பயிற்சியில் விளக்கப்படும் ரகசியங்கள் : சித்தர்கள் முறையிலான வாலை பூஜை 🔯பஞ்சாட்சரம், 🔥ஓரெழுத்து ரகசியம், 🗻லிங்க தத்துவம், 🌀 பிரம்மம் எனும் மெய்பொருள் உபதேசம், 🔆தசதீட்சை, 🔑பத்தாம் வாசல் திறப்பு ரகசியம், ✨மரணமில்லா பெருவாழ்விற்கான வாசியோக பயிற்சி, 🔱மெய்குருவான வாலை மனோன்மணி அம்பிகையின் அருள்பெறும் மந்திர தீட்சை. 🌞மெய் பொருள் உபதேசம் மற்றும் வாசி யோகப் பயிற்சி வாழும் சித்தர், “பாட்டு சித்தர் நாராயணசாமி ஐயா” அவர்களால் வழங்கப்படும். 🌱 நாள்: 09/10/ 2022 அக்டோபர் மாதம் (ஞாயிற்று கிழமை ) ⏰ *நேரம் காலை 9 மணி முதல் பகல் 1:30 மணி வரை.. 🚩 இடம்: மதுரை கீதா நடன கோபால நாயகி மந்திர் மாரியம்மன் தெப்பக்குளம் மேலவீதி (மேற்கு பகுதி) முக்தீஸ்வர் கோவில் வடபுறம். (KS புன்னவன நாடார் அரங்கம் அருகில்) 💠உபதேசத்தில் பங்குபெற விரும்புபவர்கள் தங்கள் பெயரை முன் பதிவு செய்து கொள்ளவும். 💥 அன்னதான மற்றும் சித்தர் பீட நற்பணிக்கான நன்கொடை ரூபாய் 500 மட்டும். Google pay , phone pay மூலம் பணம் செலுத்த CELL NO; 7845507434.. மற்றும் (வங்கி மூலம் பணம் செலுத்த *SBI BANK R.KANNAN A/C NO; 31942803122 BRANCH CODE 13158; VILANGUDI IFSC CODE; SBIN0013158) என்ற வங்கி கணக்கில் ரூபாய் 500 செலுத்தி தங்கள் இருக்கையை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்! பணம் செலுத்தியபின் உங்கள் இருக்கை எண் ( seat number) வழங்கப்படும் மேலும் தகவலுக்கு தொடர்பு கொள்ள:📞7845507434 📞 9994167303📞7708022210 8883594666 இடைவேளையில் தேநீர் & நவதானியம்; மதியம் உணவு விருந்து வழங்கப்படும். 📢இத்தகவல்தனை மற்ற மெய் தேடும் அன்பர்களுக்கும் நண்பர்களுக்கும் பகிருங்கள்! இங்ஙனம் : ஸ்ரீ மனோன்மணி சித்தர் பீடம் தவக்குடில், பழைய பாபநாசம் சிவன் கோயில் அருகில், சிவந்திபுரம் திருநெல்வேலி. தொடர்புக்கு , திரு. செந்தில்குமார் 📱9894751006 *

மெய்ப்பொருள் ஞான உபதேசம் மற்றும் வாசியோக தீட்சை தகவல்கள்

சித்தர்யோகஞான சாதகர்களே, ஶ்ரீமனோன்மணி சித்தர் பீடம் நிகழ்த்தும்

பாட்டுச்சித்தரின் மெய்ப்பொருள் ஞான உபதேசம் மற்றும் வாசியோக தீட்சை தகவல்கள்

😷சமூக இடைவெளி மற்றும் முக கவசம் அவசியம்

☎️ முன்பதிவு பதிவு அவசியம்

💥 07.08.2022
(ஞாயிற்றுக்கிழமை)
மதுரை
திரு கண்ணன்
📱+917845507434

💥 14.08.2022
(ஞாயிற்றுக்கிழமை)
அரியலூர்
திரு துரை முருகன்
📱+91 99444 14779

💥 15.08.2022
(திங்கட்கிழமை சுதந்திர தினம்)
பாட்டு சித்தர் குருகுல ஆசிரமம்-சிவந்திபுரம்)
திரு கந்தசாமி
📱+919944090489

💥 21.08.2022
(ஞாயிற்றுக்கிழமை)
கரூர்
திருமதி பிரேமலதா
📱+918940544509

💥 27.08.2022
(சனிக்கிழமை
சென்னை வில்லிவாக்கம்
திருமதி நித்யா
📱+919843378047

💥 28.08.2022
(ஞாயிற்றுக்கிழமை)
திருச்சிராப்பள்ளி
திருமதி யோகி ஆண்டாள்
📱+917397283252
திரு பூலோகன்
📱9976304609
திரு நடராஜன்
📱9442502681

💥 03.09.2022
(சனிக்கிழமை)
கோயமுத்தூர்
திரு ஜோதி வாலை சிவா தம்பி
📱+919344416555

💥 04.09.2022
( ஞாயிற்றுக்கிழமை)
பெங்களூர்
திரு சிவயோகி சின்னப்பா
📱8884769000
திரு வேணுகோபால்
📱+918147167695

💥 11.09.2022
(ஞாயிற்றுக்கிழமை)
சென்னை- ராஜகீப்பாக்கம்
திருமதி நித்யா
📱+919843378047

💥 16.09.2022
(வெள்ளிக்கிழமை)மலேசியா -பினாங்*
திருமதி கிருஷ்ணாம்பாள்
📱+6012-4430469

💥 18.09.2022
(ஞாயிற்றுக்கிழமை)
மலேசியா- கோலாலம்பூர்
திரு சதாசிவம்
📱+6019-6934102

💥 25.09.2022
(ஞாயிற்றுக்கிழமை)
ஹைதராபாத்
திரு ராஜகோபால்
📱9573858765

💥 01.10.2022
(சனிக்கிழமை)
சென்னை- வில்லிவாக்கம்)
திருமதி நித்யா
📱+919843378047

💥 02.10.2022
(ஞாயிற்றுக்கிழமை)
சென்னை-குரோம்பேட்
திருமதி யோகி ஆண்டாள்
📱7397283252

💥 16.10.2022
(ஞாயிற்றுக்கிழமை)
சிங்கப்பூர்
திரு மணி
📱+6596673645

📝 உபதேசம் பெற விரும்பும் அன்பர்கள் தங்கள் ஊர் ஒருங்கிணைப்பாளர்களிடம் முன்பதிவுசெய்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

📚 ஸ்ரீபாட்டுச்சித்தர் எழுதிய சித்தர் நூல்கள் அனைத்தும் வாசியோக வகுப்புகள் நடக்கும் இடங்களில் கிடைக்கும்.
ஐயப்பன் 100
தசதீட்சை 200
வாசியோகம் 200
சிவவாக்கியர் 150
கோரக்கர் 200
கைவல்யம் 200
அகத்தியர் 200
திருவாசகம் 300
திருக்கோவையா 300
திருமந்திரம் 600
காகபுஜண்டர் 600
வாலை 200
நான் யார் 200
பாம்பாட்டி 150

மொத்தம் 3600

📢 ஞானதாகம் கொண்ட உயிர்களுக்கு இத்தகவலை பகிருங்கள் அன்பர்களே!.

இங்ஙனம் :
🛕ஶ்ரீமனோன்மணி சித்தர் பீட அறக்கட்டளை
மனோன்மணி சித்தர் பீட குருகுல ஆசிரமம் (பழைய பாபநாசம் சிவன் கோயில் அருகில்) சிவந்திபுரம், அம்பை வட்டம், திருநெல்வேலி. மற்றும் சீர்காழி

சித்தர் பீட தொடர்புக்கு
திரு சிவ.ப. செந்தில்குமார்
📱 9894751006

“மெய்ப்பொருள் உபதேசம்” மற்றும் “வாசியோக தீட்சை”

07-08-2022மதுரையில்* நீண்ட இடைவெளிக்குப் பிறகு மிகவும் அரிதான வாய்ப்பு! 💥பாட்டுச்சித்தரின் “மெய்ப்பொருள் உபதேசம்” மற்றும் “வாசியோக தீட்சை” 💥 மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும் அறியவேண்டிய அரிய ரகசியங்கள்! 😷அரசு உத்தரவின்படி சமூக இடைவெளியை கடைபிடித்து முக கவசத்துடன் வருவது அவசியம் மொத்த அன்பர்கள் 100 பேர் மட்டும் ( முன்பதிவு அவசியம் ) 🔥பயிற்சியில் விளக்கப்படும் ரகசியங்கள் : சித்தர்கள் முறையிலான வாலை பூஜை 🔯பஞ்சாட்சரம், 🔥ஓரெழுத்து ரகசியம், 🗻லிங்க தத்துவம், 🌀 பிரம்மம் எனும் மெய்பொருள் உபதேசம், 🔆தசதீட்சை, 🔑பத்தாம் வாசல் திறப்பு ரகசியம், ✨மரணமில்லா பெருவாழ்விற்கான வாசியோக பயிற்சி, 🔱மெய்குருவான வாலை மனோன்மணி அம்பிகையின் அருள்பெறும் மந்திர தீட்சை. 🌞மெய் பொருள் உபதேசம் மற்றும் வாசி யோகப் பயிற்சி வாழும் சித்தர், “பாட்டு சித்தர் நாராயணசாமி ஐயா” அவர்களால் வழங்கப்படும். 🌱 நாள்: 07/08/ 2022 ஆகஸ்ட் மாதம் (ஞாயிற்று கிழமை ) ⏰ *நேரம் காலை 9 மணி முதல் பகல் 1:30 மணி வரை.. 🚩 இடம்: மதுரை கீதா நடன கோபால நாயகி மந்திர் மாரியம்மன் தெப்பக்குளம் மேலவீதி (மேற்கு பகுதி) முக்தீஸ்வர் கோவில் வடபுறம். (KS புன்னவன நாடார் அரங்கம் அருகில்) 💠உபதேசத்தில் பங்குபெற விரும்புபவர்கள் தங்கள் பெயரை முன் பதிவு செய்து கொள்ளவும். 💥 அன்னதான மற்றும் சித்தர் பீட நற்பணிக்கான நன்கொடை ரூபாய் 500 மட்டும். Google pay , phone pay மூலம் பணம் செலுத்த CELL NO; 7845507434.. மற்றும் (வங்கி மூலம் பணம் செலுத்த *SBI BANK R.KANNAN A/C NO; 31942803122 BRANCH CODE 13158; VILANGUDI IFSC CODE; SBIN0013158) என்ற வங்கி கணக்கில் ரூபாய் 500 செலுத்தி தங்கள் இருக்கையை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்! பணம் செலுத்தியபின் உங்கள் இருக்கை எண் ( seat number) வழங்கப்படும் மேலும் தகவலுக்கு தொடர்பு கொள்ள:📞7845507434 📞 9994167303📞7708022210 8883594666 இடைவேளையில் தேநீர் & நவதானியம்; மதியம் உணவு விருந்து வழங்கப்படும். 📢இத்தகவல்தனை மற்ற மெய் தேடும் அன்பர்களுக்கும் நண்பர்களுக்கும் பகிருங்கள்! இங்ஙனம் : ஸ்ரீ மனோன்மணி சித்தர் பீடம் தவக்குடில், பழைய பாபநாசம் சிவன் கோயில் அருகில், சிவந்திபுரம் திருநெல்வேலி. தொடர்புக்கு , திரு. செந்தில்குமார் 📱9894751006 * #எத்தனையோ அன்பர்கள் ஆன்மீகத்தேடலில் பல இடங்களுக்கு அழை ந்துகொண்டு இருப்பார்கள் இந்த வாய்ப்பு அவர்களுக்கு ஒரு வரமாக அமையும்! இந்த செய்தியை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்! அவசியம் வகுப்பில் கலந்து கொண்டு ஆனந்தமாக உற்சாகமாக பல சாதனைகளைப் படைத்து வாழுங்கள்! அரசின் மிகவும் முக்கிய அறிவிப்பு; கொரனா நோய் அறிகுறிகள் இருப்பின் உபதேசத்தில் கலந்து கொள்ள அனுமதி இல்லை !எனவே காய்ச்சல் மற்றும் சளி பிடித்திருந்தால் தயவுசெய்து வீட்டிலேயே இருந்து நலம் பெற வாழ்த்துகிறோம்!

