுட்பமும் சமுதாயத்திலிருந்தே பிறக்கின்றன; கிளை பரப்பி வளருகின்றன. எனவேதான் ஒவ்வொரு சமுதாயத்திலும் ஒவ்வொரு உலகப் பார்வை தத்துவ ஆளுமை என்ற பெயரில் ஆட்சி செலுத்துகிறது. இந்த உலகப் பார்வை அந்தந்த சமூக – பொருளாதார கூறுகளாலேயே தீர்மானிக்கப்படுகிறது. இப்படி தோற்றமெடுத்து வளரும் அறிவியலும், தொழில்நுட்பமும் அந்தந்த சமூகத்திலுள்ள சமூக உறவுகளை – ஏற்றத் தாழ்வுகளை – தொடர்ந்து தக்கவைப்பதாகவும், மீண்டும் மறு உற்பத்தி செய்வதாகவுமே அமைகின்றன.

மனிதனுக்கும் இயற்கைக்கும் இடையே முரண்பாடுகள் பிரதானமாக இருந்த புராதன இனக்குழு சமூகங்களில், இயற்கை மனிதனுக்கு கட்டுப்படவில்லை. அச்சம் தருவதாக இருந்தது. எனவே இயற்கையை வணங்குவதன் மூலமாகவும், வசியம் செய்வதன் மூலமாகவும் இயற்கையை கட்டுப்படுத்த முடியும் என மனிதன் நம்பினான். அதனாலேயே அக்காலத்தில் நோய்கள் என்பவை ஆவிகளின் விளைவே என்ற கண்ணோட்டம் நிலவியது. சாமியாடிகளும், ஆவியோட்டிகளும் மருத்துவர்களாக அப்போது இருந்ததும் இந்த காரணத்தால்தான். தவிர அன்று ஒருவனே மருத்துவனாகவும், விஞ்ஞானியாகவும், கவிஞனாகவும், மந்திரவாதியாகவும் இருக்க முடிந்தது.

தொடர்ந்து உற்பத்தி நடவடிக்கைகள் வழியாக கொஞ்சம் கொஞ்சமாக மனிதன் இயற்கையை கட்டுப்படுத்த முடியும் என்பதை அறிந்து கொண்டான். இந்த நடைமுறையில் அவனது அறிவு வளர்ச்சி அடைந்தது. இயற்கையை வணங்குவதற்கு பதில் ஆராயத் தொடங்கினான். சில கீரைகள், பழங்கள், கிழங்குகள், இறைச்சி வகைகள் உடற்கூற்றில் சில முக்கிய மாற்றங்களை நிகழ்த்துவதை கண்டுகொண்டான். இயற்கைக்கும் மனித உடலுக்கும் இடையிலான தொடர்புகள் குறித்தும் சிந்திக்க ஆரம்பித்தான்.

இந்த அடிப்படையிலேயே மேற்கு நாகரீகத்தின் தொடக்க கால அயோனியர்களின் மருத்துவக் கண்ணோட்டமும், புத்தருக்கு சற்று முற்பட்ட வேதகாலத்திய இந்திய மருத்துவ கண்ணோட்டமும் விளங்கியது என்கிறார் தேவிபிரசாத் சட்டோபாத்தியாயா (Science, Philosophy and Society).

இப்படி இயற்கையை மனிதன் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரத் தொடங்கிய பின் உற்பத்தி பெருகியது. உபரி விளைந்தது. இதன் இணையாக மனிதர்களுக்கு இடையே ஏற்றத்தாழ்வுகளும் அதிகரித்தது. ஆக, இயற்கைக்கும் மனிதனுக்கும் இடையிலான முரண்பாடுகளை காட்டிலும் –

மனிதனுக்கும் மனிதனுக்கும் இடையிலான முரண்பாடுகள் – வேறுபாடுகள் – அதிகரித்தது.

தொழிற்புரட்சியோடு தோன்றிய முதலாளியம் வாழ்வின் சகல துறைகளிலும் தனது பாதிப்புகளை பதிய வைத்தது. இதன் விளைவாக அதுநாள்வரை மனித வரலாறு கண்டிராத ஒரு புதிய வேலைப் பிரிவினை மருத்துவத்துறைக்குள் உருவாகியது. மருந்துகள் என்பன மருத்துவர்களாலேயே தயாரிக்கப்பட்டு நோயாளிகளுக்குக் கொடுக்கப்பட்ட முறை அழித்து துடைக்கப்பட்டு –

மருந்தை தயாரிக்க தொழிற்சாலைகளும், விற்பனை செய்ய மருந்துக் கடைகளும் உருவாகின. அதாவது மருந்து என்பது பண்டமாகியது. 1630ல் ஆண்டர்சன் மாத்திரைகளும், பிறகு பாட்மனின் பெக்டோரல் துளிகள், டாபியர் ரசம் முதலியனவும் சந்தையில் விற்பனையாகத் தொடங்கின. 17ம் நூற்றாண்டில் லண்டனிலும், பின்னர் அமெரிக்காவிலும் சந்தை மருந்துகள் புகழ் அடையத் தொடங்கின. 1715ல் பிளவ் கோர்ட் பார்மஸி மருந்துகளைத் தயாரித்து விற்பனை செய்யத் தொடங்கியது.

அடுத்தடுத்து நிகழ்ந்த பல விஞ்ஞான கண்டுபிடிப்புகளின் விளைவாக மருத்துவத் துறையிலும் மாற்றங்கள் நிகழ்ந்தன. 1763ல் சலிசிலிக் அமிலத்தின் மருத்துவப் பண்புகள் உணரப்பட்டன. 1817ல் அபினியிலிருந்து மார்பினும், அடுத்த ஆண்டே நக்ஸ்வாமிகாவிலிருந்து ஸ்டிரைசினும், 1820ல் சின்கோனா மரப்பட்டையிலிருந்து கொயினாவும் பிரித்தெடுக்கப்பட்டது.

சாயப் பொருள்களின் மருத்துவப் பண்புகள் உணரப்பட்டதும் சுவிட்சர்லாந்திலும், ஜெர்மனியிலும் இருந்த பல சாயக் கம்பெனிகள், மருந்துக் கம்பெனிகளாக மாறத் தொடங்கின.

உதாரணமாக சுவிட்சர்லாந்திலுள்ள பேசில் என்னும் இடம், நெசவுத் தொழிலுக்கு புகழ்பெற்றது. இங்குதான் இப்போது உலகின் 4 புகழ்பெற்ற பன்னாட்டு நிறுவனங்களாகிய கெய்சி, சிபா, காண்டஸ், ரோச் ஆகிய மருத்துவத் தொழிற்சாலைகளின் உற்பத்தி மையங்கள் உள்ளன. இந்த நான்கும் சாயத் தொழிற்சாலைகளாக இருந்து மருத்துவத் தொழிற்சாலைகளாக மாறியவை.

இதிலிருந்து நாம் உணரும் உண்மை இதுதான்: முதலாளிய வளர்ச்சியோடு வணிகக் கொள்ளையும், காலனி ஆதிக்கமும் எப்படி அதிகரித்ததோ அதேபோல் மருத்துவத் துறையும் மாறியது. இந்தியாவிலிருந்து ரூபார்பும், ஆப்பிரிக்காவிலிருந்து சென்னாவும், ஜப்பானிலிருந்து பச்சைக் கற்பூரமும், கிழக்கிந்தியத் தீவுகளிலிருந்து நட்மெக்கும் லண்டனுக்கு கொண்டு செல்லப்பட்டு, அவற்றிலிருந்து வடித்தெடுக்கப்பட்ட மருந்துகள் மீண்டும் இதே நாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன.

மருத்துவத் துறையில் இப்படி சர்வதேச வணிகம் தொடங்கியவுடன், ஏற்றுமதி நோக்குடன் – எளிதில் அனுப்பக் கூடிய வடிவத்தில் – மருந்துகளை தயாரிக்கும் அவசியம் ஏற்பட்டது. இதனையடுத்து 1787ல் மாத்திரை தயாரிக்கும் முதல் எந்திரமும், 1853ல் முதல் ஹைபோடெர்மிக் ஊசியும், 1903ல் முதல் சுழல் மாத்திரை எந்திரமும் கண்டுபிடிக்கப்பட்டன. இதனால் கடைகளில் வைத்து விற்பனை செய்வது எளிதானது (VERNON COLEMAN, The Medicine Man; அ,மார்க்ஸ், நமது மருத்துவ நலப் பிரச்னைகள்).

வியாபாரியாக நுழைந்து ஆட்சியாளர்களாக மாறும் காலனியாதிக்க போக்கு அதிகரித்ததும், ஆக்ரமிப்பாளர்கள் எதிர்கொண்ட தலையாய பிரச்னையாக காலனி நாட்டு வெப்ப நோய்கள் இருந்தது. அம்மை, மலேரியா போன்ற நோய்கள், உள்நாட்டு எதிரிகளை காட்டிலும் காலனி ஆக்ரமிப்பாளர்களுக்கு அதிகத் தீங்கை விளைவித்தன. எனவே இந்த நோய்களை தடுப்பது, வெல்வது போன்ற திசைகளில் மருத்துவ ஆய்வுகள் ஊக்குவிக்கப்பட்டன. இதனையடுத்து 1796ல் அம்மைத்தடுப்பு மருந்தும், 1884ல் காலரா தடுப்பு மருந்தும் கண்டுபிடிக்கப்பட்டன.

ஆக, தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டது இப்படியான சமூகக் காரணிகளால்தான். முதலாளித்துவத்தின் பிறப்போடு தடுப்பு மருந்தும் உருவானதால் இயல்பிலேயே இதற்குள்ளும் முதலாளித்துவத்தின் அம்சங்கள் இருக்கின்றன.

எனவேதான் 1860ல் உருவான கிருமிக் கோட்பாட்டின் படி, எந்தவொரு மனிதனும் கிருமிகளால் தாக்கப்படும்போது நோயாளியாகிறான் என்பது சுருக்கப்பட்டு நோய்க்கான காரணம், தனிமனித பிரச்னையாக காட்டப்பட்டது. நோய்க்கு காரணமான சமூகப் பொருளாதார காரணிகள் மறைக்கப்பட்டன. சுற்றுச்சூழல் காரணங்கள் எல்லாம் புறந்தள்ளப்பட்டு சோதனைக் கூட சோதனைகளின் அடிப்படையில் நோயும், சிகிச்சையும் தீர்மானிக்கப்பட்டன. முதலாளியத்தின் தனிமனித சுதந்திரக் கோட்பாடு இந்தவகையில் மருத்துவத்திலும் வேரூன்றியது.

———————

கி.பி.1796ல் எட்வர்ட் ஜென்னர் அம்மை தடுப்பு மருந்தை கண்டுபிடித்து அதற்கு Vaccination என்று பெயர் சூட்டினார். பசுவைக் குறிக்கும் லத்தீன் சொல்லான Vacceinusலிருந்து உருவான சொல் இது. இந்த மருந்து எப்படி தயாரிக்கப்படுகிறது என்பதை நாம் தெரிந்துக் கொள்ள வேண்டும்.

மனிதர்களுக்கு ஏற்படும் அம்மைக் கொப்புளங்களிலிருந்து வரும் சீழை எடுத்து பாதுகாத்து, பசுக்களுக்கு செயற்கையான காயங்களை ஏற்படுத்தி அந்த புண்களுக்குள் செலுத்துவார்கள். இதனால் இப்புண்கள் வழியே அதிகமான சீழ் வெளியேறத் தொடங்கும். இந்த சீழை எடுத்து அதோடு சில இருப்பு ரசாயனங்களைக் கலந்து அம்மை தடுப்பு மருந்தை தயாரிக்கிறார்கள்.

போலியோ சொட்டு மருந்து தயாரிப்பும் கிட்டத்தட்ட இதுமாதிரிதான். போலியோவை ஏற்படுத்துவதாக நம்பப்படும் கிருமிகளை குரங்குகளின் சிறுநீரகத்தில் ஊசி வழியே செலுத்துகிறார்கள். சிறுநீரக சூழலிலேயே இந்தக் கிருமிகள் வளர்த்தெடுக்கப்பட்டு பின்னர் போலியோ சொட்டு மருந்தாக தயாரிக்கப்படுகிறது. இப்படி மருந்து தயாரிக்கப் பயன்படும் குரங்குகள், உரிய சோதனைக்கு பிறகுதான் தேர்வு செய்யப்படுகின்றன. என்றாலும், பரிசோதனைகளின் மூலமே வரப்போகிற அல்லது வெளிப்பட்டுக் கொண்டிருக்கும் நோய்கள் அனைத்தையும் கண்டுபிடித்துவிட முடியாது. இப்படி 1950களில் பரிசோதிக்கப்பட்ட குரங்குகளில் சிமியன் வைரஸ் 40 (SV40) என்ற கிருமி பாதித்திருந்த விஷயம், மருந்துகள் தயாரிக்கப்பட்ட பிறகுதான் தெரிய வந்தது.

இதனால்தான் ‘இந்தியாவில் போலியோ சொட்டு மருந்து கொடுப்பதைத் தடை செய்யவேண்டும்’ என்று தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் டாக்டர் சத்யமாலா வழக்கு தொடர்ந்தார். ஆனால், அந்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது!

அதேபோல், 2006ல் மட்டும் போலியோ சொட்டு மருந்து கொடுத்து இந்தியாவில் 1600 பேருக்கு போலியோ பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகவும், 27,000 பேர் பாதிக்கப்பட சாத்தியம் இருப்பதாகவும் ஜூலை 11, 2008ம் ஆண்டு தேதியிட்ட ‘தி இந்து’ நாளிதழில் கட்டுரை எழுதினார் இந்திய மருத்துவக் கழகத்தின் தடுப்பு மருந்துப் பிரிவின் தலைவரான டாக்டர் ஜேக்கப் புலியேல் (Politics of Polio, July 11/2008). இந்தக் கட்டுரையின் விவரத்தையும் உண்மையையும் ஆளும் வர்க்கங்கள் கண்டுகொள்ளவேயில்லை…

1853ம் ஆண்டு இங்கிலாந்தில் அம்மை தடுப்பு ஊசியை குத்தும் சட்டம் கட்டாயமாக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து உலகின் பல பகுதிகளுக்கும் தடுப்பு மருந்துகள் பரவின. கட்டாயச் சட்டங்களும் அமலுக்கு வந்தன. ஆனால், அம்மை நோய்த் தாக்கத்தில் இம்மருந்துகள் இந்தவிதமான மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. பதிலாக பல புதிய எதிர் விளைவுகளே ஏற்பட்டன. இதனால் 1889ம் ஆண்டு இங்கிலாந்தில் ராயல் கமிஷன் ஏற்படுத்தப்பட்டது. 7 ஆண்டுகள் விசாரணைக்கு பிறகு இக்கமிஷன் வெளியிட்ட அறிக்கையை தொடர்ந்து இங்கிலாந்தில் கட்டாயத் தடுப்பூசி சட்டம் நீக்கப்பட்டது.

1870 – 71களில் அம்மை நோய் ஜெர்மனியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. சுமார் 10 லட்சம் பேருக்கு அம்மை நோய் தோன்றியது. இவர்களில் ஒரு லட்சத்து இருபதாயிரம் பேர் மரணமடைந்தனர். இறந்தவர்களில் நூற்றுக்கு 96 பேர் அம்மை நோய் தடுப்பூசியை குத்திக் கொண்டவர்கள்.

அதுமட்டுமல்ல, அம்மைத் தடுப்பூசி குத்திக் கொண்ட சிறுமிகள், வளர்ந்து தாயானதும் அவர்களுக்கு தாய்ப்பால் சுரக்கவில்லை என்பதும் கண்டறியப்பட்டது.

இந்த உண்மை வெளிப்பட்டதும் 1880ம் ஆண்டு உலக தடுப்பூசி எதிர்ப்புச் சங்கம் (International Anti-Vaccination League) உருவாக்கப்பட்டது. அந்த ஆண்டின் இறுதியில் பாரீசில் நடைபெற்ற முதல் மாநாட்டில் பல நாடுகளில் இருந்தும் பிரதிநிதிகள் கலந்துகொண்டார்கள். தடுப்பூசிகளை எதிர்க்கும், முறைப்படுத்தக் கோரும் 10 தீர்மானங்கள் அம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன. ஆனால்… அது நடைமுறைக்கு வர பன்னாட்டு நிறுவனங்கள் அனுமதிக்கவில்லை…

இந்த புள்ளிவிபரத்தை பாருங்கள். 1980களில் அமெரிக்காவில் குழந்தைகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 10. அதுவே 2008ல் 36 ஆக உயர்ந்தது. அத்துடன் 1983ல் மூளை வளர்ச்சி குறைவுள்ள அமெரிக்க குழந்தைகள் பத்தாயிரத்தில் ஒருவர்தான். ஆனால், 2008ல் அமெரிக்க குழந்தைகளின் மூளை வளர்ச்சி குறைவு விகிதம் நூற்றைம்பதில் ஒருவராக மாறியிருந்தது. அதாவது 3000 மடங்கு அதிகரித்திருந்தது. இதற்கு காரணம் தடுப்பூசிகள்தான். மூன்றாம் உலக நாடுகள் அமெரிக்கா செல்லும் பாதையைத்தான் பின்பற்றுகின்றன என்பதால் ஆசிய, ஆப்ரிக்க, லத்தீன் அமெரிக்க நாடுகளில் ஏற்பட்டுள்ள புதிய புதிய நோய் பாதிப்புக்குகளுக்கு காரணம் தடுப்பூசிகள்தான் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.

மஞ்சள் காமாலைக்காக விளம்பரப்படுத்தப்பட்ட தடுப்பூசியின் கதையைக் கேட்டால் வயிறு எரியும். ஹெர்படைட்டிஸ் ஏ, ஹெர்படைட்டிஸ் பி என மஞ்சள் காமாலையில் இருவகை உண்டு. இதில் ஹெர்படைட்டிஸ் பி ஆட்கொல்லி நோய். ஆனால், தொற்று நோயல்ல. அதேபோல் பரவலாக வரக் கூடியதும் அல்ல. அபூர்வமாகவே மனிதர்களை தாக்கும் இந்த ஹெர்படைட்டிஸ் பி-க்கான தடுப்பூசி வீரியமிக்கது. இதை ஹெர்படைட்டிஸ் ஏ தாக்கியவர்களுக்கு போடக் கூடாது.

உண்மை இப்படியிருக்க, 1990களில் பூதாகரமாக மஞ்சள் காமாலைத் தடுப்பூசி குறித்து (ஹெர்படைட்டிஸ் ஏ) பிரசாரம் செய்யப்பட்டது. இது ஏதோ ஆட்கொல்லி நோய் போலவும், அந்நோய் வந்தவர்கள் எளிதில் மரணமடைவார்கள் என்பது போலவும் விளம்பரம் செய்யப்பட்டது. இந்த ஏகாதிபத்திய வெறிக்கு இந்தியா போன்ற தெற்காசிய நாடுகளும் பலியாகின. மஞ்சள் காமாலைக்கு மருந்துகள் எதுவும் இல்லாமல் உணவுமுறையை ஒழுங்குபடுத்துவதன் மூலமே குணமாக்கலாம் என்ற பழம்பெரும் உண்மை மறைக்கப்பட்டது.

இதன்விளைவாக 1990களில் அமெரிக்காவில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் மஞ்சள் காமாலை தடுப்பூசி கட்டாயம் போட வேண்டும் என்ற சட்டம் நடைமுறைக்கு வந்தது. ஆனால், 1997ல் நடத்தப்பட்ட அமெரிக்க அரசின் ஆய்வில் மஞ்சள் காமாலை தடுப்பூசியும், அம்மைத் தடுப்பூசி போன்றே 13 விதமான புதிய நோய்களை ஏற்படுத்தும் உண்மை வெளிச்சத்துக்கு வந்தது. வலிப்பு, ஜன்னி, கண்பார்வை பாதிப்பு, மூளைக் காய்ச்சல் போன்றவை இதில் அடங்கும். உடனே அமெரிக்க அரசு கட்டாய தடுப்பூசி சட்டத்தை அவசரமாக நீக்கியது.

இதனால் ஏராளமான தடுப்பூசி மருந்துகளை உற்பத்தி செய்து வைத்திருந்த அமெரிக்க மருந்துக் கம்பெனிகள் அதிர்ந்தன. இந்த மருந்தை என்ன செய்வது? அவர்களின் துயர் தீர்க்க முன்வந்தார் பில்கேட்ஸ். தனது தொண்டு நிறுவனத்தின் மூலம் ஆந்திர மாநிலத்தில் 4.5 லட்சம் குழந்தைகளுக்கு மஞ்சள் காமாலை தடுப்பூசிகளை இலவசமாக போட்டார். இந்த தடுப்பூசி அமெரிக்க நிறுவனங்களால் உற்பத்தி செய்யப்பட்டு, அமெரிக்க அரசால் 1997ல் தடைசெய்யப்பட்டவை…

தடுப்பூசிகளை ஆதரிப்பவர்கள் என்ன சொல்கிறார்கள்?

‘முன்பெல்லாம் கொள்ளை நோய்கள் மக்களை கூட்டம் கூட்டமாக தாக்கியதே… தடுப்பூசிகள் வந்ததற்கு பின்னால்தானே கொள்ளை நோய்கள் கட்டுக்குள் வந்தன?’ பொது புத்தியில் இப்படித்தான் பதிய வைக்கப்பட்டிருக்கிறது. ஆனால், உண்மை இதுமட்டுமே அல்ல. பல தீவிரமான கொள்ளை நோய்களை தடுப்பூசிகள் தடுத்து நிறுத்தியது எவ்வளவு உண்மையோ… அவ்வளவு உண்மை தடுப்பூசி என்னும் பெயரில் பன்னாட்டு நிறுவனங்கள் நடத்தும் வணிகமும், இதனையடுத்து தோன்றியுள்ள புதுப்புது நோய்களும்.

2009ம் ஆண்டு சீனாவிலிருந்து உலகம் முழுக்க சார்ஸ் (பறவைக்காய்ச்சல்) பரவுவதாக பிரசாரம் செய்தார்கள். இந்த சளிக்காய்ச்சலை கட்டுப்படுத்தவோ, பரவாமல் தடுக்கவோ எந்த மருந்தும் கண்டுபிடிப்பதற்கு முன்பே அக்காய்ச்சல் படிப்படியாக குறைந்தது. இதேநிலைதான் இந்தியாவில் ஏற்பட்ட சிக்குன்குனியா காய்ச்சலுக்கும் ஏற்பட்டது. பன்றிக்காய்ச்சலையே எடுத்துக் கொள்வோம். ஏதோ கொள்ளை நோய் போல உலகம் முழுவதும் பேசப்பட்ட இந்நோய்க்கான தடுப்பு மருந்து தாமிஃப்ளூ விற்பனைக்கு வரும் முன்பே இந்நோய் குறைந்துவிட்டது.

எந்தவொரு நோயானாலும் மக்களின் உடல் நிலை மற்றும் சுற்றுப்புற சமூக காரணிகளை வைத்து தானாகவே ஏற்படும். குறிப்பிட்ட இடைவெளியில் தானாகவே மறையும். இந்த அறிவியல் உண்மை மறைக்கப்பட்டு, ஆனால், இதன் சாராம்சத்தை – அதாவது தானாகவே மறையும் தன்மை – மட்டும் எடுத்துக் கொண்டு ஆளும் வர்க்கங்களும், பன்னாட்டு நிறுவனங்களும் ஏதோ தங்களால்தான் – தாங்கள் அறிமுகப்படுத்திய தடுப்பூசியால்தான் – நோய்களை கட்டுப்படுத்த முயன்றது போல் பிரசாரம் செய்கின்றன.

சில பழைய பக்கங்களை பார்ப்போம். 1950களில் போலியோ நோயின் தாக்கம் உலகெங்கும் 40 மில்லியனாக இருந்தது. அப்போது போலியோவிற்கான எந்த தடுப்பு மருந்தும் கண்டுபிடிக்கப்படவில்லை. 1952ல் 19 மில்லியனாகவும், 1954ல் 8 மில்லியனாகவும் தன்னால் இது குறைந்த பிறகு 1956ல் போலியோ தடுப்பு மருந்து கண்டறியப்பட்டது. இப்போது என்ன சொல்கிறார்கள்? இந்த தடுப்பு மருந்தால்தான் போலியோ கட்டுக்குள் இருப்பதாக…

தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படாத டைபாய்டு காய்ச்சல் 1910ல் 500 மில்லியனுக்கு மேல் உலகெங்கும் பாதிப்பு ஏற்படுத்தியது. தடுப்பூசி பயன்படுத்தாத நிலையில் 1920ல் அதுவே 200 மில்லியனாகவும், 1930ல் 100 மில்லியனாகவும் குறைந்துவிட்டது.

இப்படி இயற்கையாகக் குறைந்த பல நோய்களைத் தங்கள் வரைபடத்தில் ஏற்றி வருமானமாக மாற்றும் தந்திரத்தைத்தான் தடுப்பூசி தயாரிக்கும் பன்னாட்டு நிறுவனங்கள் செய்கின்றன.

இப்போது தடுப்பூசி மருந்துகள் குறித்த ஆராய்ச்சியாளர்கள், மருத்துவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதற்கு பதிலாக –

இந்த மருந்துகளை தயாரிக்கும் பன்னாட்டு நிறுவனங்கள் என்ன சொல்கின்றன என்று பார்ப்போம். அதாவது ‘புகைப்பிடிப்பது உடல் நலத்துக்கு கேடு…’ என்று அச்சிடுகிறார்கள் இல்லையா? அதேபோல் தடுப்பூசி மருந்துடனும் சில எச்சரிக்கைகளை பன்னாட்டு நிறுவனங்கள் அச்சிடுகின்றன. அவை என்ன தெரியுமா?

1. அதிகப்படியான காய்ச்சல் (105 டிகிரி அல்லது அதற்கு மேல்)

2. மந்தமாக இருத்தல்; நீடித்த அசதி

3. மூளை வளர்ச்சி குறைபாடு; மூளை பாதிப்பு

4. எப்போதாவது வலிப்பு; மயக்கம்

5. கண் நரம்புக் கோளாறுகள்; நரம்பு தொடர்பான நிரந்தக் கோளாறுகள்

… ஆகியவை தடுப்பூசிகள் போட்டுக் கொண்டால் ஏற்படலாம் என எச்சரிப்பது அந்த தடுப்பூசி தயாரித்த நிறுவனங்கள்தான். ஆனால், எந்த மருத்துவரும் இதைக் குறித்து நோயாளிகளிடம் சொல்வதில்லை. அதுமட்டுமல்ல, உச்சபட்ச விளைவாக SIDS (Sudden Infant Death Syndrom) ஏற்படுத்துவதாக தடுப்பூசியை தயாரிக்கும் நிறுவனங்கள் சொல்கின்றன. இதன் அர்த்தம் என்ன தெரியுமா? குழந்தை திடீரென இறந்து போகும்…

ஆனால், இந்த உண்மையை – அதாவது தடுப்பூசியை தயாரித்த நிறுவனம் சொல்லும் எச்சரிக்கையை – எந்த மருத்துவரும் நோயாளிகளிடம் சொல்வதில்லை. பதிலாக சிரஞ்சியில் ஏற்பட்ட மருந்தையே கண்ணுக்கு காட்டுகிறார்கள்.

தடூப்பூசியில் கலக்கப்படும் ரசாயனங்கள்:

வெவ்வேறு தடுப்பூசிகளில் கலக்கப்படும் ரசாயங்களும், அதனால் ஏற்படும் விளைவுகளையும் தெரிந்து கொள்வோம்.

1. அம்மோனியம் சல்பேட் – வயிறு குடல், கல்லீரல் மற்றும் நரம்பு மண்டலத்தில் விஷம் பரவும்.

2. பீட்டா பிராபியோலாக்டோன் – கல்லீரல், வயிற்று புற்றுநோய்களை ஏற்படுத்தும்.