அண்ட பிண்ட ரகசியம்

ரொம்ப பெரிய பதிவு பொறுமையாக படித்து தெரிந்து கொள்ளுங்கள்

அண்ட பிண்ட ரகசியத்தை சித்தர்கள் எப்படி
கண்டறிந்தனர்?
இப்படிப்பட்ட இன்பமும், துன்பமும்,
ஏற்படுகின்ற இந்த வாழ்க்கைக்கு வழியே
இல்லையா? நிரந்தரமான மகிழ்ச்சி
கிடைக்காதா? என்ற கேள்வி எழ ஆரம்பித்தது.எனக்குள்ள
அந்தக் கேள்விக்கு மனிதன் கண்டெடுத்த
முத்துகளாகிய பிரபஞ்ச அண்ட பிண்டத்
தத்துவம்.இன்னும் ஆழமாகப் புரிய
ஆரம்பித்தது. அதன் முடிவு எங்கு
தோற்றமோ? அங்கேதான் முடியும் ? என்பதை
புரிந்து கொண்டேன் ஆராய முற்பட்டேன்
அதன் விளைவு வெட்டவெளி தோன்றியது.
அதிலிருந்து தோன்றிய ஜோதி என் கண்முன்
தோன்றின.அதிலே முளைத்து எழுந்த
அணுவே நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம்
ஆகி ஓரறிவு ஐந்தறிவு பிராணி ஆறறிவு
மனித ஜீவன் வரையுள்ள பரிணாமத்தைக்
கண்டேன்
கடைசியாகத் தன்னைத்தானே ஆராய
முற்பட்டான். அதன் விளைவு தன்னுடைய
இடத்திலே இருக்கும் மூல ஆற்றலை
உணர்ந்தேன்
எங்கோ தொடங்கிய மூல ஆற்றல்
அண்டங்களாக பேரண்டங்களாக வியாபித்துள்ள
பூரனமாய் நிறைந்துள்ள அந்த ஆற்றலை
கண்டேன்
பிரபஞ்சத்தின் சிறிய அணுவான மனிதன் மூல
சக்தி என்கிற கயிற்றின் நுனியைப் பிடித்து
கொஞ்சம் கொஞ்சமாக பிரபஞ்ச பேராற்றலின்
பரமாணுவை அடைந்து அதோடு ஐக்கியமாக
முடியும் என்று கண்டுபிடித்தேன்
கண்டுபிடித்து அடைந்தவன் சித்தன்.
வெட்டவெளியில் ஜோதியாக இருபவனும்
சித்தனே. வெட்டவெளியில் ஜோதியாக
இருபவனும் சித்தனே. அதுவே
பிரம்மரகசியம் ! அதை அறிந்தவனே
பிரம்மரிஷி.

பரமாணுவில் தொடங்கி அணுக்கள் கூட்டம்
கூட்டமாக பல்வேறுபட்ட இயக்கங்களை
அண்டங்களாக, பிண்டங்களாக நடந்து
கொண்டு இருக்கின்ற பேரியக்க மண்டலமே
(Universe) அதனுடைய முதல் நிலை ஆகாயம்
எனப்படும்.
அதன் அடுத்த நிலையே காற்று எனப்படும்.
இவை இரண்டும் மோதிக் கொள்வதால்
ஏற்படும்போது உண்டான ‘வெப்ப நிகழ்ச்சியே
நெருப்பாகும்.
நீரகவாயு, பிராணவாயு என்ற இருவகையான
வாயுக்கள் குறிப்பிட்ட அளவில் சேருகின்ற
போது நீர் ஆகிறது. நீரின் இறுகிய நிலையே
மண்.இவ்வைந்து நிலைகளும் ஐந்து பௌதிகப்
பிரிவுகள் ஆனபடியால் அவற்றை
பஞ்சபூதங்கள் என்கிறோம்.
மேற்கண்ட பூதங்கள் பேரியக்க மண்டலத்தில்
ஆகாயம், காற்று, நெருப்பு, நீர்,மண் என்று
முறையே தோன்றியது . இதே வரிசைக்
கிராமமாகத்தான் தாயின் வயிற்றில் பிண்டமான
குழந்தையும் வளரும்.
அண்டம் :
பிண்டம் :
குழந்தை :
————————