3. லாட்டக்ஸ் ரப்பர் – திடீர் அதிர்ச்சி மற்றும் இறப்பு.

4. எம்.எஸ்.ஜி. – பிறவிக் கோளாறு மற்றும் ஒவ்வாமை.

5. அலுமினியம் – அலிமியர்ஸ் நோய், டிமெண்ட்சியா, வலிப்பு, கொமா.

6. ஃபார்மால்டிஹைட் – மூளை மற்றும் குடல் புற்று நோய்.

7. பாலிசோர்பேட் 60 – நிரூபிக்கப்பட்ட புற்றுநோய் காரணி.

8. டிரைபுடைல் பாஸ்பேட் – சிறுநீரக மற்றும் நரம்பு மண்டல பாதிப்புகள்.

9. குளுதரால்டிஹைட் – பிறவி குறைபாடுகள்.

10. பாதரசம் – உலகிலேயே கொடிய விஷமாக கருதப்படுகிறது

11. பினால் (கார்பாலிக் அமிலம்) – செல்களை பாதிக்கும் விஷம்.

12. நியோமைசின் சல்பேட் – சத்துகள் உறிஞ்சப்படுவதில் தடையை ஏற்படுத்தும்… (அ.உமர்பாரூக் மற்றும் இரா.ஞானமூர்த்தி எழுதிய ‘தடுப்பூசி: வெளிப்படும் உண்மைகள்’ நூலிலிருந்து)

தடுப்பூசிகளின் விபரீதங்கள்:

டாக்டர் வில்லியம் ட்ரெப்பிங், 2000ம் ஆண்டில் Good – Bye Germ Theory என்ற நூலை வெளியிட்டார். அமெரிக்காவில் கட்டாய தடுப்பூசிச் சட்டம் அமலில் இருந்தபோது வெளிவந்த நூல் இது. இதுவரை லட்சக்கணக்கான பிரதிகள் விற்பனையாகியுள்ள இந்நூலிலிருந்து சில குறிப்புகள்:

1. அமெரிக்கக் குழந்தைகளுக்கு அரிதாக ஏற்படும் மூளை வளர்ச்சிக் குறைபாடு (Autism) தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்த பிறகு 3000 மடங்கு அதிகரித்துள்ளது.

2. அமெரிக்கக் குழந்தைகளில் வாரத்துக்கு 3 பேர் தடுப்பூசியினால் மரணமடைகிறார்கள் என்று பெடரல் கவர்மெண்ட் அறிக்கை கூறுகிறது.

3. 1975களிலிருந்து ஐரோப்பிய நாடுகளிலும், ஜப்பானிலும் டிபிடி தடுப்பூசி அதன் அதிகப்படியான நச்சுத்தன்மை காரணமாகத் தடை செய்யப்பட்டுள்ளது. கொடிய நஞ்சுள்ள இந்த ஊசி, அமெரிக்காவிலும், இந்தியாவிலும் இன்றும் பயன்படுத்தப்படுகிறது.

4. சாதாரண நிலையில் கக்குவான் இருமலால் இறப்பவர்கள் ஆண்டுக்கு 10 பேர்தான். ஆனால், கக்குவான் இருமலுக்கான தடுப்பூசிக்கு பிறகு ஆண்டுக்கு 950 பேர் கக்குவான் இருமலால் இறக்கிறார்கள். இந்த கக்குவான் இருமல் தடுப்பூசியை மருந்துக் கம்பெனிகள் தங்கள் ஆய்வுக் கூடங்களில் எதற்கு பயன்படுத்துகிறார்கள் தெரியுமா? பரிசோதனை விலங்குகளுக்கு மூளைக் கோளாறையும், மூளைத் திசு வீக்கத்தையும் ஏற்படுத்துவதற்காக.

5. 95% நோய்வாய்ப்பட்டவர்கள் அதே நோய் வராமல் இருப்பதற்காக தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள்தான்.

6. ‘கிருமிகளால்தான் நோய் பரவுகிறது’ என்று கூறும் கிருமித் தத்துவம், எந்தவொரு அறிவியல் பூர்வமான ஆதாரத்தை கொண்டும் நிரூபிக்கப்படவில்லை. கிருமித் தத்துவத்தை வெளியிட்டவர் லூயி பாஸ்டர். இவருடைய பெரும்பாலான கண்டுபிடிப்புகள் சொந்த முயற்சியால் ஆனதல்ல. டாக்டர் பீச்சாம்பின் கண்டுபிடிப்புகளை தழுவியவை. கிருமிகளால் நோய் ஏற்படும் என்ற கருத்தை பீச்சாம்ப் எதிர்த்தார். ஆய்வுகள் மூலம் நிரூபிக்கவும் செய்தார். தடுப்பூசிக்கான பாஸ்டரின் முந்தைய கண்டுபிடிப்புகள் அனைத்தும் பேரழிவிலேயே முடிந்தன.

7. பாக்டீரியா, வைரஸ், பூஞ்சை ஆகியவை ஒரே உயிரிடமிருந்து வந்தவை. அவை அனைத்து உயிர்களுக்கும் நன்மை செய்பவை என்பதே நுண்ணுயிர்கள் குறித்த ஆரம்பக்கால ஆய்வு முடிவுகள்.

8. உலகில் பல அரசாங்கங்களால் பின்பற்றப்படும் கட்டாயத் தடுப்பூசிச் சட்டங்கள் அனைத்தும் அந்தந்த நாட்டு அரசியல் சாசனத்துக்கும், இறையான்மைக்கும் எதிரானவை. அமெரிக்காவின் சுகாதார நிலையங்கள் அனைத்தும் குழந்தைகளின் உயிரை பணயம் வைத்து தடுப்பூசித் திட்டங்கள் மூலம் அரசிடமிருந்து பணம் பறிக்கின்றன.

9. அமெரிக்க மத்திய அரசு எஃப்டிஏ அறிக்கையின் படி, 90% டாக்டர்கள் தடுப்பூசி தொடர்பான மோசமான விளைவுகளை அறிவிப்பதில்லை.

10. உலகில் எந்த நாட்டு மக்களானாலும் சரி, நோய்வாய்ப்பட்டவர்களில் பெரும்பாலோர் தடுப்பூசி போடப்பட்டவர்களே. தடுப்பூசி போடாதவர்கள் மிக ஆரோக்கியமாக இருக்கிறார்கள் என்பதை ஆய்வுரீதியாக சுலபமாக நிரூபிக்க முடியும்.

11. மூளைத்திசு வீங்கி சேதமடையும் நோய்தான் தடுப்பூசியின் விளைவுகளில் மிக முக்கியமானதாக தடுப்பூசி பற்றிய பெரும்பாலான ஆய்வுகள் கூறுகின்றன.

12. நான்கு கிலோ எடையுள்ள ஒரு குழந்தைக்கு ஒரு நாளில் ஒரு தடுப்பூசி போடுவது என்பது 40 கிலோ எடையுள்ள மனிதனுக்கு 40 தடுப்பூசிகளை போடுவதற்கு சமம்.

13. உலக மருத்துவ வரலாற்றிலேயே அதிகம் தடுப்பூசி போடப்பட்டவர்களும், அதிக நோய் பாதிப்பு உள்ளவர்களும் அமெரிக்கர்கள்தான். சரிபாதி அமெரிக்கர்கள் ஏதாவதொரு நாள்பட்ட நோயினால் பாதிக்கப்பட்டவர்கள். ஐந்தில் ஒரு பங்கு அமெரிக்கர்கள் நீடித்த இரண்டு நோய்களால் அல்லது அதற்கு மேலும் பாதிக்கப்பட்டவர்கள். 70% அமெரிக்க இறப்புக்கு நீடித்த நோய்களே காரணம்….

இப்போது சொல்லுங்கள்… மனித உடலில் இயற்கையாகவே இருக்கும் எதிர்ப்பு சக்தியை மேலும் மேலும் வளர்க்கும் ஆரோக்கியமான உணவை அனைத்து மக்களுக்கும் வழங்காமல் –

சுற்றுப்புற சீர்கேட்டை களையாமல் –

ஏகாதிபத்தியங்களுக்கு கூஜா தூக்கியபடி வலம் வருகிறதே ஆளும் வர்க்கம்…

இவர்களால்தான் தடுப்பூசி வணிகம் கொடி கட்டிப் பறக்கிறது. கொள்ளை லாபமும் பன்னாட்டு நிறுவனங்கள் அடைகின்றன. மக்களும் கொத்து கொத்தாக பலவித நோய்களால் பாதிக்கப்படுகிறார்கள்.

இதை இனியும் அனுமதிக்கத்தான் வேண்டுமா?

 

Copy from FB

காய்ச்சல் பற்றியும் ,அதன் உண்மைகள் பற்றி

மக்களுக்கு காய்ச்சல் பற்றியும் அதன் உண்மைகள் பற்றியும் விழிப்புணர்வை ஊட்டவும், ஆங்கில மருத்துவம் பற்றிய உண்மைகள் படித்தவர்கள் மத்தியில் கூட விழிப்புணர்வை இல்லாத நிலைபற்றியே இக்கட்டுரை எழுதக் காரணம்.
 
முதலில் ஒரு விஷயத்தை தெளிவுபடுத்திவிடுகிறேன்.வைரஸ்களோ, பாக்டீரியாக்களையோ அழித்தொழிப்பது என்பது இயலாத காரியம்.உலகத்தில் அழுக்கை எப்படி ஒரு இடத்தில் இருந்து மற்றோரிடத்திற்கு மாற்ற முடியுமோ அது போலவே கிருமிகளும் ,அவற்றை தள்ளி வைக்க முடியுமே தவிர அழிக்க முடியாது.எனெனில் இவைகளில் கெடுதல் செய்வதாக எண்ணப்படும் கிருமிகளை (கவனிக்கவும் எண்ணப்படும் கிருமிகளே) அழிக்க உபயோகப்படுத்தும் மருந்துகள் நமக்கு நன்மை செய்வதற்காக உடலில் உள்ளகிருமிகளையும் அழித்து ஒழிக்கின்றன்.இது உடலின் சம நிலையை அழிக்கிறது.
 
பயிர்களில் பூச்சிகளை அழிக்க உபயோகப்படுத்தும் மருந்துகள்,பயிர்களுக்கு நன்மை செய்வதற்காக உள்ள பூச்சிகளையும் ,கிருமிகளையும் அழித்து ,பூச்சிகளின் சமநிலையையும் கெடுத்து,பயிர்களையும் விஷமாக்கி கடைசியில் அதைச் சாப்பிடும் நம் உடலையும் நஞ்சாக்கி நம் உள்ளுறுப்புகளையும் கெடுத்து வருகின்றன.
 
இது தனியாக ஒரு பக்கம் இருக்கட்டும். உண்மையில் நம் நாட்டு மருத்துவமான சித்த மருத்துவமும் ,அயூர் வேத மருத்துவமும் ஒதுக்கி வைக்கப்பட்டு( அதற்கு மாற்று மருத்துவம் எனப் பெயரிடப்பட்டு) அயல்நாட்டு மருத்துவமான ஆங்கில முறை மருத்துவம் என்ற ஒரு குப்பை மருத்துவத்தை ஆங்கிலேயர்கள் விட்டுச் சென்றதாலேயே தலை சிறந்த மருத்துவம் என்று தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடும் நிலை இன்று.
 
ஆங்கில மருத்துவத்திற்கு என்று ஒரு கொள்கையோ வரைமுறையோ கிடையாது.எடுத்துக்காட்டாக கிருமி நீக்கம் என்ற பெயரில் எல்லா இடத்திலும் பெனாயில் போன்ற கிருமி நீக்கம் செய்யும் நச்சுக்களை எல்லா இடங்களிலும் தெளிக்கிறார்கள்.கிருமி நீக்கம் செய்ய கத்திகள்,ஊசிகள் போன்றவற்றை கொதிக்க வைக்கிறார்கள். ( இப்போது பெனாயில்(PHENOIL) போன்றவை சுற்றுச் சூழலைக் கெடுக்கும் என்று அதே மேற்கத்திய நாடுகளில் உபயோகிக்கப்படுவதில்லை)  
 
பின் ஏன் அந்த ஊசி போடும் போது அதன் மூலம் நோய் பரவுகிறது என்று ஒரு முறை பயன்படுத்தும் ( DISPOSABLE NEEDLES ) ஊசிகள் அறிமுகப்படுத்தப்படுகின்றன.அந்த ஊசிகளின் மூலம் போடப்படும் மருந்துகள் கேவலம் ஊசிகளின் மூலம் பரவும் கிருமிகளையே கட்டுப்படுத்தவோ கொல்லவோ முடியாதென்றால் அது எப்படி நமக்கு நல்லது செய்யும்.
 
கிருமி நீக்கம் என்ற பெயரில் ஒரு பக்கம் உடல்நலத்தையும் , சுற்றுச் சூழலையும் கெடுத்து வருவது ஒரு பக்கம் . மற்றொரு பக்கம் தடுப்பூசிகள் என்ற பெயரில் உடலில் கிருமிகளை ஊட்டி வருகின்றன.
 
முதலில் தடுப்பூசி தத்துவத்தை உங்களுக்கு விளக்குகிறேன்.உடலில் நோய் எதிர்ப்பு சக்தி என்பது உறங்கிக் கொண்டு இருக்கும் சக்தி.கிருமிகள் உடலின் உள்ளே நுழைய முயற்சி செய்யும் போதோ,உள்ளே நுழைந்த கிருமிகளை விரட்டவும் கொல்லவும் செய்யும் இந்தச் சக்தி உடல் நுண் எதிர்மங்களை(ANTI BODIES) உற்பத்தி செய்கின்றன.இந்த உடல் நுண் எதிர்மங்கள்(ANTI BODIES) உள்ளே நுழைந்த கிருமிகளை விரட்டவும் கொல்லவும் செய்யும்.
 
உடலின் காவல்காரர்களான இந்த உடல் நுண் எதிர்மங்களை (ANTI BODIES) நோய் வரக்கூடாது என்பதற்காக சும்மா தட்டி எழுப்பி வைக்கும் வேலையே தடுப்பூசிகள். அதற்காக வீரியம் குறைக்கப்பட்ட கிருமிகள் உடலில் ஏற்றப்படுகின்றன.போலியோ சொட்டு மருந்து அளிக்கப்பட்ட குழந்தைகளின் மலம்(STOOL), மூத்திரம்(URIN),எச்சில்(SALAIVAA) என்று அனைத்திலும் போலியோ கிருமிகள் மூன்றிலிருந்து நான்கு வாரங்கள் இருக்கும்.

நம் உடலே ஒரு பெரிய மருத்துவர்.அத்தனை அறிவுள்ள உடலுக்கு கேடு வரும்படி நாம் நடந்து கொள்ளும் போது உடல் தன் அதீத சக்தியை பிரயோகிக்கிறது.அதுவே இந்த உடல் நுண் எதிர்மங்களை (ANTI BODIES) உற்பத்தி செய்தல்.இதை சும்மா, சும்மா தட்டி எழுப்பி வைக்கும் வேலை

செய்தால் கடைசியில் ஒரு கட்டத்தில் உடல் தன் அதீத நடவடிக்கையான
உடல் நுண் எதிர்மங்களின் (ANTI BODIES) உற்பத்தியே நடக்காமல் போய்விடும்.

முதலில் 3 வயதுக்குட்பட்ட குழந்தைக்கு போலியோ சொட்டு மருந்தை கட்டாயம் கொடுக்க வேண்டும் என்றார்கள்.பின்னர் BOOSTER DOSE என இரண்டாவது முறையும் கொடுங்கள் என்றார்கள்.பிறகு மூன்று முறை மூன்றாண்டு கால இடைவெளியில் கொடுங்கள் என்றார்கள்.பிறகு நான்கு முறை என்றார்கள்.இப்போது ஐந்து முறையில் வந்து நிற்கிறது.நமக்குதான் இலவசமாகக் கிடைக்கும் எதையும் விடமாட்டோமே!

இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் இந்த தடுப்பு மருந்தை எடுத்துக் கொள்ளும் குழந்தைக்கு இந்தக் வீரியம் குறைக்கப்பட்ட கிருமிகளைக் கூட,எதிர்த்து உடல் நுண் எதிர்மங்களை (ANTI BODIES)  உண்டாக்குமளவிற்கு நோய் எதிர்ப்பு சக்தி இல்லை என்றால், எந்த வியாதியைத் தடுப்பதற்குப்பதற்காக இந்த மருந்து ஏற்றப்பட்டதோ, அந்த மருந்து அந்த வியாதியைத் தடுப்பதற்குப் பதில்,அதே வியாதியை உண்டாக்கிவிடும்.
 
இதை அந்த மருந்துத் தயாரிப்பு நிறுவனங்களே தங்கள் மருந்துக் குறிப்புகளில் இதை வெளியிட்டிருக்கின்றன. இது சாதாரணமாக உள்ள எந்த நபர்களுக்கும் தெரியாத ஒன்று.இன்னொரு முக்கிய விஷயம் இலவசமாகத் தரப்படும் எதுவும் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டங்களில் பாதுகாப்புத் தராது( அதாவது இலவசமாய்த் தரப்படும் மருந்து சேவையின் பாற்பட்டது ,அதனால் ஏற்படும் பாதிப்புகளை எந்த விதத்திலும் நஷ்ட ஈடோ, வேறு எந்த குறைபாட்டுக்கும்(ஏன் உயிர் போனாலும்) இலவச சேவையின் மூலம் சேவை செய்தவர் பொறுப்போ காரணம் ஆக மாட்டார்கள்( அது அரசு சேவையே ஆனாலும்)).

கீழே சில இணைப்புக்கள் கொடுத்துள்ளேன் பார்வையிடவும்.
http://naayakan.blogspot.com/2010/07/blog-post.html
http://www.yarl.com/forum3/index.php?showtopic=73504
http://www.vinavu.com/2009/09/24/vaccine-privatization/
http://healernews.blogspot.com/2010/05/blog-post_16.html

நமது நண்பர் ஒருவர் தடுப்பூசியின் தீமையை உணர்ந்து தடுப்பூசி போடாத போது அவருக்கு பிறப்புச் சான்றிதழ் கொடுக்க சிக்கல் இருப்பதாகக் கூற அவ்ர் தகவல் உரிமைச் சட்டத்தை நாடி கீழ்க் கண்ட விவரம் பெற்றுள்ளார்.   

Graphic1
சித்த வைத்தியத்தில்,மட்டுமல்ல ஆயுர்வேத வைத்தியத்திலும் காய்ச்சல் என்பது ஒரு வியாதியல்ல என்றே கூறுகின்றன.’ஆசன சீதம் ஜீவன் நாசம்’ என்று கூறுகிறது.அதாவது குதப் பகுதி குளிர்ந்தால் உயிர் போய்விடும்.காய்ச்சல் என்பது உயிராற்றலின் கிளர்ந்து எழுதலே!இதை எதிர் உயிரி ரசாயனங்களைக் கொண்டு (ANTI -BIOTIC ) இந்த உயிராற்றலின் கிளர்ந்து எழுதலை கொன்றுவிடுதலே ஆங்கில வைத்திய முறை.(ANTI -BIOTIC ) என்ற பெயரிலேயே உயிர் சக்திக்கு எதிரானது என்ற பொருள் இருக்கிறது.அது கிருமியின் உயிராக இருந்தாலும் சரி நம் உயிராக இருந்தாலும் சரி.இதுவே பின்னர் பெரு வியாதியாக விளைந்து ஆங்கில மருந்துகளால் கட்டுப் படுத்த முடியாதபடி கிளர்ந்து எழுந்து,  உயிராற்றலை எழுப்ப முயற்சி செய்து முடியாதபோது உயிரை முடித்துக் கொள்கிறது.( பால்வினை நோய்கள் AIDS ஆக மாறுவதும்,சாதாரண சளி ஆஸ்துமாவாக மாறுவதும் இப்படியே).
 
சூப்பர் பக்( SUPER BUG ) என்ற கிருமி இந்தியாவில் இருந்து போனதாகவும்.இந்தியா உள்ளிட்ட கிழக்காசிய நாடுகளில் இருந்து பன்றிக் காய்ச்சல்{( SWAIN FLUE )(H 1- N 1 VIRUS)}  ,பறவைக் காய்ச்சல்{( Avian Flu ) ,OR, ( BIRD FLU )}Fபரவியதாகவும் கூறும் மேலை நாட்டினருக்கு இந்த உண்மை தெரியாதா?
காய்ச்சலா? தலைவலியா? உடனே பாராசிட்டமால்( PARACETAMOL ) எடுங்கள்.போடுங்கள்,குழந்தைகளுக்கும்( PEDIATRIC DROPS  ) சொட்டு மருந்தாகவும், கொடுங்கள் என்று கூறுகிறார்களே! நாமும் நமது நண்பர் தலைவலி என்றவுடன் போடு ஒரு பாராசிட்டமால் என்கிறோமே.
 
 அது என்ன என்று எப்போதாவது யோசித்துப் பார்த்திருப்போமா?பாரா அசிட்டோ அமினோ பினைல் என்பதே பாராசிட்டமால். நம் வயிறு என்ன குப்பைத் தொட்டியா? பெரும்பாலான ஆங்கில முறை மருத்துகள் பெட்ரோலில் இருந்து எடுக்கப்படும் ( CRUDE  OIL PETROLEUM BI PRODUCTS ) உப பொருட்களே!அதிகமான எதிர் உயிரி ரசாயனங்களைக் கொண்டு (ANTI -BIOTIC )வைத்தியம் புரிதலே இந்த சூப்பர் பக்( SUPER BUG ) கிருமி பரவலுக்கு முக்கிய காரணம் என்று இப்போது புலம்பி என்ன பயன்!
 
கீழே கொடுத்திருக்கும் இணைப்புகளைப் பார்வையிடுங்கள்.புரியும்.அதன் கடைசி இணைப்பில் கொடுத்திருக்கும் விஷயத்தையே இணைப்பாக கொடுத்திருக்கிறேன்.பாராசிட்டமாலின் கொடுமை கண்ட பின்னும் உபயோகித்தால்.
 

ஆன்மீக முன்னேற்றத்திற்கு நாம் பின்பற்ற வேண்டிய உணவு விதிகள்!!!

 

நாம் உண்ணும் உணவும் நமது ஆன்மீக முன்னேற்றத்திற்கு அல்லது பின்னடவிற்குக் காரணமாக அமைந்துவிடுகிறது;

சமையல் செய்யும் போது கோபம்,வெறுப்பு,குரோதம்,மனவருத்தம் அடைந்தால் அந்த எண்ணங்கள் குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும்(கணவன்,குழந்தைகள்) உறுதியாகப் பிரதிபலிக்கும்;தினமும் கவனித்துப் பார்த்தால் உண்ணும் உணவே சமைத்தவரின் எண்ண ஓட்டங்களைத் தெரிவித்துவிடும்;

ஒவ்வொரு முறை உண்ணும் போதும்(காலை,மதியம்,இரவு) அந்த உணவில் அறுசுவையும் இருப்பது முழு ஆரோக்கியத்தைத் தரும்;

ஒவ்வொரு முறையும் உணவு உண்பதற்கு முன்பு பழங்களைச் சாப்பிட்டுப் பழகுவது நன்று;(உண்டபின்னர் பழங்கள் சாப்பிடுவது தவறு)

குக்கரில் சமைக்கும் சாதத்தைத் தவிர்ப்பது அவசியம்;சாதத்தை வடித்து,அந்த வடிநீரை அருந்துவது நமது உடலுக்கு அளவற்ற நோய் எதிர்ப்பு சக்தியைத் தரும்;மட்டை அரிசி,பாலீஷ் செய்யாத அரிசியை வீட்டுச் சமையலுக்கு வாங்கிப் பழகுங்கள்;பூரண ஆரோக்கியம் உறுதியாகும்;சாதாரண பாத்திரத்தில் சமைக்கப் பழகுவது அவசியம்;திறந்த பாத்திரத்தில் சமைத்துச் சாப்பிடுவதுதான் சிறப்பு;திறந்த நிலையில் பிரபஞ்சத்தின் அனைத்து சக்திகளும் அந்த உணவின் மீது தங்கள் ஆதிக்கத்தைச் செலுத்துகின்றன;இந்த சக்திகள் நமது கண்களுக்குப் புலப்படாது;

மிக்ஸியில் அரைக்கப்படும் சட்னியானது விரைவில் கெட்டுப்போய்விடுகிறது;சுவையும் அவ்வளவு சிறப்பாக இருப்பதில்லை;ஆனால், ஆட்டு உரலில் அல்லது அம்மிக்கல்லில் அரைத்த சட்னியின் சுவை அற்புதமாகவும் நமது உடல் நலத்தை தொடர்ந்து பராமரிக்கும் விதமாகவும் இருக்கும்;

மிக்ஸியில் சட்னி அரைக்கும் போது ஜாரினுள் தேங்காய்த் துண்டுகள்,பொரிகடலை,மிளகாய்,வெள்ளைப்பூண்டு,உப்பு போன்றவைகளை போட்டு மூடியை இறுக மூடிவிட்டு அரைக்கிறோம்;அப்போது அந்த மூடியினுள் இருக்கும் காற்றுடன் தேங்காய்த்துண்டுகள்,பொரிகடலை சிலநொடிகளில் அரைபட்டு திப்பி திப்பியாக நுரை நுரையாக வந்துவிடுகின்றன;

ஆனால்,அம்மிக்கல்லில் அரைக்கும்போது இரண்டு ராட்சத கற்கள் இவைகளை அரைக்கின்றன;திறந்தவெளியில் அரைக்கும் போது பிரபஞ்சத்தின் அத்தனை கதிர்களும் நமது கண்ணுக்குத் தெரியாமல் இத்துடன் கலந்துவிடுகின்றன;மேலும்,இதை அரைக்கும் நமது தாயின் பரிவு,பாசம்,விட்டுக்கொடுக்கும் தன்மை போன்ற எண்ணங்களும் ஊடுருவி நமது உணவாகிறது;ஆக,நாம் எங்கிருந்து வந்தோமோ, அந்த பிரபஞ்சத்தின் சத்துக்கள் சட்னியில் கலந்துவிடுகின்றன;

அனைத்துப் பருப்புகளையும் தோல் நீக்காமல் உண்ணப் பழகவேண்டும்;

புளிக்குப் பதிலாக எலுமிச்சையை பயன்படுத்தப் பழக வேண்டும்;

மிளகாய்க்குப் பதிலாக மிளகை உபயோகிக்கப் பழக வேண்டும்;

வெள்ளைச் சீனி நமது உடல் ஆரோக்கியக் கட்டமைப்பை மெதுவாகக் கொல்லும் ஸ்லோபாய்சன்;அதற்குப் பதிலாக கருப்பட்டி,பனைவெல்லம்,பனங்கல்கண்டு,வெல்லம்,நாட்டுச் சர்க்கரை போன்றவைகளை பயன்படுத்தப் பழக வேண்டும்;

எள் எண்ணையில் வாரம் ஒருமுறையாவது குளிக்க வேண்டும்;வேக வைத்த உணவுகளைச் சாப்பிட்டுப் பழக வேண்டும்;பொறித்த மேல்நாட்டு உணவுகள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால்,நோயை இலவசமாக வாங்குவதாக அர்த்தம்;

கொழுப்பு தரும் உணவுகளை அதிகம் சாப்பிடாமல் இருப்பது அவசியம்;

அதேபோல,பூமிக்குக் கீழே விளையும் கிழங்குகளை அதிகம் சாப்பிடாமல் இருக்க வேண்டும்;

ஒவ்வொரு நாளும்,ஒவ்வொரு முறையும் சாப்பிடத் துவங்கும் முன்பு பிரார்த்தனை செய்துவிட்டு சாப்பிட வேண்டும்;இந்த பிரார்த்தனை நேரம் வீடு எனில் ஒரு நிமிடம் வரையிலும்,வெளியிடங்கள் எனில் சில நொடிகள் வரை இருக்கலாம்;