ஆகாயம் —> தலைபாகம் (ஆகாயம்)—>
ஆக்ஞை
காற்று —–> கழுத்து (காற்று)—>
விசுத்தி
நெருப்பு ——–> இருதயம் (நெருப்பு) —>
அநாதகன்
நீர் ————–> தொப்புள் (நீர்) —–>
மணிபூரகம்
மண் ————>வயற்றில் (சுக்கில
சுரோணித இடம்)—> சுவாதிஷ்டானம்
மேற்கண்ட விளக்கத்தின் மூலம் அண்டத்தின்
செயல்பாடு முறைக்கு ஏற்ப பிண்டத்திலும்
செயல்படுகிறது என்பதை ஏளிதாக
அறியலாம்.
பரமானுவிலிருந்து தொடங்கி கூட்டம்
கூட்டமாக இயங்குகின்ற நிகழ்ச்சிகளின்
குணங்களை ஐந்து வகையாகப் பிரிகின்றோம்.
உணர்வு, ஒலி, ஒளி, சுவை, மணம். இந்த
ஐந்து குணங்களும் எப்படித் தோன்றின?
என்பதை காணும்போது கவர்ச்சியாக உள்ள
அழுத்த இயக்கம் நடைபெறும் இடம் ஆகாயம்
என்றும்,ஒலி உண்டாகும் இடத்தை காற்று
என்றும், ஒளி உண்டாகும் இடத்தை நெருப்பு
என்றும்,சுவை உண்டாகும் இடத்தை நீர்
என்றும், மணம் உண்டாகும் இடத்தை மண்
என்றும் அறிந்து கொள்ள வேண்டும்.
இன்றைய விஞ்ஞானிகள் கூறும் 92 வகையான
மூலக்கூறு(Elements)களும் இவ்வைந்து
பூதங்களில் அடங்கியுள்ளன.
எழுவகை பிறப்பு எப்படி உண்டாயிற்று?
பூமி என்பது ஐந்து பூதங்களின் ஈர்ப்புச் சக்தி
கொண்ட கோள்.அது ஐந்துவிதமான
அணுக்கூட்டத்தின் தொகுப்பு.இந்த அணு
தொகுப்பு பூமி அதிலுள்ள அணுக்களுக்குத்
தானே முளைக்கின்ற செயல்படுகின்ற ஆற்றல்
இல்லை.
இது செயல்படுவதற்க்கு சூரியனின் ஒளிசக்தி
ஆற்றல் தேவைப்படுகிறது.சூரியகதிர்களின்
வீச்சில் பூமியில் ஜீவராசிகள் உண்டாயின.
எழுவகை பிறப்பு உண்டான
விபரமானது.ஜடப்பொருளான பஞ்சபூதம்
ஐந்தும் அதோடு சூரியன்,சந்திரன் என்கிற
இரண்டும் சேர்ந்து ஏழு ஆற்றல்களும்
ஏழுவகையான பிறப்பை உண்டாக்கின.
இந்த ஏழுவகைப் பிறப்பு ஒரே மாதிரியாகப்
பிறக்காமல் ஏன் மனிதன், தேவர்,
தாவரம்,விலங்கு,ஊர்வன,பறப்பன,நீர்வாழ்வன
என்ற வேறுபாடோடு தோன்றியது எப்படி?
என்று ஆய்வு செய்கின்ற போது
சூரியனானது தன்னுடைய சூரியக்
குடும்பத்தில் உள்ள ஏழு ஆற்றல்களை
கிரகித்தது பூமிக்கு அனுப்புவதால் அந்த
ஒளிக்கதிர்கள் பூமியில் படும்போது
பூமியில் உள்ள பஞ்சபூதத் தத்துவ
அணுக்களின் ஈர்ப்பு தன்மைகேற்ப
ஏழுவகையான பிறப்பாக தோன்றியது.
இந்த ஏழுவகை பிறப்பானது பஞ்சபூத
ஆற்றலும்,சூரியக் குடும்பங்களின் ஆற்றலும்
ஒருங்கிணைந்து அந்த அணுக்களின் ஈர்ப்பு
தன்மையால் உண்டான தன்மைக்கு ஏற்ப
பிறப்பு பேதங்கள் உண்டாயின.
பிறப்பு பேதங்கள் எனப்படுவதுமனிதன்,
தேவர், தாவரம்,விலங்கு,ஊர்வன,பறப்பன,நீ
ர்வாழ்வன என்ற பேதம் உண்டாயின.
பிண்டத்தில் உடலின் இயக்கம் எப்படி
செயல்படுகிறது?
பூமியில் எப்படி நீர், நிலம், நெருப்பு, காற்று,
ஆகாயம் ஆகிய ஐந்து சக்திகள் ஒன்றை ஒன்று
ஈர்த்து பூமியாகி செயல்படுகிறதோ அதே
போல் இந்த உடலில் கீழ்கண்டவாறு பஞ்சபூத
சக்திகள் செயல்படுகின்றன.
1) ஆகாயம் – காமம், குரோதம், மோகம், மதம்
, மாச்சர்யம்
2) காற்று – இருத்தல், நடத்தல், படுத்தல்,
எழுதல் , ஓடல்
3) நெருப்பு – பயம், சோம்பல் , பசி , உறக்கம்,
புணர்ச்சி
4) நீர் – உதிரம், மூளை , உமிழ்நீர், கொழுப்பு,
சுக்கிலம்
5) மண் – மயிர், தோல், நரம்பு , எலும்பு,
தசை
பூமியின் இயக்கத்திற்கு இரவு,பகல் மாறி
மாறி சூரிய சந்திரர்கள் செயல்படுவதால்
பூமியின் செயலும், ஜீவராசிகளும்
வாழ்கின்றன .
அதே போல மனித உடலான பிண்டத்திலும்
இடகலை என்கிற சூரியகலையும், பிங்கலை
என்கிற சந்திர கலையும் மாறி மாறி சுவாசம்
நடைபெறுவதால் மனித பிண்டம்
இயங்குகிறது.
பூமியில் 12 மணி நேரத்திற்கு ஒருமுறை
இரவும் பகலும் மாறி மாறி
செயல்படுவதுபோல் இந்த மனித உடலில்
சூரியகலை, சந்திரகலை, சுவாசம், இரண்டு
மணி நேரத்திற்கு ஒரு முறை மாறி மாறி
செயல்படும்.
ஆகவே மேற்கண்ட விளக்கத்தின் மூலம் எந்த
சூரிய, சந்திரன் ஆற்றல் பூமியை
இயக்குகிறதோஅதே ஆற்றல்தான் இந்த மனித
உடலையும் இயக்குகிறது என்பதைப் புரிந்து
கொள்ளலாம்.
பிண்டத்தில் (உடலில் ) நவகிரக செயல்பாடு
:-
பூமி என்பது பிண்டம். பூமிக்கு அண்டம்
சூரியக் குடும்பம் என்கிற நவகோட்கள்.
அதேபோல் மனித உடலில் தலைக்கு
கீழ்ப்பகுதி பிண்டம் தலைப்பகுதி
அண்டமாகிறது.
அண்டத்தில் எழு கிரகம் செயல்படுகின்றன.
அதேபோல் பிண்டத்தில் அதாவது தலைப்
பகுதியில் ஏழு துவாரமும் செயல்படுகிறது.
கிரகம் என்றால் என்ன ?
கிரகம் என்றால் கிரக்கின்ற பொருள்
என்பதாகும். நமது மனித உடலில்
தலைப்பகுதியில் உள்ள கண் -2 , காது -2 ,
மூக்கு துவாரம் -2, வாய் -1 ஆக இந்த ஏழு
துவாரங்களும் கிரகிக்கின்ற தன்மையுள்ளவை.
கண் காட்சியை கிரகிக்கிறது. வாய் சுவையை
கிரகிக்கிறது. கிரகிக்கின்ற தன்மை அண்டத்தில்
உள்ளது போல் பிண்டத்திலும் நடைபெறுவது
நமக்குத் தெளிவாகப் புரிகிறது.
அடுத்த நிழல் கிரகம் என்று ஏன் ? ராகு , கேது
என்று இரண்டு கிரகத்தை வைத்தார்கள் ?
ஆய்வு செய்யும்போது பொது நியதிப் படி
ஒரு பொருளை கிரகிக்கின்றபோது மற்றொரு
புறம் வெளியே தள்ளுகின்ற செயலும்
நடைபெற வேண்டும் என்பது விதி.
அந்த அடிபடையிலே தலைப்பகுதியில்
கிரகித்து அனுபவித்த அத்தனையும், சுக்கிலம்
, மலம் , மூலமாக மனித உடல்
வெளியேறுகிறது.
எதற்காக ராகு என்றால் விஷம் என்று பாம்பின்
தலையும் , கேது என்றால் பாம்பின் உடலும்
வைத்தார்கள் ? என்ற கேள்வி எழுவது
இயல்பு.
பாம்பின் தலை என்றால் விஷத்தைக்
குறிப்பிடுகிறது. மனித உடலில் விஷத்தை
என்பது மலத்தை என்பது பொருள். மலத்தை
தள்ளும் இடமே விஷமாகும்.
அதைதான் மனித உடலில் எருவாயை ராகு
என்றனர். அதேபோல் கேது என்பது பாம்பின்
உடலைக் குறிப்பிட்டர்கள். உடல் என்பது
படைப்புக்கு உரியது.
படைப்புக்கு காரணமாவது சுக்கிலம்
என்பதால் சுக்கில துவாரத்தை மனித உடலில்
கேது பாகம் என்றனர். தவிர படைப்பதற்க்கு
உரியவையாக இருப்பதால் ஞானகாரகன்
என்றும் கூறினர்.
மேற்சொன்ன சூரியக் குடும்பமாகிய ஏழு
கிரகங்களும் வானவில் காட்சியில் ஏழு
நிறங்களாகக் காட்சி தந்த அந்த ஏழு நிறங்களே
நமது மனித உடலில் ஏழு ஆதார பீடத்திலும்
காட்சியளிகிறது.
அதேபோல் ஏழு ஆற்றல்களே ஏழு ஆதாரமாக
செயல்படுகிறது. இந்த ஏழு சக்திகளும் நமது
உடலிலே சப்த தாதுக்களாகச்
செயல்படுகின்றன.
இப்படி ஒவ்வொரு செயலும் எப்படி
நடைபெறுகின்றன ?
என்பதை துல்லியமாக கனகிட்டோமானால்
அண்டத்தில் இல்லாதது பிண்டத்தில் இல்லை.
பிண்டத்தில் இல்லாதது அண்டத்தில் இல்லை
என்றே தெளிவாக உணரலாம்.
கர்மவினை என்பது உண்மையா?
விஞ்ஞானிகள் பிரபஞ்சத்தின் மூலத்தை,
மூலசக்தியை ஆராய எத்தனை எத்தனைக்
குழப்பங்கள், கணிப்பு, கருவிகள் என்று
தேடுகிறான், தேடுகிறான் தேடிக் கொண்டே
இருக்கிறான். ஆனால் சித்தன் அதைக்
கண்டுபிடித்து சொல்லி உள்ளான். அதை ஏன்
ஏற்க யோசிக்கிறார்கள் விஞ்ஞானிகள்?
சுப்பிரமணியர் ஞானம் என்ற நூலில்
“ ஆதியிலே பராபரத்திற் பிறந்த சத்தம் ”
என்று இந்த பிரபஞ்சம் முதன் முதலில்
(ஜோதி) கனலில் இருந்து கொப்பளித்து வந்த
கனலே. குளிரும்போது அது அணுவாக மாறி
இப்பிரபஞ்சம் உண்டாவதற்கு காரணமானது
என்று அன்றே கூறியுள்ளார்கள்.
ஆக முதலிலே பிறந்தது “சத்தம்”. சத்தம்
என்றால் ஒலி என்று பொருள்.
ஒலி உண்டாகும் இடத்திலே ஒளியும்
உண்டாகும். இது இயற்கை.
இப்பிரபஞ்சத் தொடக்கதிற்கு அடிப்படையான
முதல் காரணமாக இருப்பது ஒளியும்,
ஒலியும் தான்.
அந்த அடிப்படையில் பஞ்சபூத பூமியின்
இயக்கத்திற்கு காரணமாக இருப்பது சந்திரன்,
சூரியன் என்கிற ஒளியும், ஒலியும் தான்.
மனிதனுக்கும் சூரியகலை, சந்திரகலை
இயங்குகிறது.
அவ்வளவு ஏன் ? இன்றைய விஞ்ஞானத்தால்
கண்டுபிடிக்கப்பட்ட இயந்திரங்கள்,
ஜடப்பொருள்கள் இயங்குவதற்கு ஒலி, ஒளி
இல்லை என்றால் நடைபெறுமா? நிச்சயமாக
நடைபெறாது.
எரிபொருளால் ஒலி, ஒளி உண்டாக்கத்தானே
இயந்திரங்கள் இயங்குகின்றன. ஆக ஒலி, ஒளி,
அதன் அதிர்வு இம்மூன்றும் சேர்ந்ததுதான்
மூலசக்தி. அதைத்தான் சித்தர்கள் அ, உ, ம
“ஓம்” என்று பெயர் வைத்து, எல்லா
இயக்கங்களுக்கும் ஓம் என்ற மூல சக்திதான்
காரணம் என்றனர்.
இது விஞ்ஞானமில்லையா? இது என்ன
மூடத்தனமான கொள்கையா ? சிந்தியுங்கள்
அன்பர்களே…
சிலை வடிப்பவன் எவனொருவன் சிலை
முழுவதும் வடித்து சின்னஞ்சிறு உளிகளால்
நெளிவு சுளிவு அனைத்தையும் வைத்து
சிலை முடிகின்றானோ, அவனால்தான் அந்த
சிலையின் அத்தனை ஆற்றலையும் உணர
முடியும், கூறமுடியும்.
அதே போல இந்த பிரபஞ்சக் கணக்கீட்டை
கண்டுபிடித்து பிரபஞ்சத்திற்கும்,
மனிதனுக்கும், ஜீவராசிகள், தாவரங்கள்
அத்தனைக்கும் உரிய ஒப்பீடு தத்துவங்களை
அறிந்து, இந்த பிரபஞ்சம் இதனை யுகங்களில்
அழியும் என்று எவன் சொல்கிறானோ?
அவனே அந்தக் கொள்கையில் முழு
உண்மையை அறிந்தவனாவான்.
ஆகவே பிரபஞ்சத்தை கணக்கிட்டு ஆயுள்
நிர்ணயம் செய்து பிரபஞ்சம் அழிவதையும்,
கணக்கிட்டவன் சித்தன். சித்தர்கள் சொன்ன
எந்த உண்மையும் காலத்தால் அழிக்க
முடியாதது.
சமீபத்தில் கிடைத்த செய்தி. மூளையின்
பதிவுகளை கண்டுபிடித்த கருவியானது,
மூளையில் இன்னொரு அதிர்வலைகள்
இருக்கின்றன என்பதை கருவி காட்டியது, அது
என்ன? என்ற கேள்விக்கு, விஞ்ஞானிகள்
கூறுவது கர்மவினை அதிர்வு கோடு
(Intronce) என்றார்களாம்.
ஆகவே கர்மவினை என்பதை என்றைக்கு
ஒத்துக் கொண்டானோ! அப்போதே சித்தர்கள்
சொல்லியதை ஒத்துக் கொண்டாக வேண்டும்!
முன்பிறப்பு, அடுத்த பிறப்பு உண்டு என்பதை
ஒத்துக் கொண்டாக வேண்டும்.
கர்மவினை என்பதே முற்பிறப்பின் தொடர்
என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.
“ஓம்” என்ற மூலசக்தியே இந்த பிரபஞ்ச
இயக்கப் பேரியக்க மண்டலத்தின் மூலசக்தி
என்பதை கோரக்கர் முதல் கொங்கணர்,
அகத்தியர், ஏன் அனைத்து சித்தர்களும் ஒத்துக்
கொள்கிறார்கள்.
“ஓம்” தான் மூலசக்தி என்பதில் எந்த
சித்தருக்கும், ஞானிகளுக்கும் வேறுபாடு
இல்லை. ஏனென்றால் அவர்கள் அத்தனை
பேரும் உண்மையை கண்டவர்கள்.
ஆனால் இன்றைய விஞ்ஞானிகள் மத்தியில்
ஏன் இத்தனை கருத்து வேறுபாடு? ஆய்வு,
ஆய்வுப் பொருள் எல்லாம் என்ற கேள்விக்கு
விஞ்ஞான மனிதனுடைய அறிவுக்கு
எட்டியவை, அவ்வளவுதான்.
எத்தனைத்தான் கருவி கரணாதிகள் வைத்துச்
செய்தாலும், இவன் அறிவின் எல்லைக்
கோட்டின் அளவின் அடிப்படையிலேதான்
அந்த கருவிகள் நிர்மாணிக்கப்படும்.
மனித அறிவுக்கு உண்டான கருவி
அதற்கேற்றாற் போல் அந்த அளவிலேயே
நமக்கு பதில் சொல்லும். ஆகவே விஞ்ஞானம்
முழுமைநிலை பெறவில்லை என்பதே நமக்கு
கிடைக்கும் பதில்.
பிண்டம் பற்றிய சிந்தனை இது:
…………………