தினமும் புதிய காய்கறிகளையும்,கீரைகளையும் சாப்பிடப்பழக வேண்டும்;

சாப்பிடும் போது ஒருபோதும் புத்தகம் படிக்கக் கூடாது;

சாப்பிடும் போது ஒரு போதும் டிவி பார்க்கக் கூடாது;

சாப்பிடும் போது ஒருபோதும் போனிலோ,நேரிலோ பேசவே கூடாது;

சாப்பிடுவதற்கு முப்பது நிமிடங்கள் முன்பும்,பின்பும் தண்ணீர் அருந்தக் கூடாது;

பசி இல்லாத போது ஒருபோதும் சாப்பிடக்கூடாது;அதேசமயம்,பசி உணர்வு வந்த கொஞ்ச நேரத்திலேயே சாப்பிடப் போய்விட வேண்டும்;அதிகநேரம் பசி உணர்வுடன் இருக்கக்கூடாது;பசிக்கும் போது ஒரு போதும் காபி,டீ,பால்,வடை,குளிர்பானங்கள் சாப்பிடவே கூடாது;

நாம் உண்ணும் உணவில் கசப்பு சேர்ப்பதை ஒதுக்கிவிட்டோம்;அதனால் தான் உடலானது நோய்வாய்ப்படுகிறது;

சைவ உணவில் தானிய உணவு,பருப்பு வகை உணவு,காய்கறிகள் மற்றும் கிழங்குகள், கீரை வகைகள் என்று நான்கு வகைகள் இருக்கின்றன;இவைகளை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் நமது ஆரோக்கியமும் ஆன்மீக முன்னேற்றமும் உறுதிப்படும்;

புடலங்காய்,தேங்காய்,பிஞ்சாக இருக்கும் வெண்டைக்காய்,முருங்கைக்காய்,பீட்ரூட்,காரட் கிழங்கு,சேமைக்கிழங்கு,சேனைக்கிழங்கு,முள்ளங்கி,வெள்ளைப்பூண்டு,தூதுவளை,   தண்டுக்கீரை,சிறுகீரை,கறிவேப்பிலை,பசலைக்கீரை,பொன்னாங்கண்ணிக்கீரை,    வெங்காயம் சேர்த்த மசால்வடை,திராட்சைப் பழம்,மாதுளம்பழம்,காசினிக்கீரை,ரோஜாப்பூ,பிஸ்தாப் பருப்பு,சாதிக்காய்,கோரைக்கிழங்கு,லவங்கப்பட்டை,கிச்சிலிக்கிழங்கு,ஏலக்காய், அகிற்கட்டை,வெள்ளாட்டுப்பால்,வாதுமைப்பருப்பு,சுரைவிதை,நெல்லிக்காய்,       நாரத்தம்பழம்,இஞ்சி,சந்திஅனம்,கஸ்தூரி,முத்து,புதினா இலை,மிளகு,நாவல்பழம்,குங்குமப்பூ மற்றும் சில உணவுப்பொருட்களே காலம் காலமாக நம்மையும்,நமது முன்னோர்களையும் ஆரோக்கியமாக வாழ வைத்து வருகின்றன;

உணவு உண்பதற்கான விதிகளை இங்கே தந்திருக்கிறோம்;இந்த விதிகளை முடிந்தவரையிலும் பின்பற்றுவதன் மூலமாக வளமான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ முடியும்;இந்த உணவு விதிகளைப் பின்பற்றுவதன் மூலமாக நமது ஆன்மீக முன்னேற்றம் ஒவ்வொரு நாளும் உறுதிப்படும்;

இயற்கை உரங்களால் விளைவிக்கப்பட்ட உணவுப்பொருட்கள் தமிழ்நாடு முழுவதும் கிடைக்கின்றன;இவைகளை ஆர்கானிக் ஃபுட்ஸ் என்ற பெயரில் ஒவ்வொரு சிற்றூரிலும் கூட விற்பனை ஆகின்றன;சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்பு வரை முடிவடைந்த 20,000 ஆண்டுகள் வரை இம்மாதிரியான உணவுகளையே நமது முன்னோர்கள் சாப்பிட்டுவந்துள்ளனர்;

டப்பாவில் அடைக்கப்பட்ட உணவுகள்,ரெடிமேட் உணவுகளை தவிர்க்கவும்;

ஆரோக்கியத்தை மேம்படுத்துவதாக விளம்பரங்களில் வரும் எந்த பொருளையும் வாங்க வேண்டாம்;அந்த விளம்பரங்கள் மிகைப்படுத்தப் பட்டவை;

சிப்ஸ்,நொறுக்குத் தீனிகள்,எண்ணெய்ப்பலகாரங்கள் போன்றவற்றை நாமும் ஒதுக்க வேண்டும்;நமது குழந்தைகள் இந்த மாதிரியான உணவுப்பொருட்களுக்கு அடிமையாகாமல் பார்த்துக் கொள்வது நமது கடமை;இவைகளுக்குப் பதிலாக ஆர்கானிக் பழங்கள்,கொட்டைகள்,பச்சைக்காய்கறிகளை உண்ணப் பழகவும்;குழந்தைகளுக்குப் பழக்கவும்;

இயந்திரங்களால் சமைக்கப்பட்ட உணவுகளை அறவே ஒதுக்கவும்;மனிதர்களால் சமைக்கப்படும் உணவில் இருக்கும் சுவையும் அக்கறையும் இயந்திரச் சமையலில் இராது;

அந்தந்தப் பருவகாலங்களில் விளைகின்ற பழங்கள்,காய்கறிகள்,கீரைகளை உண்ணவும்;கோடையின் வெப்பத்தைத் தணிக்க டிவி விளம்பரங்களில் வரும் குளிர்பானங்களை அருந்த வேண்டாம்;மோர்,தர்ப்பூசணி,இளநீர்,செவ்விளநீர்,குல்கந்து(ரோஜாத் தேனூறல்),திராட்சைப்பழம்,திராட்சைப் பழச் சாறு,காரட்,காரட் சாறு போன்றவைகளே நமது உடலுக்கு குளிர்ச்சியைத் தருபவை;

ஆட்டுக்கறி,மாட்டுக்கறி போன்றவைகள் சாப்பிடுவதை நிரந்தரமாகக் கைவிடவும்;இவைகளை கடையில் வாங்கிச் சாப்பிடுவதையும் கைவிடவும்;ஏனெனில்,இவைகளில் சேர்க்கப்படும் செயற்கைச் சுவையூட்டிகள் நமது உடலுக்குள் செல்லும் போது நோய்களை உருவாக்கக் காரணியாக அமைந்துவிடுகிறது;

உப்பு,சர்க்கரை,காரம் கலந்த உணவுகளை அளவோடு சாப்பிடப் பழகவும்;

மருத்துவருக்கு கொடுப்பதை விட வாணிகனுக்குக் கொடு என்ற பழமொழியின் உள்கருத்து என்னவெனில்,ஆரோக்கியமான உணவுப் பொருட்களைத் தேர்ந்தெடுத்து சாப்பிட்டால் நோய்கள் வராது என்பதே !!!

ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ

 

Copy from:

AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்-http://www.aanmigakkadal.com/

சித்தர்கள் வகுத்த ஆயகலைகளுள் வர்மக்கலையும் ஒன்று.

சித்தர்கள் வகுத்த ஆயகலைகளுள் வர்மக்கலையும் ஒன்று. வர்மம் என்றால் உயிர் நிலைகளின் ஓட்டம் என்று பொருள். வர்மக்கலை என்பது சித்த மருத்துவ அறிவியலை முழுமையாகக்கொண்ட ஒரு மருத்துவ முறையாகும். சித்த மருத்துவத்தில் விளக்கப்படாத, சித்தர்களால் மிக மறைவாக வைக்கப்பட்டுள்ள பல விடயங்களுக்கு வர்ம மருத்துவத்தில் விளக்கம் பெற இயலும். பல சித்த மருத்துவ இரகசியங்கள் மிகத் தெளிவாக விளக்கப்பட்டுள்ள

ன. சித்த அறிவியலை முழுமையாகப் புரிந்துகொள்ள வர்மக்கலை அறிவு அவசியம். எனவே, வர்மக்கலை தெரிந்தவர்கள் மட்டுமே முழுமையான சித்த மருத்துவர்களாக ஆகமுடியும். ஆசான் அகத்தியர் உடம்பிலுள்ள வர்மங்களை பற்றிக் கூறி இருக்கிறார்.

* தலைப்பகுதி வர்மங்கள் = 37
* நெஞ்சுப் பகுதி வர்மங்கள் = 13
* உடலின் முன் பகுதி வர்மங்கள் = 15
* முதுகுப் பகுதி வர்மங்கள் = 18
* கைப்பகுதி வர்மங்கள் = 17
* கால் பகுதி வர்மங்கள் = 32

இன்றைய சூழலில் வர்மக்கலை எப்படி வாழ்வில் பயன்படும்?

* மிகமிகக் குறைந்த செலவில் எலும்பு முறிவு மருத்துவம் செய்ய வர்ம மருத்துவம் துணை செய்கிறது. முறையாக ஆய்வு செய்யப்பட்டால் ஏழை மக்களுக்கு பெரும் பயனளிக்கும் மிகச்சிறந்த மருத்துவமாகஇது திகழும்.

* எலும்பு முறிவினால் பாதிக்கப்பட்டு வரும் பின்விளைவுகள், உறுப்புகள் செயல்பாடின்மை, மேலும் அறுவை சிகிச்சை செய்தும் பயனளிக்காது என்று கைவிடப்பட்ட பல நோய்களை வர்ம மருத்துவத்தால் தீர்க்க முடியும். நோய்களால் ஏற்படும் பல எலும்புமுறிவுகளையும் (Pathological Fracture) சரிசெய்ய முடியும்.

* வர்ம மருத்துவத்தில் நரம்பு நோய்களுக்கான மருத்துவம் முழுமையாக ஆய்வு செய்யப்பட்டு, அனுபவரீதியாகப் பயன்படுத்தப்பட்டும் வருகிறது.

* வர்ம மருத்துவ அடிப்படையிலான தடவுமுறைகள், பூச்சு முறைகள், ஒத்தட முறைகள், வேது பிடித்தல், கட்டு போடுதல் போன்றவை மருந்தில்லா மருத்துவமாகப் பயன்படுத்தப்பட்டுவருவது இதன் சிறப்பம்சமாகும்.

* குழந்தைகள், முதியவர்கள், கர்ப்பிணிகள் போன்றோரை எவ்வாறு தடவ வேண்டும், எந்தெந்த இடங்களைத் தூண்டவேண்டும் என்பன போன்ற தௌ¤வான விள௧கங்கள் இம்மருத்துவத்தில் கூறப்பட்டுள்ளன. இதன் தடவுமுறையால் ஏராளமான ஆற்றலை உடலில் உருவாக்க முடியும் என்பதை எங்களின் அனுபவரீதியிலாகக் கண்டறிந்துள்ளோம்.

* விக்கல், வாந்தி, சன்னி, மயக்கம், நாக்கு புறந்தள்ளல், நாக்கு உள்ளே இழுக்கப்படுதல், பைத்தியம்போல் பேசுதல் போன்ற பல்வேறு வர்ம விளைவுகளை அவற்றின் அடங்கல்களை தூண்டுவதன் மூலம் கண்ணிமைக்கும் நேரத்தில் தீர்க்க இம்மருத்துவ முறையால் முடியும். பார்ப்போருக்கு இது ஏதோ கண்கட்டு வித்தை போலத் தோன்றும்.

நமது உடலில் நடுப்பகுதியில் ஏழு ஆதாரங்களான (சக்கரங்கள்) சக்தி நிலைகள் உடலில் உள்ளன.

இதையே விநாயகர் அகவலில்

“ஆறாதாரத்து அங்கிசை நிலையும்
பேரா நிறுத்தி பேச்சுரை யறுத்து
இடை பிங்கலையின் எழுத்தறிவித்து
கடையிற் சுழிமுனைக் கபாலம் காட்டி
மூன்று மண்டலத்தின் முட்டிய தூணின்
நான்றுஎழு பாம்பின் நாவில் உணர்த்தி
குண்டலியதனில் கூடிய அசபை
விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து
மூலாதாரத்து மூண்டெழு கனலைக்
காலால் எழுப்பும் கருத்து அறிவித்தே”

நமது முதுகுத்தண்டு (தூண்) வடத்தின் உள்ளே இடகலை, பிங்கலை, சுழிமுனை( மூன்று மண்டலம்)ஆகிய நாடிகள் ஓடுகின்றன்.(இதுவே மூன்று மண்டலத்து முட்டிய தூணின்). நமது மூச்சு ஒரு நிமிடத்திற்கு 15 மூச்சு வீதம் 1மணி நேரத்திற்கு 900 மூச்சு வீதம் ஒரு நாளைக்கு 21,600 மூச்சுக்கள் ஓடுகின்றன. அந்த 21,600 மூச்சுக்களில் துரியம், ஆக்கினை, விசுத்திச் சக்கரங்கள் முறையே 6000 மூச்சுக்கள் வீதம் 18,000 எடுத்துக் கொள்கின்றன. அடுத்துள்ள அனாகதம், மணிப்பூரகம், சுவாதிட்டானம் இம் மூன்று சக்கரங்களும் 1000 வீதம் 3000 மூச்சுக்களை எடுத்துக் கொள்கின்றன.மீதம் உள்ள 600 மூச்சுக்களை மூலாதாரம் எடுத்துக் கொள்கின்றது. இவ்வாறு மூச்சை எடுத்துக் கொள்வதன் மூலம் இயங்கும் சக்கரங்கள், இவை இயங்கும் அந்தந்தப் பகுதிகளை பார்த்துக் கொள்வதுடன், அந்த இடத்தின் உள் உறுப்புக்களையும் பார்த்துக் கொள்கின்றன. இவையே நம் உயிர் இயங்கத் தேவையான சக்தியினை மூச்சின் மூலம் பெற்று உடலெங்கும் 72000 நாடி நரம்புகளின் வாயிலாக பாய்ந்து உடலை இயக்குகின்றன. இதில் நம் உடலின் 96 தத்துவங்கள் உள்ளன.அவற்றிற்கு ஒரு வர்மம் வீதம் 96 தொடுவர்மங்கள் உள்ளன.12வர்மங்கள் படுவர்மங்கள் உள்ளன. படுவர்மம் என்றால் உயிர் பட்டுப்(செத்துப்) போகச் செய்யும் வர்மங்கள் என்று பொருள்.

இவை தமிழ்ச்சித்த மருத்துவத்தின் “அக்கு பஞ்சர்” போன்ற சிகிச்சைப் புள்ளிகள் ஆகும். ஆசான் அகத்தீசர் குறிப்பிடும் உடலின் முக்கிய வர்மப்புள்ளிகளின் விரிவாக்கம்.

தலைப்பகுதி வர்மங்கள் (37)
1.திலர்த வர்மம்
2.கண்ணாடி கால வர்மம்
3.மூர்த்தி கால வர்மம்
4.அந்தம் வர்மம்
5.தும்மிக் கால வர்மம்
6.பின் சுவாதி வர்மம்
7.கும்பிடு கால வர்மம்
8.நட்சத்திர வர்மம்
9.பால வர்மம்
10.மேல் கரடி வர்மம்
11.முன் சுவாதி வர்மம்
12.நெம வர்மம்
13.மந்திர கால வர்மம்
14.பின் வட்டிக் கால வர்மம்
15.காம்பூதி கால வர்மம்
16.உள்நாக்கு கால வர்மம்
17.ஓட்டு வர்மம்
18.சென்னி வர்மம்
19.பொய்கைக் கால வர்மம்
20.அலவாடி வர்மம்
21.மூக்கடைக்கி கால வர்மம்
22.கும்பேரிக் கால வர்மம்
23.நாசிக் கால வர்மம்
24.வெட்டு வர்மம்
25.அண்ணாங்கு கால வர்மம்
26.உறக்க கால வர்மம்
27.கொக்கி வர்மம்
28.சங்குதிரி கால வர்மம்
29.செவிக்குத்தி கால வர்மம்
30.கொம்பு வர்மம்
31.சுமைக்கால வர்மம்
32.தலைப்பாகை வர்மம்
33.பூட்டெல்லு வர்மம்
34.மூர்த்தி அடக்க வர்மம்
35.பிடரி கால வர்மம்
36.பொச்சை வர்மம்
37.சரிதி வர்மம்

நெஞ்சுப் பகுதி வர்மங்கள் (13)
1.தள்ளல் நடுக்குழி வர்மம்
2.திவளைக் கால வர்மம்
3.கைபுச மூன்றாவது வரி வர்மம்
4.சுழி ஆடி வர்மம்
5.அடப்பக்கால வர்மம்
6.முண்டெல்லு வர்மம்
7.பெரிய அத்தி சுருக்கி வர்மம்
8.சிறிய அத்தி சுருக்கி வர்மம்
9.ஆனந்த வாசு கால வர்மம்
10.கதிர் வர்மம்
11.கதிர் காம வர்மம்
12.கூம்பு வர்மம்
13.அனுமார் வர்மம்

உடலின் முன் பகுதி வர்மங்கள் (15)
1.உதிர்க் கால வர்மம்
2.பள்ளை வர்மம்
3.மூத்திர கால வர்மம்
4.குத்து வர்மம்
5.நேர் வர்மம்
6.உறுமி கால வர்மம்
7.ஆமென்ற வர்மம்
8.தண்டு வர்மம்
9.இலிங்க வர்மம்
10.ஆண்ட கால வர்மம்
11.தாலிக வர்மம்
12.கல்லடைக் கால வர்மம்
13.காக்கடை கால வர்மம்
14.புச வர்மம்
15.விதனுமான் வர்மம்

முதுகுப் பகுதி வர்மங்கள் (18)
1.மேல் சுருக்கி வர்மம்
2.கைக்குழி காந்தாரி வர்மம்
3.மேல்க்கைப் பூட்டு வர்மம்
4.கைச் சிப்பு எலும்பு வர்மம்
5.பூணூல் கால வர்மம்
6.வெல்லுறுமி தல்லறுமி வர்மம்
7.கச்சை வர்மம்
8.கூச்ச பிரம்ம வர்மம்
9.சங்கு திரி கால வர்மம்
10.வலம்புரி இடம்புரி வர்மம்
11.மேல் சுருக்கு வர்மம்
12.மேலாக கால வர்மம்
13.கீழாக கால வர்மம்
14.தட்டேல்லு வர்மம்
15.மேலஅண்ட வர்மம்
16.நாயிருப்பு வர்மம்
17.கீழ் அண்ட வர்மம்
18.குத்திக் கால வர்மம்

கைப்பகுதி வர்மங்கள் (17)
1.வலம்புரி இடம்புரி வர்மம்
2.தல்லை அடக்க வர்மம்
3.துதிக்கை வர்மம்
4.தட்சணக் கால வர்மம்
5.சுழுக்கு வர்மம்
6.மூட்டு வர்மம்
7.மொளியின் வர்மம்
8.கைக்குசத்திட வர்மம்
9.உள்ளங்கை வெள்ளை வர்மம்
10.தொங்கு சதை வர்மம்
11.மணி பந்த வர்மம்
12.திண்டோதரி வர்மம்
13.நடுக்கவளி வர்மம்
14.சுண்டு விரல் கவளி வர்மம்
15.மேல் மணிக்கட்டு வர்மம்
16.விட மணி பந்த வர்மம்
17.கவளி வர்மம்

கால் பகுதி வர்மங்கள் (32)
1.முதிர கால வர்மம்
2.பத்தக்களை வர்மம்
3.ஆமைக்கால வர்மம்
4.பக்க வர்மம்
5.குழச்சி முடிச்சி வர்மம்
6.சிறுவிரல் கவளி வர்மம்
7.சிரட்டை வர்மம்
8.கால் மூட்டு வர்மம்
9.காலக் கண்ணு வர்மம்
10.நாய்த் தலை வர்மம்
11.குதிரை முக வர்மம்
12.கும்பேறி வர்மம்
13.கண்ணு வர்மம்
14.கோணச்சன்னி வர்மம்
15.கால வர்மம்
16.தட வர்மம்
17.கண் புகழ் வர்மம்
18.அனகால வர்மம்
19.பூமிக் கால வர்மம்
20.இடுப்பு வர்மம்
21.கிழிமேக வர்மம்
22.இழிப் பிழை வர்மம்
23.அணி வர்மம்
24.கோச்சு வர்மம்
25.முடக்கு வர்மம்
26.குளிர்ச்சை வர்மம்
27.குசத்திட வர்மம்
28.உப்புக் குத்தி வர்மம்
29.பாதச் சக்கர வர்மம்
30.கீழ் சுழி வர்மம்
31.பதக்கல வர்மம்
32.முண்டக வர்மம்

சித்தர்களின் கொள்கை..!

 

இறைவன்/பரமாத்மா எங்கும் தனியாக இல்லை. நமது உடம்பு தான் பரமாத்மாவின் இடம். ஆதலால் கடவுளைத்தேடி எங்கும் அலைய வேண்டாம். உடம்பைப் பேணுவதே கடவுட்பணி, உடம்பினுள்ளேயே பரமாத்மாவைக் கண்டு மகிழ்ந்திரு என்பது சித்தர் கொள்கை. உன்னுள்ளும் இருப்பான் என்னுள்ளும் இருப்பான். உருவம் இல்லா உண்மை அவன். இதை உணர்ந்தார் இங்கே உலவுவதில்லை. தானும் அடைவார் அந்நிலை தன்னை.

‘உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்’ என்பதில், உடம்பு ஆலயம். உள்ளம் கர்பக் கிரகம். ‘வள்ளல் பிரானார்க்கு வாய் கோபுர வாசல்’- உடம்பாகிய ஆலயத்துக்கு வாய் தான் வாசல். உள்ளம் ஆகிய கருவறையில் சீவனாகிய சிவலிங்கம் இருக்கிறதாம். ‘கள்ளப் புலனைந்தும் காள மணி விளக்கே’- ஐந்து புலன்களும் இறைவனுக்கு ஏற்றி வைத்த விளக்குகளாம்.

பூசை செய்தற்கு அவர்களது இருதயமே அவ்விலிங்கம் எழுந்தருளியிருக்கும் கருவறையாயும், ஊனால் அமைந்த உடம்பே அக்கருவறை உள்ளடக்கிச் சூழ்ந்துள்ள திருச்சுற்றுக்களாயும், வாயே அவ்விலிங்கத்தின் நேர் நோக்கு வாயிலாயும், உயிரே இலிங்கமாயும், கண் முதலிய ஐம்பொறி உணர்வுகளே ஒளிமிக்க இரத்தின தீபங்களாயும் அமையும்

உன்னை விட்டு விலகினால் கடவுளை காணலாம்!

ஒரு மனிதனுக்கு கடவுளைக் காண வேண்டும் என்று ஆசை அவரை எப்படி சந்திப்பது ? கோவிலுக்குப் போ ! என்றார்கள். உடனே புறப்பட்டான். போகும் வழியில் ஒரு ஞானியை சந்தித்தான். அவர் கேட்டார். எங்கே போகிறாய் ? கடவுளைக் காண போகிறேன் ! எங்கே ? கோவிலில் ! அங்கே போய்… ? அவரை வழிபடப் போகிறேன் ! அவரை உனக்கு ஏற்கனவே தெரியுமா ? தெரியாது ! எந்த வகையிலும் நீ கடவுளை அறிந்திருக்கவில்லை. அப்படி இருக்கும்போது எப்படி நீ அவரை வழிபட முடியும் ? அப்படியென்றால் … ? உன்னுடைய வழிபாடு வெறும் சடங்காகத்தான் இருக்க முடியும் ! மனிதன் குழம்பிப் போனான். ஞானி தெளிவுபடுத்தினார். ஏ, மனிதனே… நீ செய்யப் போவது உண்மையான வழிபாடு அல்ல. இன்றைக்கு மனிதர்கள் வழிபாடு என்கிற பெயரில் ஆண்டவனிடம் தங்கள் ஆசைகளைத் தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள். தங்களது கோரிக்கைகளைக் குரல் மூலம் பட்டியலிட்டுச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். தங்களது புகார்களை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அவ்வளவுதான். நான் கடவுளிடம் அன்பு செலுத்த விரும்புகிறேன். நீ அறியாத கடவுளிடம் எப்படி அன்பு செலுத்த முடியும் ? அப்படியானால்… ஆண்டவனை சந்திக்க என்னதான் வழி ? அவரை நீ சந்திக்க முடியாது. உணர முடியும் ! அதற்கு வழி ?

தியானம். தியானத்துக்கும் கடவுளுக்கும் சம்பந்தம் உண்டா ? இல்லை ! மனிதன் வியப்போடு நிமிர்ந்தான். அவர் சொன்னார் : தியானம் உன் மனத்தோடு சம்பந்தப்பட்டது. அது உனக்குள் ஓர் ஆழ்ந்த மௌனத்தை உண்டு பண்ணும், அப்படிப்பட்ட ஒரு மௌன நிலையில், கடவுள் இருப்பதை நீ உணரத் தொடங்குவாய். உண்மையான தியானத்தின் பின்விளைவே வழிபடுதல் ஆகும். தியானம் செய்பவன் மட்டுமே கடவுளை உணர முடியும். அந்த மனிதனும் ஞானியும் இப்படிப் பேசிக் கொண்டிருக்கும் போதே, வெளிநாட்டுக்காரர் ஒருவர் அங்கே வந்தார். ஞானியின் முன்னால் வந்து பணிபோடு நின்றார். தன்னுடைய தேவையைச் சொன்னார். நான் விரும்புவது அமைதி ஞானி சொன்னார். முதல் இரண்டு வார்த்தைகளை விட்டு விலகு. மூன்றாவது வார்த்தையை நெருங்கலாம் எனக் கூற வந்தவர் யோசித்தார். நான் என்கிற அகங்காரத்தை விலக்குங்கள். நான், என்னுடையது என்கிற ஆசைகளை விலக்குங்கள். அமைதி என்கிற இறைநிலையை நீங்கள் நெருங்கிவிடுவீர்கள். வெளிநாட்டுக்காரருக்கு விளக்கம் கிடைத்தது. மனநிறைவோடு திரும்பிச் சென்றார். கொஞ்ச அந்த அளவுக்கு வேறே யாருக்கும் கிடைச்சிருக்காது!

ஸ்பெஷல் தரிசனம் ! 50 ரூபாய் டிக்கெட் ! சுவாமிக்கு நெருக்கமா போய் சந்நிதியிலே கொஞ்சநேரம் உட்கார முடிஞ்சிது ! அவன் முகத்திலே கடவுளை நெருங்கிவிட்ட பெருமிதம் ! ஞானி கேட்டார் : அப்படின்னா உனக்கும் கடவுளுக்கும் எவ்வளவு தூரம் ? ஒரு பத்தடி தூரம் இருக்கும் அவ்வளவுதான் ! உன் அளவுக்கு வேற யாரும் நெருங்கலையா ? இல்லை ! அந்த வகையில் பார்த்தால் உன்னைவிட கடவுளுக்கு நெருக்கமானவர் வேறொருவர் உண்டு ! யார் அவர் ? அங்கே இருக்கிற அர்ச்சகர் ! வந்தவன் முகத்தில் ஒரு சிறு ஏமாற்றம். சரி சுவாமி, நான் வர்றேன் ! சோர்வோடு நடந்து போனான். அதன் பிறகும் விவாதம் தொடர்ந்தது. இறுதியில் மனிதன் எழுந்தான். திரும்பி நடந்தான். ஞானி கேட்டார். எங்கே போகிறாய் ? வீட்டுக்கு ! கோவிலுக்குப் போகவில்லையா ? இல்லை ! அங்கே போக வேண்டும் என்றுதானே புறப்பட்டு வந்தாய் ? ஆண்டவனை உணர்ந்தபிறகுதான் அவரை வழிபட முடியும் என்பதைப் புரிந்து கொண்டேன். நான், என்னிடம் இருந்து விலகினால் இறைவனை நெருங்கலாம் என்கிற உண்மையை தெரிந்து கொண்டேன். ஞானி கைகளை உயர்த்தினார். ஆன்மிகம் என்பது நெருங்குவது அல்ல, விலகுவது ! எவ்வளவு தூரம் நம்மிடமிருந்து விலகியிருக்கிறீர்களோ, அவ்வளவு தூரம் கடவுளை நெருங்கியிருக்கிறீர்கள் என்பது பொருள் !