‘அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் உள்ளது‘
இவ்வாக்கியத்தின் பொருள் உலகத்தில் எது
இருக்கின்றதோ, அது நமது உடலிலும்
இருக்கின்றது என்பதே.
அண்டம் — உலகம்
பிண்டம் — உடல்
இறை நம்பிக்கையாளர்களின் கூற்றின் படி
இறைவன், உலகை பஞ்ச பூதங்களைக்
கொண்டு உருவாக்கினான். அறிவியலாளர்களின்
கூற்றின் படி, உலகம் பஞ்ச பூதங்களால்
உருவாகி இருக்கின்றது.
பஞ்ச பூதங்களைக் கொண்டு உலகம்
இருக்கின்றது என்பதில் அவர்களுக்கு மாற்றுக்
கருத்துக்கள் இல்லை.
அப்பஞ்ச பூதங்கள் எனப்படுபவை,
நீர்
நெருப்பு
காற்று
நிலம்
ஆகாயம்
ஆகிய ஐந்தாகும்.
இப்பொழுது அண்டத்தில் உள்ளது பிண்டத்தில்
உள்ளது என்கின்றார்களே அது சரியா?
நெருப்பு – நம்முடைய உடல் ஒரு குறிப்பிட்ட
அளவு சூட்டுடனேயே இருக்க வேண்டி
இருக்கின்றது. வெப்பம் கூடினாலோ
குறைந்தாலோ (காய்ச்சல் அல்லது நோய்கள்)
உடலுக்கு தீங்கு வந்து விடுகின்றது.
வெப்பமே இல்லாத உடல் சடலமாக மாறி
விடுகின்றது. எனவே உடல் இயங்க வெப்பம்
தேவைப் படுகின்றது. அதாவது நெருப்பு. அது
உடலில் இருக்கின்றது.
நீர் – திரவங்கள் நமது உடலில் இருக்கின்றன.
அவைகள் இல்லாது போனால் உடலின்
இயக்கம் நின்று விடும்.உடல் பழுதடைந்து
அழிந்து விடும். எனவே நீரும் உடலின்
இயக்கத்திற்கு இன்றியமையாது இருக்கின்றது.
காற்று – உடல் இயங்க காற்று மிக
முக்கியமானதொன்றாகும். காற்று
இல்லையெனில் சுவாசிக்க முடியாது.
சுவாசிக்காது உடலால் இயங்க முடியாது.
ஆகாயம் – வெற்றிடம். உடலினுள்
வெற்றிடங்கள் இருக்கின்றன…சுவாசப் பைகள்
போன்றவைகள் உதாரணத்திற்கு.
வெற்றிடங்களும் உடலின் இயக்கத்திற்கும்
அமைப்பிற்கும் இன்றியமையாது இருக்கின்றன.
நிலம் – உலகம் நிலத்தால் அமைந்து
இருப்பதனைப் போல மனித உடலும்
நிலத்தைப் போலவே அமைந்து இருக்கின்றது.
உயிர் இருக்கும் வரை இயங்கிக் கொண்டு
இருக்கும் உடல், உயிர் பிரிந்தப் பின்னர் சில
நாட்களுக்குள் மண்ணோடு மண்ணாகி
விடுகின்றது. அதாவது நிலம் நிலத்தைச்
சேர்ந்து விடுகின்றது.
இதன் மூலம் உலகம் எதனைக் கொண்டு
வடிவமைக்கப்பட்டு இருக்கின்றதோ அவற்றை
வைத்தே தான் உடலும் வடிவமைக்கப்பட்ட
ு இருக்கின்றது என்பது தெரிகின்றது.
அதாவது,
உலகம் – பேருடல் – பெரிய உடல்
மனித உடல் – சிற்றுடல் – சிறிய உடல்
அண்டத்தில் உள்ள உலகங்கள் எல்லாம்
பிண்டத்தில் இருக்கிறது என்று அபிதான
சிந்தாமணி பட்டியலிட்டிருக்கிறது அவை :
……………………..

அண்டத்தில் உள்ளவை எல்லாம் பிண்டத்தில்
உண்டு என்பது புராண உண்மைகளுள் ஒன்று.
எவ்வகையெனின்; உள்ளங்கால்- அதலம்,
கணைக்கால்- விதலம், முழந்தாள் -சுதலம்,
அதற்கு மேல் -நிதலம், ஊருதலாதலம்,
குஹ்யம்- ரசாதலம், இடை -பாதாளம், நாபி –
பூலோகம், வயிறு -புவர் லோகம், இருதயம்-
சுவர்க்கம், தோள் -மகாலோகம், முகம்-
ஜனலோகம், நெற்றி-போலோகம், சிரம் –
சத்தியலோகம், திரிகோணம் -மேரு,
கீழ்க்கோணம் -மந்தரம், அக்கோணத்துக்கு
வலப்பக்கம்- கைலை, இடப்பக்கம் -இமயம்,
மேற்பக்கம் -நிஷதம், தென்பக்கம் -கந்தமாதனம்,
இடக்கையின் உள்ளங்கைகளில் உள்ள ரேகைகள்
-வருண பருவதம், எலும்பு -நாவலந் தீவு,
மேஷத் -சாகத்தீவு, தசை- குசத்தீவு, நரம்பு-
கிரௌஞ்சத் தீவு, தொக்குச் -சான்மலித் தீவு,
மயிர்த்திரள் -பிலக்ஷத்தீவு, உகிர்
புஷ்கரத்தீவு, மூத்திரம்- உப்புக்கடல், நீர்-
பாற்கடல், கபம் -சுராக்கடல், மச்சை –
நெய்க்கடல், வாய் நீர்- கருப்பங்கடல், இரத்தம் –
தயிர்க்கடல், வாயில் உண்டாம் மதுரப்புனல் –
சுத்தோதகம், சரீரத்தில் இரண்டு சக்கரங்கள்
உள்ளன. அவற்றில் நாதசக்கரத்தில்-
சூரியனும், பிந்து சக்கரத்தில்- சந்திரனும்
நேத்திரங்களும் -அங்காரகனும், இருதயத்தில் –
புதனும், வாக்கில் -குருவும், சுக்கிலத்தில் –
சுக்கிரனும், நாபியில் -சனியும், முகத்தில் –
ராகுவும், காலில் -கேதுவும் இருக்கின்றனர் –
என்கிறது அபிதான சிந்தாமணி.
…………………..

திருமூலர் கருத்து:
வாயுவு மேலே மருவிற்று ஆகாசம்
காயுமோர் அண்டத்தில் கண்டகுறிப்பிது
பாயுமோர் ஆயிரத் தெட்டுக்கும் இப்படி
பாயுமோர் பிண்டம் பரிந்துநீ பார்த்திடே.
திருமூலர் – 476
இவ்வண்டத்தின் மேல் பூமியும்
பூமியின்மேல் நீரும், நீரின்மேல்
அக்கினியும்,அக்கினியின்மேல்
வாயுவும்,வாயுவின் மேல் ஆகாசமும்
நிற்கிறது. இது ஒரு அண்டத்தை
பற்றியதாகும். இதுபோல் ஆயிரத்தெட்டு
அண்டங்கள் உள்ளன என்று கூறுகிறார். இனி
பிண்ட உற்பத்தியை கேள் என்று
பார்த்திடு மாங்கிக்ஷம் பரித்த பிருதிவி
வார்த்திடு ரத்தம் வழலையில் நீராச்சு
தோற்றிடு வாய்வு சுழண்டேறிப் புக்கிற்று
காற்றோடு தீயுங் கலந்தே விரும்பிற்றே.
திருமூலர் – 477
இவ்வுடலில் உள்ள மாமிசங்கள் பூமியின்
தத்துவமாகும், சளி,ரத்தம் நீரின்
தத்துவமாகும், உடலை சூடு உண்டாக்குவது
அக்கினியின் தத்துவமாகும்,
நாம் விடும் மூச்சு வாயுவின் தத்துவமாகும்.
நம் உடலில் அக்கினியானது வாயுவுடன்
கூடியே உள்ளே செல்கிறது.
கலந்தே செவிக்குள்ளே கண்டு துவாதச
மலந்தே இடையின் ரண்டாச்சு வாரிதி
குலந்தே சுழிமுனை கூடிற்று மேருவாய்த்
தலந்தே பிண்டத்தில் சார்ந்த முறையாச்சே.
திருமூலர் – 478
அதாவது அண்டமான வெளிமண்டலங்கள்
பிண்டமான நம் உடலிலும் உள்ளது என்பதை
கூறுகிறார்.
பூமி – மாமிசமாகவும்
நீர் – இரத்தமாகவும்
நெருப்பு – நம் உடல் சூடாகவும்.
ஆகாயம் – கேட்டுக்கும் சக்தியாகவும்.
கடல் – வியர்வையாகவும், சிறுநீராகவும்
மாகாமேரு (பூமியின் மேற்ப்பக்கம்) –
கழுமுனையாகவும்
………………………….