நட்சத்திரங்கள் காயத்திரி மந்திரங்கள்

அசுவினி

ஓம் ஸ்வேத வர்ண்யை வித்மஹே
சுதாகராயை தீமஹி
தன்னோ அச்வநௌ ப்ரசோதயாத்

பரணி

ஓம் க்ருஷ்ணவர்னாயை வித்மஹே
தண்டதராயை தீமஹி
தன்னோ பரணி ப்ரசோதயாத்

கிருத்திகை

ஓம் வன்னிதேஹாயை வித்மஹே
மஹாதபாயை தீமஹி
தன்னோ க்ருத்திகா ப்ரசோதயாத்

ரோகிணி

ஓம் ப்ராஜாவிருத்யைச வித்மஹே
விச்வரூபாயை தீமஹி
தன்னோ ரோஹினி ப்ரசோதயாத்

மிருகசீரிடம்

ஓம் சசிசேகராய வித்மஹே
மஹாராஜாய தீமஹி
தன்னோ ம்ருகசீர்ஷா ப்ரசோதயாத்

திருவாதிரை

ஓம் மஹா ச்ரேஷ்டாய வித்மஹே
பசும்தநாய தீமஹி
தன்னோ ஆர்த்ரா ப்ரசோதயாத்

புனர்பூசம்

ஓம் ப்ரஜாவ்ருத்யைச வித்மஹே
அதிதிபுத்ராய த தீமஹி
தன்னோ புனர்வஸு ப்ரசோதயாத்

பூசம்

ஓம் ப்ரம்ம்வர்ச்சஸாய வித்மஹே
மஹா திஷ்யாய தீமஹி
தன்னோ புஷ்ய ப்ரசோதயாத்

ஆயில்யம்

ஓம் ஸர்பராஜாய வித்மஹே
மஹா ரோசனாய தீமஹி
தன்னோ ஆச்லேஷ ப்ரசோதயாத்

மகம்

ஓம் மஹா அனகாய வித்மஹே
பித்ரியா தேவாய தீமஹி
தன்னோ மகஃப்ரசோதயாத்

பூரம்

ஓம் அரியம்நாய வித்மஹே
பசுதேஹாய தீமஹி
தன்னோ பூர்வபால்குநீ ப்ரசோதயாத்

உத்தரம்

ஓம் மஹாபகாயை வித்மஹே
மஹாச்ரேஷ்டாயை தீமஹி
தன்னோ உத்ரபால்குநீ ப்ரசோதயாத்

அஸ்தம்

ஓம் ப்ரயச்சதாயை வித்மஹே
ப்ரக்ருப்ணீதாயை தீமஹி
தன்னோ ஹஸ்தா ப்ரசோதயாத்

சித்திரை

ஓம் மஹா த்வஷ்டாயை வித்மஹே
ப்ரஜாரூபாயை தீமஹி
தன்னோ சைத்ரா ப்ரசோதயாத்

சுவாதி

ஓம் காமசாராயை வித்மஹே
மகாநிஷ்டாயை தீமஹி
தன்னோ சுவாதி ப்ரசோதயாத்

விசாகம்

ஓம் இந்த்ராக்நௌச வித்மஹே
மஹாச்ரேஷ்ட்யைச தீமஹி
தன்னோ விசாகா ப்ரசோதயாத்

அனுஷம்

ஓம் மித்ரதேயாயை வித்மஹே
மஹா மித்ராய தீமஹி
தன்னோ அனுராதா ப்ரசோதயாத்

கேட்டை

ஓம் ஜயேஷ்டாயை வித்மஹே
மகா ஜய்ஷ்ட்யாயை தீமஹி
தன்னோ ஜ்யேஷ்டா ப்ரசோதயாத்

மூலம்

ஓம் ப்ராஜாதிபாயை வித்மஹே
மஹப்ராஜையை தீமஹி
தன்னோ மூலாப் ப்ரசோதயாத்

பூராடம்

ஓம் சமுத்ரகாமாயை வித்மஹே
மஹாபிஜிதாயை தீமஹி
தன்னோ பூர்வாஷாடா ப்ரசோதயாத்

உத்திராடம்

ஓம் விஸ்வேதேவாய வித்மஹே
மஹா ஷாடாய தீமஹி
தன்னோ உத்ராஷாடா ப்ரசோதயாத்

திருவோணம்

ஓம் மஹா ச்ரோணாய வித்மஹே
புண்யஸ்லோகாய தீமஹி
தன்னோ ச்ரோணா ப்ரசோதயாத்

அவிட்டம்

ஓம் அக்ர நாதாய வித்மஹே
வசூபரீதாய தீமஹி
தன்னோ சரவிஹ்டா ப்ரசோதயாத்

சதயம்

ஓம் பேஷஜயா வித்மஹே
வருண தேஹா தீமஹி
தன்னோ சதபிஷக் ப்ரசோதயாத்

பூரட்டாதி

ஓம் தேஜஸ்கராய வித்மஹே
அஜஏகபாதாய தீமஹி
தன்னோ பூர்வப்ரோஷ்டபத ப்ரசோதயாத்

உத்திரட்டாதி

ஓம் அஹிர் புத்ந்யாய வித்மஹே
ப்ரதிஷ்டாபநாய தீமஹி
தன்னோ உத்ரப்ப்ரோஷ்டபத ப்ரசோதயாத்

ரேவதி

ஓம் விச்வரூபாய வித்மஹே
பூஷ்ண தேஹாய தீமஹி
தன்னோ ரைய்வதி ப்ரசோதயாத்

 

 

ஹேர் டை வேண்டாமே அலட்சியம்!

 சமீபத்தில் ஒரு தோழியின் வீட்டுக்குச் சென்றிருந்தபோது, சாப்பிட்டவுடன், அவர் கலர்கலரான மாத்திரைகளை விழுங்கிக் கொண்டிருந்தார்.  ‘இத்தனை மாத்திரைகள் எதற்கு?’ என்றதும், அவர் தந்த பதில் நம்மைத் திடுக்கிட வைத்தது. ‘லேசா முடி நரைச்சிருக்கேனு, ‘டை’ யூஸ் பண்ணினேன். நல்ல பிராண்ட் தான். ஆனா, தொடர்ந்து யூஸ் பண்ணப் பண்ண, தலைக்குள்ள லேசா ஊறல் எடுத்துச்சு… அப்புறம் தலை முழுக்க பயங்கரமான அரிப்பு. பயந்துபோய், தோல் டாக்டர்கிட்ட போனப்ப, அவர், உடனே ‘ஹேர் டை’ போடறதை நிறுத்தச் சொன்னார். ‘டை’யில் இருக்கிற ரசாயனம் ஏற்படுத்திய பக்க விளைவுதான் காரணமாம்!’ என்றார் பரிதாபமாக.

‘நடுத்தர வயதை நெருங்கும் பெரும்பாலானவர்கள் கண்ணாடி முன் நிற்கும்போதெல்லாம் அனிச்சையாக முடி நரைத்திருக்கிறதா, சருமத்தில் சுருக்கம் தெரிகிறதா எனப் பார்க்கத் தொடங்கிவிடுவார்கள். நரைத்த முடி, முதிய தோற்றத்தைத் தருமோ என்று அதனைக் கறுப்பாக்கும் முயற்சியில் ஈடுபடத் தொடங்கிவிடுவர். அதை, இயற்கை வழியிலேயே செய்துகொள்வதன் மூலம் பக்கவிளைவுகளையும் பின்விளைவுகளையும் தடுக்கலாம்’ என்கின்றனர் சென்னை அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரியின் முதல்வர் டாக்டர் மணவாளன் மற்றும் உதவி விரிவுரையாளர் டாக்டர் கனிமொழி. செயற்கைச் சாயங்களால் ஏற்படும் விளைவுகள் மற்றும் இயற்கைச் சாய முறைகள் பற்றி விரிவாக விளக்குகின்றனர்.

‘ ‘மெலனின்’ என்ற நிறமிதான் முடியின் கருமை நிறத்துக்குக் காரணம். 40 வயதுக்கு மேல், இந்த நிறமிகளை ‘டிரையோஸின்’ என்ற என்ஸைம் கட்டுப்படுத்தித் தடைசெய்கிறது. இதனால் முடி நரைக்கிறது. சிலருக்கு இளமையிலே நரைப்பதற்குக் காரணம், தவறான உணவுப்பழக்கமும் மன அழுத்தமும்தான். கண்டதைச் சாப்பிடுவது, சுற்றுச்சூழல் மாசுக்களால் தலையில் படியும் தூசி, தலையில் எண்ணெயே வைக்காததால் ஏற்படும் வறட்சி போன்றவையும் இளநரைக்குக் காரணம். அதிக வெயிலில் வெளியில் அலைந்தால், புற ஊதாக் கதிர்கள், முடியின் ஈரத்தன்மையை உறிஞ்சி, முடியை வறண்டுபோகச்செய்யும். இதனாலும் முடி நரைக்கலாம். மேலும், தலைக்கு உபயோகிக்கும் ஷாம்பூ, கண்டீஷனர் போன்ற பொருட்களில் கலக்கப்படும் ரசாயனப் பொருட்களும் நரை ஏற்படக் காரணம்.

ஹேர் டையில் உள்ள வேதிப்பொருட்கள் – பக்க விளைவுகள்

செயற்கைச் சாயங்களில் உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் பல வேதிப்பொருட்கள் உள்ளன. முக்கியமாக, அம்மோனியா, சோடியம் பைகார்பனேட், லெட் அசிட்டேட், ஹைட்ரஜன் பெராக்ஸைடு இவற்றுடன், ‘டைஅமினோட்டோலீன்’ மற்றும் ‘டைஅமினோபென்ஸின்’ என்ற இரண்டு ஆக்சிடன்ட்ஸ் உள்ளன. இதில் இருக்கும் புற்றுநோயை உண்டாக்கக்கூடிய ‘கார்சினோஜென்’ என்ற பொருளால் பாதிப்பு அதிகம். தொடர்ந்து ரசாயனம் கலந்த ஹேர்டையைப் பயன்படுத்தும்போது கூந்தல் வறண்டு போய், முடி உடைதல், உதிர்தல், பொடுகு, இளநரை ஏற்படும். வழுக்கை விழவும் வாய்ப்புகள் அதிகம். சருமத்தில் நெற்றி, முகம் ஆகியவை சிவந்துபோதல், அரிப்பு ஆகியவை ஏற்படும்.  மேலும் கண் எரிச்சல், கண் பார்வை மங்குதல், சருமத்தில் புற்றுநோய், ஹைப்பர் சென்சிட்விட்டி போன்ற நோய்கள் வருவதற்கும் வாய்ப்புகள் அதிகம்.    

இயற்கை ஹேர் டை

அவுரித் தூளைக் குழைத்து, சிறு வில்லைகளாகத் தட்டிக் காயவைத்து, நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயில் போட்டு, அந்த எண்ணெயை உபயோகிக்கலாம்.

 பீட்ரூட் சாறு, கறிவேப்பிலைச் சாறு… இரண்டையுமே தலையில் தடவினாலும் உணவாக எடுத்துக்கொண்டாலும் நல்ல பலன் தரும்.

 வெற்றிலை, பாக்கு, வெட்டிவேர், மருதாணி – இவை நான்கையும் அரைத்துத் தலையில் தடவி, சிறிது நேரம் ஊறவைத்து அலசவேண்டும்.

 மருதாணித் தூள், டீ டிகாக்ஷன் இரண்டையும் கலந்து, தலையில் தடவி, சிறிது நேரம் கழித்து நீரில் அலசலாம்.

 சோற்றுக் கற்றாழை ஜெல், ஹென்னா தூள், டீ டிகாஷன் – இவை மூன்றையும் கலந்து தலையில் தடவி, ஊறவைத்து  நீரில் அலசலாம்.

இளநரையைத் தவிர்க்க…

சரிவிகித உணவு உண்ண வேண்டியது அவசியம். எல்லா வகையான நட்ஸ் வகைகளையும், இரவே ஊறவைத்து, மறுநாள் சாப்பிடவேண்டும். அவற்றில் வைட்டமின் இ இருப்பதால், சருமத்துக்கும் முடிக்கும் மிகவும் நல்லது. தண்ணீர் நிறையக் குடிக்கவேண்டும். முளைக்கட்டிய பயறு, பேரீச்சம்பழம் போன்ற உலர் பழங்கள், காய்கறிகள், பழங்கள் அதிகமாகச் சாப்பிடவேண்டும்.

ஹெட் மசாஜ்

நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயை இளஞ்சூடாகக் காய்ச்சி, இரு கைவிரல்களாலும் எண்ணெயைத் தொட்டு, முடியின் வேர்க்கால்களில் படுவது போலச் சிறுசிறு வட்டங்களாகத் தேய்க்கவும். விரல்களால் தலையின் எல்லாப் பகுதிகளையும் லேசாக அழுத்திவிடவும். இதனால், தலையின் எல்லாப் பகுதிக்கும் ரத்த ஓட்டம் பாய்ந்து புத்துணர்ச்சி கிடைக்கும். முடி நன்றாக வளர்வதுடன் நரைப்பதும் தள்ளிப் போகும்.

சோற்றுக் கற்றாழை

சோற்றுக்கற்றாழையின் ஜெல்லை தனியே எடுத்துக் கழுவி, சிறு துண்டுகளாக நறுக்கவும்.  இதனுடன் வெல்லம் அல்லது நாட்டுச் சர்க்கரை சேர்த்துச் சாப்பிடவும். அல்லது, கற்றாழை ஜெல்லை தலையில் தடவி, சிறிது நேரம் ஊறியதும் சீயக்காய்த்தூள் போட்டு அலசவும்.