வள்ளலார் கருத்து:
அண்டமும் பிண்டமும் கடவுளும் !
அண்டம் எல்லாம் பிண்டம் எல்லாம் உயிர்கள்
எல்லாம் பொருள்கள்
ஆன வெலாம் இடங்கள் எல்லாம் நீக்கமற
நிறைந்தே
கொண்டவெலாங் கொண்ட வெலாங் கொண்டு
கொண்டு மேலும்
கொள்வதற்கே இடங் கொடுத்துக் கொண்டு
சலிப்பின்றிக்
கண்டமெலாங் கடந்து நின்றே அகண்டமதாய்
அதுவுங்
கடந்த வெளியாய் அதுவும் கடந்த தனி
வெளியாம்
ஒண்டகு சிற்றம்பலத்தே யெல்லாம்
வல்லவராய்
ஓங்குகின்ற தனிக்கடவுள் ஒருவர் உண்டே
கண்டீர் !
கிளக்கின்ற மறை அளவை ஆகமப் பேரளவைக்
கிளத்திடு மெய்ச் சாதனமாம் அளவை அறிவு
அளவை
விளக்கும் இந்த அளவைகளைக் கொண்டு
நெடுங்காலம்
மேலவர்கள் அளந்து அளந்து மெலிகின்றார்
ஆங்கே
அளக்கின்ற கருவிகள் எல்லாம் தேய்ந்திடக்
கண்டாரேல்
அன்றி ஒருவாறேனும் அளவு கண்டார்
இலையே
துளக்கமுறு சிற்றறிவால் ஒருவாறு என்று
உரைத்தேன்
சொன்ன வெளிவரை யேனும் துணித்து
அளக்கப் படுமோ !
நாம் வாழும் அண்டம் போல் பல கோடி
அண்டங்கள் உள்ளன .அதில் உயிர்கள், உயிர்கள்
வாழும் உடம்புகள்,அதற்கு தேவையான
பொருள்கள்,அதற்கு உண்டான
இடங்கள்,எல்லாம் இடைவெளி இல்லாமல்
நிறைந்து கொண்டும் மேலும் மேலும் விரிந்து
கொண்டும்,இடம் கொடுத்துக் கொண்டும்
சலிப்பு இல்லாமல் கடந்து நின்றே செயல்
பட்டுக் கொண்டே இருக்கும் ஒரு மெய்ப்
பொருள் உண்டு.அது பலகோடி
அண்டங்களிலும் பலகோடி வெளிகளில் உள்ள
எல்லா அணுக்களிலும், உள் இருந்து செயல்
பட்டுக் கொண்டு இருக்கின்றது.அது இயங்கும்
இயக்கம் இடமானது அருள் பெரு
வெளியில்,எல்லா அண்டங்களையும் தன்னுள்
அடக்கிக் கொண்டு செயல்படும் சிற்றம்பலம்
என்னும் இடத்தில் எல்லாம் வல்லவராய் ,ஓங்கி
இடைவிடாது செயலாற்றிக் கொண்டு
இருக்கும் தனிக் கடவுள் ஒருவரே !
அருட்பெருஞ் ஜோதி ஆண்டவர் என்னும் ஒளிக்
🙏🏾கடவுளாகும் என்கிறார் வள்ளலார்.🙏🏾

சித்தர்கள் சொன்ன குண்டலினி சக்தி


(பல அபூர்வ யோக நூல்களில் இருந்து தொகுக்கப்பட்ட குண்டலினி சக்தி பற்றிய உண்மை ரகசியங்களை நம் அன்பர்களுக்காக முழுமையாக இன்று பதிவிடுகிறேன். அவசியம் படித்து உணர்ந்து கொள்ளுங்கள்.)

குண்டலினி என நமது சித்தர்களால் வழங்கப்பட்ட இந்த பொருளுக்கு பல்வேறு பரி பாசை பெயர்கள் உண்டு. அவற்றுள் சிலவற்றை காண்போம்.

-திருவடி, வன்னி, வாலை, வாசி, அகர
உகரங்கள், லிங்கம், மயிர் பாலம்,
வெட்டாத சக்கரம், திருவாடுதுறை, புருவநடு, இரவு பகல் அற்ற இடம், இரவு பகல் தோன்றும் இடம், சிற்சபை, ஓம், மூலாதாரம், மூல துவாரம், துவாரகை, ஹரி துவார், ஈசன் நுழை வாசல் இன்னும் பல பெயர்கள். ஞாபகத்திற்கு வந்தவை இவை.

நன்றாக கவனித்து பார்த்தீர்களானால்
ஒவ்வொரு பெயரும் மிக்க அர்த்தத்தை
கொண்டுள்ளவை.
ஒவ்வொன்றாக என்னால் முடிந்த வரை
சித்தர்களின் பார்வையில் எதை கண்டேன் என்பதை மட்டும் இன்று இந்த கட்டுரை சொல்லும்.

அகத்தியரின் “துறை அறி விளக்கம்” என்ற நூல் பழங்காலமாக ஞானாசிரியர்களின் கைகளில் மட்டும் தவழ்ந்து கொண்டு இருந்தது.

இன்னுமே அது ரகசியமாக தான் உள்ளது. இந்த நூலில் சுமார் 100 பாடல்களுக்கு மேல்
உள்ளது. இவை முழுக்க முழுக்க குண்டலினி பற்றி மட்டுமே பாடக்கூடியவை. அதில் இருந்து ஒரு பாடல். கைவசம் மூல நூல் இல்லாததால் ஞாபகத்திற்கு வந்த வரிகள் இங்கே.

“யாரும் அறிவார்கள் ஒன்பது வாசல் யாரும்
அறியார்கள் ஓர் வாசல்
அது கடையோர முன்வாசல்……”

“…..மூல முதல் ஆறு தளம் கீழே தள்ளி
முதிர்ந்து நின்ற மேல் ஆறு தளத்தை
நோக்கி….”

நாம் அனைவரும் ஆறு ஆதாரங்கள் உள்ளன
என்பதை அறிவோம். அவை மூலம் முதல்
துரியம் வரையாக உள்ளது. ஆனால் நம்
உடம்பில் 12 ஆதாரங்கள் உள்ளன என்பதை
அறிவீர்களா?

மேல் உள்ள பாடலில் “முதிர்ந்து நின்ற மேல்
ஆறு தளத்தை நோக்கி” என்ற வரி குறிப்பது
அதுவே. பரஞ்சோதி மகான் அவர்களின் “நான் கடவுள்” என்ற புத்தகத்தில் மூளையை சுற்றி ஆறு உறைகள் உள்ளதாகவும் அவையே மேல் ஆறு ஆதாரங்கள் என்றும் அவற்றின் மீதே முழுக்க முழுக்க தவம் செய்ய வேண்டும் என கூறுகிறார். அவரின் பயிற்சி முறைகளில் மூலாதாரம், ஆக்ஞை மட்டுமே உள்ளது.

மற்று இடைப்பட்ட ஆதாரங்கள் தவ பயிற்சி
கிடையாது.

மேலே உள்ள அகத்தியர் பாடலில்
“முதிர்ந்து நின்ற மேல் ஆறு தளத்தை நோக்கி”
என கூறுவதும் இதை பற்றி தான்.

மேலும் சில பெயர்கள்:


ஊசி முனை வாசல், நெற்றிக்கண், முப்பு,
நடராஜர், திருசிற்றம்பலம்,
சுழுமுனை , கரிமுகன்.

சரி, நல்லது, இவ்வளவு பெயர்களை தெரிந்து கொள்வதால் என்ன பயன்?

இந்த ஐயம் உங்களுக்கு எழலாம். உண்மை தான். ஆயினும் “கற்றது கைம்மண்” என்பதால் நான் அறிந்து கொண்ட பல பொருள்களை பரிமாற்றம் கொள்ள
ஒரு வாய்ப்பு. இந்த கேள்விக்கான பதிலை
இந்த தொடரின் இறுதியில் தெரிந்து
கொள்வீர்கள்.

நண்பர்களே, சித்தர்களின் குரலில் இன்றைய பதிவில் நான் அவ்வையின் ஞான குறள், விநாயகர் அகவல்,
சிவ வாக்கியர் பாடல்கள், அகத்தியர் பாடல்கள் , குடம்பை சித்தர், பட்டினத்தார் பாடல்கள், திருமந்திரம், திருஅருட்பா, திருக்குறள், ஞானரத்தின குறவஞ்சி மற்றும் பல நூல்களில் இருந்து குண்டலினி பற்றிய செய்திகளை கொடுக்க முயல்கிறேன். பல
உண்மைகளையும் தகவல்களையும் உணர்ந்து கொள்வீர்கள்.
நான் இங்கு மேற்கோளாக கொடுக்க இருப்பது நம் தமிழகத்தில் மிக சிறப்பான இடத்தை பெற்றுள்ள சித்தர்களின் பாடல்களை மட்டுமே.

நமது உடம்பில் சூரிய மண்டலம், சந்திர
மண்டலம், அக்னி மண்டலம் என மூன்று
மண்டலங்கள் உள்ளன. இவை முறையே
பிங்கலை, இடகலை, சுழுமுனை ஆகிய
நாடிகளால் குறிக்க படுகின்றன.

ஒரு அவ்வையின் விநாயகர் அகவல் பாடலை பார்ப்போம்.

“இடைபிங்கலையின் எழுத்து அறிவித்து

கடையிற் சுழுமுனை கபாலமும் காட்டி

மூன்று மண்டலத்தின் முட்டிய தூணின்

நான்றெழு பாம்பின் நாவில் உணர்த்தி…”

நமது ஆன்மிக பயணம் இந்த நாடிகளை
சார்ந்தே அமைந்துள்ளன.

நமது உடம்பில் ஒன்பது வாயில்கள் உள்ளன
என்பதை அறிவோம். எங்கெங்கெல்லாம்
வாயில் உள்ளனவோ அங்கெல்லாம் வாயு
செல்லும்.

நமது உடம்பில் ஈசன் நுழை வாயில் அல்லது ஊசி முனை வாசல் அல்லது மூல துவாரம் என அழைக்க படக்கூடிய ஒரு வாசல் உள்ளது. இந்த வாசலின் வழியாக
பிராண வாயுவை கும்பகம் ரேசகம் என பயிற்சி செய்வதையே பிரணாயாம பயிற்சி என நம் முன்னோர்கள் கொடுத்தார்கள்.

மூக்கின் வழியாக மூச்சை இழுத்தி நிறுத்தி
பின் விடுவது அல்ல இந்த பயிற்சி. இந்த பயிற்சி மூல வாயிலின் வழியாக செய்ய வேண்டியது.

நமது உடம்பில் எல்லா இயக்கங்களுமே பல
வாயுக்களை அடிப்படியாக கொண்டது.

உணவை செரிக்க ஒரு வாயு, குரல்
எழுப்புவது ஒரு வாயு . கழிவுகளை வெளியே
தள்ளுவது அபான வாயு இன்னும் பல.

தனஞ்சய வாயு என்ற வாயு ஒன்று உண்டு.

உயிர் பிரியும் போது இந்த வாயு உடலை
விட்டு வெளியேறுகிறது. இந்த வாயு உடலில் இருக்கும் வரை மட்டும் தான் உயிர் இந்த உடம்பில் இருக்கும்.

இப்போது அவ்வையின் பாடலை பார்ப்போம்.

இறைவன் அவ்வைக்கு குருவாக வந்து தீக்ஷை அளித்ததாக விநாயகர் அகவல் பாடல்கள் எழுத பட்டு இருக்கும்.

“இடைபிங்கலையின் எழுத்து அறிவித்து…”

இடை பிங்கலை என்ற நாடிகளை வலது இடது சுவாச மூச்சு குழல்களை குறிப்பதாக இந்த உலகம் கூறுகிறது. அப்படியாயின் அதை அறிவிக்க வேண்டிய அவசியம் இல்லை. மிக தெளிவாக தெரிந்த ஒரு விசயமாகி விடும் இல்லையா? அதுவும் இறைவன் வந்து தான் காட்டுகிறானாம்.

“கடையிற் சுழுமுனை கபாலமும் காட்டி..”

“சுழுமுனை கடையில் கபாலமும் காட்டி”
என இதை படிக்க வேண்டும்.

கபாலம் எல்லோருக்கும் தெரிந்த ஒன்று. அது என்ன சுழுமுனை கடையில் கபாலம் காட்டுவது?

நமது உலகிற்கு சூரியன், சந்திரன், அவற்றில் இருந்து தோன்றும் அக்னி ஆகிய மூன்றும் மிக அடிப்படையானது. அவற்றிற்கு என்ன என்ன நிகழ்ச்சிகள் நடக்கிறது? உதயம், அஸ்தமனம், அமாவாசை, பௌர்ணமி, கிரகணம் ஆகிய
நிகழ்ச்சிகள். அண்டத்தில் நடக்கும் இந்த
நிகழ்ச்சிகளை பிண்டத்திலும் செயல்
படுத்துவதே நாம் செய்ய கூடிய ஆன்மிக
பயிற்சிகளின் நோக்கம்.

இட கலை = சந்திரன்

பிங்கலை = சூரியன்

அக்னி கலை = சுழுமுனை

இந்த மூன்று நாடிகளின் வழியாக அமாவாசை, பௌர்ணமி, கிரகணம் ஆகியவற்றை உருவாக வேண்டும்.

சரி எவ்வாறு உருவாக்குவது?

காற்றின் மூலம். அதுவே “பிராண யாம பயிற்சி” என முன்னோர்கள் கொடுத்துள்ளனர். இது இரு மூக்கு துளைகளின் வழியாக காற்றை இழுத்து
நிறுத்தி வெளிவிட்டு செய்யும் பயிற்சி அல்ல.

“மூன்று மண்டலத்தின் முட்டிய தூணின்…”

மூன்று மண்டலம் என்பது சூரிய, சந்திர,
அக்னி மண்டலங்களை குறிக்கிறது.

இந்த மூன்று மண்டலங்களை முட்டி நிற்கும்
தூண் எது?

நான்றெழு பாம்பு என்கிறார் அவ்வை. பாம்பு என்பது குண்டலியை குறிக்கும்.

இந்த பாடலில் இருந்து குண்டலி என்பது இட
பிங்கலை சுழுமுனை நாடிகளுக்கு அருகிலும் ஊடுருவியும் இருப்பதாக புலப்படுகிறது.

நண்பர்களே, கீழ் வரும் பாடல்களை
கவனியுங்கள்.

“ஈரைந்து வாசலில் மயங்கிய வாயுவை
ஈசன்தன் வாயிலில் ஏற்று”
– அவ்வை குறள்

“மூலத்து வாரத்து மூளு மொருவனை
மேலைத் துவாரத்து மேலுற நோக்கிமுற்
காலுற்றுக் காலனைக் காய்ந்தங் கியோகமாய்
ஞாலக் கடவூர் நலமா யிருந்ததே.”
– திருமந்திரம்

“புறப்பட்டுப் புக்குத் திரிகின்ற வாயுவை
நெறிப்பட வுள்ளே நின் மலமாக்கி(நிர்மலமாக்கி)
லுறுப்புச் சிவக்கும் ரோமங்கறுக்கும்
புறப்பட்டுப் போகான் புரிசடையோனே.”
– திருமந்திரம்

முதல் பாடல் ஈசன் வாயில், இரண்டாவது
பாடல் மூல துவாரம் என குறிக்கப்பட கூடிய
இந்த வாசலின் வழியாக பிராண வாயுவை
ஏற்ற வேண்டும்.

சித்தர்கள் “கால்” என்ற வார்த்தையை காற்றை குறிக்க உபயோக படுத்தி இருப்பார்கள்.

இரண்டாவது பாடல் = “காலுற்ற…”
மேற்கண்ட பாடல்களிலிருந்து இட பிங்கலை, சுழுமுனை நாடிகளின் வழியாக வாயுவைப் பொருந்தி பயிற்சிகள் செய்ய சொல்வதாக தெரிகிறது.

ஈரைந்து வாசலில்….

நன்றாக கவனியுங்கள். ஈரைந்து = இரு +
ஐந்து. = பத்து. அவ்வை பத்து வாயில்களை
சொல்கிறார். என்ன இது? ஒன்பது வாயில்
தானே நமக்கு தெரியும்?

அது என்ன பத்தாவது வாயில்?

அதுவே ஈசன்
வாயில் அல்லது மூல துவாரம்.

சரி ஈசன் வாயிலில் எப்படி பிராண வாயுவை
ஏற்றுவது?

“மன்மனம் எங்குண்டு வாயுவும் அங்குண்டு
மன்மனம் எங்கில்லை வாயுவும் அங்கில்லை”

நம் மனம் எங்கெங்கெல்லாம் பாய்கிறதோ
அங்கெல்லாம் பிராண வாயு பாயும். எனவே
மனதாலே ஈசன் வாயிலை நினைத்தால் பிராண வாயு ஏறும்.

இடைபிங்கலையின் எழுத்து அறிவித்து …

நண்பர்களே, அதென்ன இட பிங்கலையின்
எழுத்து?

நம் தாய் தமிழ் மொழியில் ஒரு மிகப்பெரிய சிறப்பம்சம் உண்டு.

அது என்ன வென்றால் மொழியின்
எழுத்துக்களிலே இறைவனை பற்றிய
ரகசியங்களை விட்டு சென்ற மொழி தமிழ்
மொழி மட்டும் தான். உயிர் எழுத்து, மெய்
எழுத்து ஆகிய இரண்டு வகைகள் மட்டுமே
பொதுவாக உண்டு.

இவை இரண்டும் ஒட்டாமல் தனி தனியாக உள்ளன. ஆனால் தமிழ் மொழியில் உயிர்மெய் எழுத்துக்கள் உண்டு.

உயிரும் மெய்யும் ஒன்றோடொன்று கலந்து
இயங்குவதை எழுத்துக்களிலேயே விட்டு
சென்று விட்டனர். அது மட்டுமா?

ஆயுத எழுத்து என சொல்ல கூடிய ஃ என்ற எழுத்து தமிழில் மட்டும் தான் உள்ளது.

நண்பர்களே, இந்த எழுத்து ஒரு உபயோகம்
இல்லாத எழுத்து என எத்தனை பேர் நினைந்து இருப்பீர்கள்?

நான் கூட ஆரம்பித்தில் அப்படி தான்
நினைத்தேன். உடல், உயிர் ஆகியவற்றை
பார்த்து விட்டோம்.

ஆனால் ஆன்மாவை காணோமே?

ஃ ஆன்மாவை குறிக்கிறது நண்பர்களே.
அது உடலோடும் உயிரோடும் ஒட்டாது
தனியே இருக்கிறது. வள்ளலார் ஒரு பாடலில் கூறுவார்.

“வானத்தில் மயில் ஆட கண்டேன். மயில்
குயில் ஆச்சுதடி அக்கச்சி மயில் குயில்
ஆச்சுதடி”

நாம் தவத்தில் மூல வாசலை திறந்து, ஆழ்ந்து செல்ல செல்ல ஒளி, ஒலி அனுபவங்களை பெறுவோம். கோயிலில் என்ன நடக்கிறது?

கருவறை வாசல் பூசைக்கு முன் மூடி இருக்கிறது. வாசல் திறந்ததும் தீபம்
காட்டுகிறார்கள். கூடவே மணியும்
அடிக்கிறார்கள்.

பின் இறைவன் தரிசனம் கிடைக்கிறது. இதுவேதான் நம் தவத்திலும் நடக்கிறது.
இப்போது எழுத்துக்கு வருவோம்.

மேற்சொன்ன வள்ளலார் பாடலில் “அக்கச்சி”
என்ற வார்த்தையை கூறி இருக்கிறார்.

“அக்கச்சி = அக் + ஆச்சி”. (ஃ +ஆச்சி). அவர்
அக் என சொன்னது இந்த ஆயுத எழுத்தை
தான் நண்பர்களே.

சரி, இட பிங்கலைகளுக்கு எழுத்து
இருக்கிறதா? அப்படியாயின் அவை எந்த
எழுத்துக்கள்?

அ = பிங்கலை

உ = இடகலை

ம் = சுழுமுனை

இந்த மூன்றையும் தவத்தினாலே ஒன்றாக
கலந்தால் அதுவே ஓம் ஆகிறது.