செய்யவேண்டியவை

 ‘ஹேர் டை’ உபயோகிக்கும்போது ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்பட்டால், டை பயன்படுத்துவதை நிறுத்திவிடுங்கள். உடனடியாக, பயன்படுத்திய ஹேர் டை பாக்கெட்டுடன் டாக்டரைச் சந்திக்கவேண்டியது அவசியம்.  

 உடனடியாக நிறம் மாற்றும் ‘இன்ஸ்டன்ட் டை’ வகைகளைப் பயன்படுத்தாதீர்கள்.  

 ‘பக்கத்து வீட்டில் சொன்னாங்க, ஃப்ரெண்ட் யூஸ் பண்ணினாங்க’ என்றெல்லாம் தாமாகப் போய் ஹேர் டை வாங்கி உபயோகிக்கவே கூடாது. ஒருவருக்கு ஏற்றுக்கொள்ளும் பிராண்டு, மற்றவருக்கு ஏற்காமல் போகலாம்.  

 உபயோகிக்காமல் இருக்கும் ‘ஹேர் டை’யை, ‘வீணாகப் போகுதே’ என்று எடுத்துத் தலையில் தடவிக்கொள்வதும் ஆபத்தானது. அதனால் மோசமான பின்விளைவுகள் உண்டாகலாம்.

 தலையில் பூஞ்சைத் தொற்று ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

 எப்போதுமே தலைக்குச் சாதாரணத் தண்ணீரையே ஊற்றலாம். வெந்நீரில் குளிப்பதைத் தவிர்க்கவும்.

 முடிந்தவரை ஷாம்பூ வகைகளைத் தவிர்த்து, சீயக்காய், அரப்புத்தூள் போட்டுக் குளிக்கவும்.

சைவ உணவே மனிதகுல சன்மார்க்க உணவு

 இரையை மட்டும் தேடுதல் விலங்கியல். இரையோடு இறையையும் தேடுவதே மானிடவியல்.
சுத்த சைவ உணவினை உட்கொள்ளுதலே இறையை தேட நாம் மேற்கொள்ளும்  முதல் படி.
சைவ உணவு தான் இறை அருளை பெற்று தரும். சைவ உணவே சன்மார்க்க உணவு.
இக்கட்டுரையின் நோக்கம் : இன்று பொதுவாக அசைவம் சாப்பிடுபவர் எழுப்பும் கேள்விகளுக்கு வள்ளலார் , ஞானிகள் வழி நின்று தெளிவு படுத்துவதே

கீழ்காணும் கேள்விகளுக்கான பதில்களை பதிந்துள்ளோம்.

  1. சைவ உணவே மனித குல உணவு என்பது ஏன்?
  2. மரத்திற்கும்/தவரத்திற்கும் உயிர் உள்ளதே? அவைகளை உண்பது மட்டும் பாவம் இல்லையா?
  3. முட்டை ஏன் அசைவம்?
  4. சில சித்தர்கள் அசைவ உணவு சாபிட்டாதக சொல்வது உண்மையா?
  5. சைவ உணவின் மூலம் எல்லா சக்திகளையும் பெற முடியுமா?
  6. சைவ உணவு உட்கொண்டால் தான் இறைவனை அடைய முடியும் என்றால் பின் எப்படி “கண்ணப்பநாயனார்” முக்தி பெற்றார்?
  1. சைவ உணவே மனித குல உணவு என்பது ஏன்?

மனிதர்களின் உடல் அமைப்பு சைவ உணவினை உட்கொள்ள தகுந்தாற்போல் தான் அமைந்து உள்ளது. அதாவது குடலின் நீளம், பற்களின் அமைப்பு, செரிமானத்திற்கு உதவும் வயிற்றில் சுரக்கும் அமிலத்தின் அமில தன்மை ஆகிய அனைத்தும் காய், கனி, கிழங்குகளை உட்கொள்ளும் தன்மைக்கு ஏற்ப அமைந்துள்ளது. இதன் மூலம் இறைவன் நமக்கு விதித்த உணவு சைவ உணவே என்று அறிதல் வேண்டும்.

மேலும்

வள்ளல் பெருமான் அவர்கள் புலால் உண்பவர்கள் புறவினத்தார் என்றும் அவர்களுக்கு இறைஅருள் சிறிதும் கிட்டாது என்று தெளிவாக கூறி அசைவ உணவினை விட்டு , சுத்த சைவ உணவினை உட்கொள்ளுமாறு வழியுறுத்தி உள்ளார்கள்.

`அறிவு விளங்கிய ஜீவர்களுக்கு “ஜீவகாருண்யமே ” உண்மையான கடவுள் வழிபாடு என்று அருளுகிறார் திரு அருட்பிரகாச வள்ளல் பெருமான்.

நோன்பு என்பது யாதெனின் “கொன்று திண்ணாமை” என்று அருளுகிறார் அவ்வை பிராட்டி.

“புலால் உண்ணாமை” என்று 10 அதிகாரங்கள் படைத்தது வாழும் நெறியினை நமக்கு அருளுகிறார் வள்ளுவர் பெரும்தகை.

புலால் உண்பவர்கள் புலையர்கள் என்று சாடுகிறார் திருமூலர் பெருமானார்.

அதனால் அரிதான மனித தேகத்தினை பெற்ற நாம் மற்ற உயிரின் மீது பரிவு காட்ட வேண்டுமே தவிர  கொன்று தின்ன கூடாது.

“முற்பகல் செய்யின் பிற்பகல் தமக்கு தாமே யாம்” – அதாவது நாம் செய்த வினைகள் நமக்கு தான் திரும்ப வரும்.

உடலை விட்டு உயிர் பிரிவதே ஆன்மாவிற்கு ஏற்படும் மிக பெரிய வலி/ துன்பம் என்பதால் தான் கொலை என்பதை மிக பெரிய ஜீவஹிம்சை என்கிறார்கள் ஞானிகள்.  கர்ம விதிக்கு ஏற்ப உணவிற்காக கொல்லப்படும் விலங்குகளின் வலியினை உண்பவர்கள் அனுபவித்தே ஆகா வேண்டும் என்பது இறை நியதி. சற்று சிந்தியுங்கள் ஒருவர் வாழ்வில் அசைவத்தினை வாரம் ஒருமுறை மட்டுமே உண்டாலும் தனது வாழ்நாளில் எத்தினை உயிர் கொலை புரிகிறார். அத்தனை உயிர்கள் பட்ட வலியினை இவன் பல பிறவிகள் பட்டால் தான் தீரும்.

இதன் பொருட்டே எல்லா சித்தர்களும், ஞானிகளும் புலால் உண்பதை கண்டிக்கிறார்கள்.

இதனை உணர்ந்து உடனே அசைவம் உண்பதினை கைவிடுங்கள்.

  1. மரத்திற்கும்/தவரத்திற்கும் உயிர் உள்ளதே? அவைகளை உண்பது மட்டும் பாவம் இல்லையா?

ஜீவகாருண்ய  ஒழுக்கத்தில் வள்ளல் பெருமான் இதற்கான பதிலை கூறி உள்ளார்.

1. மரம் புல் நெல் முதலான சீவர்கள் பரிசமென்கிற ஓரறிவையுடைய சீவர்கள்.   அவ்வுடம்பில் சீவவிளக்கம் ஒருசார் மட்டுமே விளங்குகிறது.

2. தாவரங்களுக்கு மனம்  முதலான அந்தக் கரணங்கள் விருத்தி இல்லை. ஆன்மாவானது மனம் முதலான கரணங்களால் சுக துக்கங்களை அனுபவிக்கின்றது. தாவரங்களில் இவைகள் விருத்தி ஆகாததால் வித்து, காய் , கனி, பூ இவைகளை எடுக்கும் சமயம் தாவரத்தில் உள்ள ஆன்மாவிற்கு துன்பம் உண்டாவதில்லை. அது உயிர்க்கொலையுமல்ல;

3. தாவரங்களின்  வித்து, காய், கனி,பூ முதலியவைகளை கொள்ளும்போது சுக்கிலம் நகம் ரோமம் முதலிய வைகளை வாங்கும் போது இம்சை உண்டாகாதது போல் தாவரங்களுக்கும் இம்சை உண்டாவது இல்லை.

4. மரம், நெல், புல் போன்ற தாவரங்களின் வித்துக்களை கொண்டு நாமே உயிர் விளைவு செய்ய கூடும். வித்துக்களிடத்து ஆன்மாக்கள் ஏறுவது எப்படி யென்னில்:- நிலத்திற் கலந்த வித்திற்கு நீர்விடில் அந்த நீரின் வழியாகக் கடவுள் அருள் நியதியின்படி ஆன்மாக்கள் அணுத் தேகத்தோடு கூடி நிலத்திற் சென்று அந்நிலத்தின் பக்குவ சத்தியோடு கலந்து வித்துக்களினிடமாகச் செல்கின்றன வென்று அறிய வேண்டும்.

ஆகலில் மரம் புல் நெல் முதலியவைகளின் வித்து, காய், கனி, தழை முதலியவற்றைப் புசிப்பது சீவகாருணிய விரோதமல்ல என்றறிய வேண்டும்.

  1. முட்டை சைவ உணவா , அசைவ உணவா?

முட்டை அசைவமே.

கோழி முட்டை இடுவதின் நோக்கம் வேறு ஒரு கோழி தோன்றவே. ஒரு தாய் தன் சேயினை காப்பது  போல முட்டையினை கோழி  அடைகாக்கிறது.  முட்டையினை பெறுதல் கோழிக்கும் நாம் செய்யும் ஜீவ இம்சை ஆகும்.

முற்று பெற்ற மனித தாயின் கருவினை கலைப்பது போல தான் முட்டையினை உட்கொளுதல் என்று அறிய வேண்டும்..

மேலும் இன்று முட்டை இடுவதற்காக  சிறு கூண்டில் கோழியை  அடைத்து வைத்து  துன்புறுத்துகிறார்கள் . இதன் மூலம் பெரும் முட்டையை உட்கொள்ளுதல்  பாவமே. மணமுறை கண்ட வாசகத்தில் வள்ளல் பெருமான் செய்ய கூடாத பாவங்களாக கூறும் ஒன்று : “பட்சியை கூண்டில் அடைத்து வைத்தல்”.

மேலும் முட்டை கோழியின்  உடலில்  இருந்து வெளி வந்தவுடனே அதற்குள் உயிர் புகுந்துள்ளது என்று அறிய வேண்டும். அதனால் முட்டையினை உண்பதும் உயிர் கொலையே.

கோழியை அடைத்து வைத்து செய்யும் இம்சைகளும் முட்டையின் மூலம் உண்பவர்களுகே சென்று சேர்க்கிறது என்றும் அறிக.

முட்டையினை சாப்பிடுவது கோழியை உண்பதற்கு சமம். தான். அதனால் முட்டை அசைவமே.

அதனால் முட்டை உண்பதும் ஜீவ காருண்யத்திற்கு விரோதமானது தான் .

  1. சில சித்தர்கள் அசைவ உணவு சாபிட்டாதக சொல்வது உண்மையா?

இறைவனை உணர்ந்த எந்த ஞானியும் , சித்தரும் அசைவம் உண்ண வில்லை. பரிபாசையாக கூறி உள்ள விசயங்களை சரியாக தெரிந்து கொள்ளாததனால் தான் இவ்வாறு தவறான கருத்துக்கள் தோன்றி உள்ளது  .

அசைவம் உண்பவன் ஞானி அல்ல. கீழ் கண்ட வள்ளலாரின் பாடல் இதற்கு சான்று :

”மருவாணைப் பெண்ணாக்கி ஒருகணத்தில் கண்விழித்துவயங்கும் அப்பெண்  

உருவாணை உருவாக்கி இறந்தவரை எழுப்புகின்ற உறுவனேனும்   

கருவாணை யற இரங்கா  துயிருடம்பைக் கடிந்துண்ணுங் கருத்தனேல்

எங்    குருவாணை எமதுசிவக் கொழுந்தாணை ஞானிஎனக் கூறொ ணாதே”

2-ம் திருமுறை   -திருவருட்பா

ஒருவன் ஆணை பெண்ணாகவும் பெண்ணை ஆணாகவும் ,இறந்தவரை எழுப்பவும் வல்லவனாயினும் அவன் புலால் உண்ணும் கருத்துடையவனாயின் அவன் ஞானியல்ல !? புலால் உண்பவனல்ல அந்த கருத்துடையவானாயினும் அவன்ஞானியல்ல கேவலம் மனித மிருகமே!? இது என் குரு மீது ஆணை சிவத்தின் மீதும் ஆணை என்று அறுதியிட்டு கூறுகிறார் வள்ளலார்!

மேலும்

‘உயிர்கொலையும் புலைப்புசிப்பும் உடையவர்கள்  எல்லாம் உறவினத்தார் அல்லர், அவர் புறினத்தார்!”  என்று இறைவனே தனக்கு அருளியாதாக இயம்புகிறார்.

  1. சைவ உணவின் மூலம் எல்லா சக்திகளையும் பெற முடியுமா?

சைவ உணவின் மூலம் எல்லா சக்திகளையும் பெற முடியும். மரணமில்லா பெருவாழ்வு பெற்ற எல்லா ஞானிகளும் இதற்கு சாட்சி.

  1. சைவ உணவு உட்கொண்டால் தான் இறைவனை அடைய முடியும் என்றால் பின் எப்படி “கண்ணப்பநாயனார்“ முக்தி பெற்றார்?

கண்ணப்ப நாயனார் இறை பக்தியில் தனது கண்ணை கொய்து இறைவனுக்கு அற்பனித்தார். அவர் செய்த தீய வினைகள் அப்போது தான் நீங்கியது. அதன் பின்னரே அவருக்கு இறை காட்சி கிட்டியது.

கீழ் கொடுக்கப்பட்டுள்ள கட்டுரையினை முழுவதாக படியுங்கள் இதற்கு விடை தெளிவாக தெரியும்.

http://tamil.vallalyaar.com/?p=1402