8-2 தத்துவம் என ஆன்மிகத்தில் உள்ளவர்கள்…
தேடிக்கொண்டு இருக்கக்கூடிய ஒரு மிக
ரகசியமான தத்துவம் இது.

தமிழில் ௮ -8 ௨ – 2 குறிக்கிறது.

அவ்வை தன் ஞான குறளில் கூறுவார்.

“கூறும் பொருள் இது அகர உகாரங்கள்
…மகரம் குழல் வழி ஓடிட..” என வரும்.

அது ஏன் கூறும் பொருள் என கூற
வேண்டும்?

குரு வானவர் இடகலையையும்
பிங்கலையையும் காட்டி கொடுக்க வேண்டும்.

இதையே தான் “இடைபிங்கலையின் எழுத்து
அறிவித்து …” விநாயகர் அகவலில்
கூறுகிறது.

“குரு வடிவாகி குவலயந்தன்னில்
திருவடி வைத்து…”

“கடையிற் சுழுமுனை கபாலமும் காட்டி..”
இதன் விளக்கம் பார்ப்போம்.

“எல்லா கலையும் இடை பிங்கலை நடுச்
சொல்லா நடு நாடி யூடே தொடர் மூலஞ்
செல்லா எழுப்பி சிரத்துடன் சேர்தலால்
நல்லோர் திருவடி நண்ணி நிற்போரே”

நடு நாடி = சுழுமுனை

சொல்லா நடு நாடி = ஆசான் மூலம் உணர
வேண்டிய நாடி நண்பர்களே, நீங்கள் சரஸ்வதி படம் பார்த்து இருப்பீர்கள்.

அவர் எதில் அமர்ந்து இருக்கிறார்?

ஆயிரம் இதழ் தாமரை மலரில். தாமரை
எவ்வாறு இருக்கிறது? நன்றாக மலர்ந்து விரிந்து இருக்கிறது.

சுழுமுனையின் இறுதி மலர் போன்ற
மூளையில் முடிகிறது. ப்ரஹ்ம ரந்திரம் என்று சொல்ல கூடியது அது தான். நமது
தற்போதைய மூளை மொட்டு போல சுருங்கி
இருக்கிறது. நாம் இந்த நாடிகளின் வழியாக
பிராண வாயுவை மேல் ஏற்ற மூளை மலராக
விரிகிறது. அப்போது வெறும் ஹார்மோனை
மட்டுமே சுரக்க கூடிய சுரப்பிகள் அமுதத்தை
சுரக்க ஆரம்பிக்கும்.

சிவ பெருமானுடைய படத்தை பார்த்து
இருப்பீர்கள். அவர் தலையில் பாம்பு
இருக்கிறது. அது குண்டலினியை குறிக்கும்.

பிறை சந்திரன் இருக்கும்.. தலையில் இருந்து அமுத கங்கை வழிந்து கொண்டு இருக்கும்.

நாம் மூன்று மண்டலங்களை பார்த்தோம்.

சூரிய மண்டலம், சந்திர மண்டலம் மற்றும்
அக்னி மண்டலம். இந்த பிறை சந்திரன் சந்திர மண்டலத்தை குறிக்கிறது.

பிறையாக இருக்க கூடிய இந்த சந்திரனை முழு மதியாக ஆக வேண்டும். எவ்வாறு?

மூன்று நாடிகளும் மூலாதாரத்தில் போய்
முடிகிறது. பிராண வாயுவை இந்த நாடிகளின் மூலம் ஏற்ற ஏற்ற அது மூலாதாரத்தில் மூண்டு எழக்கூடிய மூலக்கனலை நன்றாக கிளர்ந்து எரிய செய்யும்.

இந்த கனலின் வெப்பம் தாங்காது மூளை
மலராக விரியும். சந்திர மண்டலத்தில் இருக்க கூடிய அமுத கலை அமுதத்தை சுரக்க ஆரம்பிக்கும். அதை தான் சிவனின் தலையில் இருக்கும் கங்கை குறிக்கிறது.

மூல நெருப்பை இட்டு முட்டி நிலா
மண்டபத்தில்.
பாலை இறுக்கி உண்டு பசி ஒழிவது எக்காலம்?
– பத்திரகிரியார்.

அவ்வை “அமுத நிலை” என்ற ஒரு
வார்த்தையை உபோயோக படுத்தி இருப்பதை
கீழ்வரும் பாடலில் கவனியுங்கள்.

குண்டலி அதனிற் கூடிய அசபை
விண்டு எழும் மந்திரம் வெளிப்பட உரைத்து

மூலாதாரத்தின் மூண்டெழு கனலை
காலால் எழுப்பும் கருத்து அறிவித்தே

அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும்
குமுத சகாயன் குணத்தையும் கூறி..”

குமுத சகாயன் = குமுத மலரில் வசிக்க
கூடிய இறைவன்.

நண்பர்களே, குமுத மலருக்கு ஒரு தனி சிறப்பு உண்டு. அது சந்திர ஒளியை வாங்கி மலரும்.

இறைவன் சந்திர மண்டலத்தில் வசிக்கிறான் என்பதை இந்த வாக்கியம் மூலம் மிக எளிதாக விளக்கி விடுகிறார்.

வள்ளுவர் தன் முதல் அதிகாரத்தில்,
“மலர் மிசை ஏகினான் மானடி சேர்ந்தார்
நிலமிசை நீடு வாழ்வார்”
என கூறுகிறார்.

இது எந்த மலர் நண்பர்களே? குமுத மலர்
தான்.

நண்பர்களே, அண்டத்தில் இப்போது பார்ப்போம்.

இந்த உலகம் உய்வதற்கு மிக முக்கிய
கிரகங்கள் சூரியன் மற்றும் சந்திரன். சூரியன் உயிருக்கு ஆதாரமாகவும் சந்திரன் மனதிற்கு ஆதாரமாகவும் உள்ளன. உயிர்கள் தோன்றவும் அவற்றை பராமரிக்க தேவையான வற்றையும்.உருவாக்குவது இவை தான்.

சந்திரன் பெண் அம்சமாக கூறப்படுகிறது. ஏன்?

பெண்களின் வேறுவேறான பருவ
மாற்றஙகளுக்கு சந்திரனே காரணம்.
மாதவிடாய் சுழற்சிக்கும் சந்திரனின்
சுழற்சிக்கும் மிக நெருங்கிய தொடர்பு உண்டு.

சாதகத்தில் ராசி சக்கரம் என்ற ஒன்று உண்டு. ரா என்பது ராகுவையும் சி என்பது சிகி அல்லது கேதுவையும் குறிக்கும்.

சாதகத்திற்கு குண்டலினி என்ற பெயர் உண்டு.

நண்பர்களே ராகு, கேது ஆகியவை இரண்டாக இருந்தாலும் அவை ஒரு பாம்பிலிருந்து உண்டானவை. பாம்பு எங்கிருந்தாலும் அது குண்டலினியை குறிக்கும்.

சரி, ராகு கேது எங்கே உள்ளன? சாதகம் என்ன கூறுகிறது?

சூரியன், சந்திரன் ஆகியவற்றின் பாதைகளின் ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஏற்படும் வெட்டு புள்ளிகள் என்கின்றது. நிழல் கிரகஙகள் என்கின்றது.

சூரியனின் கரும் புள்ளிகளிலிருந்து வரக்கூடிய அலைகள். ராகு கேது
ஆகியவையே ஆன்மீக முன்னேற்றத்திக்கு
காரணமாகவும் முக்திக்கு அடிப்படையாகவும் அமைவதாக
சாதகத்தில் கூறப்படுகிறது. ராகு கேது இவை சூரிய சந்திரனை சார்ந்தே அமைந்துள்ளது.

இட பிங்கலை, சுழுமுனை நாடிகளை ஆசான்
மூலம் தெரிந்து கொண்டால் குண்டலினி
அல்லது சிற்சபை எதுவென்றும் பிரபஞ்சத்தில் எங்கோ ஒரு கேள்வி எழுப்பினால் எங்கிருந்தோ ஒரு விடை கிடைத்து விடும் !அந்த விடை டி.வி. மூலம் வரும் ஒரு விளம்பரமாக கூட இருக்கலாம் உன்னித்து கவனித்தால் விடை வரும் வழி தெரிந்து விடும் ! மனம் தெளிவாகலாம்

சக்தி(பார்வதி) என்பது குண்டலினி (மூலாதாரம்) வழியாக, ஆறு சக்கரங்களையும் கடந்து மேலே சிவத்துடன் கலப்பதே(அர்த்தநாரி) ஞான நிலை. ஜீவாத்மாவானது பரமாத்மாவுடன் கலப்பது(அத்வைதம்). இதையும் சிவலிங்கம் உணர்த்துகிறது.

நாம் உட்கார்ந்து நமது உடலை உற்று நோக்குவோம். நம் இடை சிறுத்துக் குறுகி இருக்கும்.இதனை லிங்கத்தின் அடிப்பீடமாக அமைத்தார்கள்.நம் உந்தியின் கீழ் 2.5 அங்குலத்தில் உட்புறம் இடம் சத்தியலோகம் என்பர்.அங்கு ஒரு பையுள்ளது அது தாமரை மொட்டுப்போல் இருக்கும் அதை தாமரை மலர் என்பர் அதிலிருக்கும் சுக்கிலம் இளமையில் மஞ்சள் நிறமாகவும் வாலிபத்தில் வெண்மை நிறமாகவும் மாறும் இதை மானச தடாகம் என்பர் அதில் ஒர் ஆவி காம உணர்ச்சியை உண்டாக்கி புணர்ச்சியில் சுக்கிலத்தை வெளியேற்றும்.

இதைப் படைத்தல் கர்த்தாவாகிய பிரம்மா என்றனர் உந்தியிலிருந்து ஒருநாடி அங்கு சென்று சேர்வதால் விஷ்ணுவின் உந்தியில் பிரம்மா தோன்றினார் என்றனர் நம் உடலின் இடைக்குமேல் மார்பு அகன்று இருக்கும் இதனை லிங்கத்தின் மேல்பீடமாக அமைத்தார்கள்.

நம் உந்திக்கு மேல் 2.5 அங்குலத்துக்கு உட்புறம் உள்ள இடத்திற்கு வைகுண்டம் என்றனர் அங்கு நாம் உண்ணும் உணவு 2மணி நேரத்தில் ஜீரணித்துப் பால்போல் குழம்பாயிருக்கும் இதைத் திருப்பாற்கடல் என்றனர்.

இதன் மேல் ஆலிலை மாதிரி ஒரு சவ்வு மூடியிருப்பதால் இதனை ஆலிலை என்றனர். இதனுள் ஒருநாடி சுற்றித்தலையைத் தூக்கி கொண்டிருப்பதால் அதனை ஆதிசேஷன் என்றனர். இதன் மேல் ஒரு சீதளநாடி செல்வதை விஷ்ணு என்பார்கள்.இதை தான் ஆதிசேஷன் மேல் விஷ்ணு பள்ளி கொண்டிருக்கின்றார் என்கின்றனர்.

இது நாம் உண்ணும் ஆகாரத்தை சரியான முறையில் சீரணித்து நம் உடலை திடமாகவும் பலமாகவும் வைத்திருக்க உதவுவதால் இதனை காத்தல் கர்த்தா வாகிய விஷ்ணு என்றனர் நம் உடல் மார்புக்குமேல் சிரசு வரையில் கழுத்தும் சிரசும் திரண்டு உருண்டையாக இருக்கும் இதனை குழவிக்கல் ரூபமாய் உருவகித்து லிங்கத்தின் தலையை அமைத்தார்கள்.

நம் நெற்றியில் புருவ நடுவில் உட்புறம் உள்ள இடத்திற்குக் கைலயங்கிரி என்றனர் அங்கு அக்னி நாடி ஆடிக்கொண்டிருப்பதை சிவன் நடனம் ஆடுகிறார் என்றனர்.இங்கு ஆயிரமாயிரம் சிந்தனைகளும் எண்ணங்களும் தோன்றி மறந்து அழிந்து போய் விடுகின்றன இதை அழித்தால் கர்த்தாவாகிய சிவன் என்றனர் லிங்கத்தின் கழுத்தில் 5தலைப்பாம்பு ஒன்று 3சுற்று சுற்றிகொண்டுள்ளது அது லிங்கத்தின் தலைக்குமேல் படம் எடுத்து கொண்டிருக்கிறது நம் உடலில் ஐம்புலன்கள் சிலசமயம் விஷமகுணத்தோடும் அவை செயல்படுவதால் 5தலை பாம்பு என்றனர்.இந்த புலன்களால்தான் பிரிக்க முடியாத பற்று பாசம் சுற்றம் உண்டானது இதனால் தான் பாம்பு லிங்கத்தை விட்டு பிரிக்கமுடியாதபடி மூன்று சுற்று சுற்றிகொண்டுள்ளது,உடலுக்கு சிரசே பிரதானம் அதனால் தான் லிங்கத்தின் தலைக்கு அபிஷேகம் செய்கிறார்கள்.

” சுவாசமது நீண்வருந் தோணி போல் அபானவாய்வு எழுந்தால் மாயாசக்தி நீளும் உதான்னுடைய பார்வையானால் கருவான சுவசலீலையாகுமே உயிர்வாழ்க்கை சுவாசம் என்று கூத்தனார் மனம்கிழந்தரே”

மூன்றாவது கண்

நீங்கள் இரண்டு கண்களின் வழியாகப் பார்க்கும்போது, ​​உடல் வழியாக நீங்கள் பார்க்கிறீர்கள். மூன்றாவது கண் உடல் உடலின் ஒரு பகுதி அல்ல. இது மறைக்கப்பட்ட இரண்டாவது உடலின் ஒரு பகுதி – நுட்பமான உடல், சுக்ஷ்மா ஷரிர். இது உடல் உடலில் ஒரு தொடர்புடைய இடத்தைக் கொண்டுள்ளது, ஆனால் அது அதன் ஒரு பகுதியாக இல்லை.
அதனால்தான் உடல் கண்களால் நீங்கள் பொருளைத் தவிர வேறு எதையும் பார்க்க முடியாது.
மூன்றாவது கண் செயல்பாட்டால் மட்டுமே நீங்கள் வேறு பரிமாணத்தை உள்ளிட முடியும். உடல் கண்களுக்கு கண்ணுக்குத் தெரியாத, ஆனால் நுட்பமான கண்களுக்குத் தெரியும் விஷயங்களை இப்போது நீங்கள் காணலாம்.
இப்போது மூன்றாவது கண் செயல்பாட்டால், ஒரு நபரை நீங்கள் பார்க்க முடிந்தால், நீங்கள் அவரது ஆத்மாவைப் பார்க்கிறீர்கள், அவருடைய ஆவிக்கு, அவருடைய உடலுக்கு அல்ல – நீங்கள் உடல் கண்களை வழியாக உடல் உடலைப் பார்ப்பது போல, ஆனால் நீங்கள் ஆன்மாவைப் பார்க்க முடியாது.
மூன்றாவது கண்ணால் நீங்கள் பார்க்கிறீர்கள், உடல் இல்லை, உடலில் வசிப்பவர். ஏனெனில் நுட்பமான இருப்பை நுட்பமான கண் வழியாக மட்டுமே காண முடியும்.
ஓஎஸ்ஹோ
[ஓஷோ ஒரு புதிய சன்யாசினுக்கு தனது பெயருடன் இணைக்கப்பட்ட ஒரு சிறப்பு தியானத்தை அளிக்கிறார் – தேவா விபா: தெய்வீக ஒளி ….]

நீங்கள் ஒவ்வொரு இரவும் ஒரு விஷயத்தைத் தொடங்க வேண்டும்: நீங்கள் தூங்குவதற்கு சற்று முன் இரண்டு புருவங்களுக்கிடையில் மூன்றாவது கண்ணுக்கு அருகில் ஒரு நீலச் சுடரை கற்பனை செய்து பாருங்கள் … ஒரு சிறிய நீலச் சுடர். அதை கற்பனை செய்துகொண்டு தூங்குங்கள்; வேறு எதுவும் செய்ய வேண்டியதில்லை. நீலச் சுடரைப் பார்த்துக் கொண்டே செல்லுங்கள்; இது தூக்கத்தில் ஆழமாக விழவும் உதவும். இது அதிகபட்சம் இரண்டு, மூன்று நிமிடங்கள் ஆகும். காலையில் நீங்கள் மீண்டும் தூக்கம் விட்டுவிட்டீர்கள், நீங்கள் விழித்திருக்கிறீர்கள் என்று உணரும்போது, ​​உடனடியாக கண்களைத் திறக்காதீர்கள். முதலில் இரண்டு, மூன்று நிமிடங்களுக்கு மீண்டும் நீலச் சுடரைப் பாருங்கள், பின்னர் கண்களைத் திறக்கவும்.
எனவே ஒவ்வொரு இரவும் நீங்கள் தூங்கச் செல்வதற்கு முன், படுக்கையில் படுத்துக் கொள்ளுங்கள், காத்திருங்கள்: இப்போது தூக்கம் வருகிறது என்று நீங்கள் உணரும்போது, ​​இப்போது அது விளிம்பில் உள்ளது, பின்னர் ஒளியை கற்பனை செய்து தூங்குங்கள். முக்கியமான விஷயம் என்னவென்றால், நீங்கள் விளிம்பில் இருக்கும்போது மட்டுமே அதை கற்பனை செய்ய வேண்டும்; அது குறிப்பிடத்தக்கதாகும். பின்னர் அது வெறுமனே மயக்கத்தில் நகர்கிறது மற்றும் மயக்கமடைந்து இரவு முழுவதும் அதைத் தக்க வைத்துக் கொள்கிறது. மீண்டும் காலையில், முதல் விஷயம், நீங்கள் மீண்டும் மயக்கத்திற்கு மிக நெருக்கமாக இருக்கிறீர்கள்: அந்த நீலச் சுடரைப் பாருங்கள். சில நாட்களில் அது மிகவும் இயற்கையாகவும் தெளிவாகவும் மாறும்.
முதலில் இது உங்கள் கற்பனை ஆனால் உண்மையான சுடரைக் கண்டுபிடிக்க கற்பனை உங்களுக்கு உதவுகிறது. உண்மையான சுடர் இருக்கிறது. கற்பனை வெறுமனே அதைக் கண்டுபிடிக்க உங்களுக்கு உதவுகிறது; அது எதையும் உருவாக்காது. உண்மையான இடம் கிடைத்தவுடன் கற்பனையை கைவிடலாம், பின்னர் நீங்கள் கண்களை மூடும் போதெல்லாம் நீங்கள் சுடரைக் காண முடியும். அந்தச் சுடர் உங்களை மிகவும் அமைதியாகவும் அமைதியாகவும் அமைதியாகவும் ஆக்கும்.
ஒரு மாதத்திற்குப் பிறகு சுடரைப் பற்றி சொல்லுங்கள். ஒரு மாதத்திற்கு அதை உள்ளே வைத்திருங்கள், மிமீ?

‘மரம்’ என்ற ஆங்கில வார்த்தை சமஸ்கிருத வேர் ‘தரு’ என்பதிலிருந்து வந்தது.
மரங்களுடன் ஒற்றுமையுடன் மேலும் மேலும் உணருங்கள்; அவை உங்களுக்கு மிகவும் உதவும். நீங்கள் மரங்களின் ஓரத்தில் தனியாக உட்கார்ந்திருக்கும் போதெல்லாம், உங்களை ஒரு மரமாக நினைத்துக்கொள்ளுங்கள், எந்த முயற்சியும் இல்லாமல் தியானம் மிக எளிதாக வரும்.
ஒரு மனிதனாக இருந்து தியானிப்பவனாக மாறுவது மிகவும் கடினம், ஏனென்றால் மனிதன் அடிப்படையில் மனம் என்பதால் ஒரு மனிதனாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் மனதிற்கு உதவுகிறது. ‘மனிதன்’ என்ற ஆங்கிலச் சொல் ‘மனு’ என்ற மனதின் சமஸ்கிருத மூலத்திலிருந்து வந்தது.
மனிதன் மனதைக் குறிக்கிறது, எனவே உங்களை ஒரு ஆணாக, ஒரு பெண்ணாக, அல்லது ஒரு மனிதனாக நினைக்கும் போது, ​​மனம் நீடிக்கிறது. அதை கைவிட எளிதான வழி வேறு வகையான யதார்த்தத்தைத் தொடங்குவதாகும்: ஒரு நதி அல்லது மரம் அல்லது நட்சத்திரமாக மாறுங்கள். நீங்கள் உங்கள் அடையாளத்தை மாற்றிக்கொள்கிறீர்கள், உங்கள் மனித மனதில் இருந்து நீங்கள் நழுவுகிறீர்கள். நீங்கள் ஒரு மரமாக இருக்கும்போது, ​​என்ன செய்வது என்று மனம் நஷ்டத்தில் இருக்கிறது; மரம் சிந்திக்க முடியாது.
இது உங்களுக்கு மிகவும் எளிதாக இருக்கும், அதனால்தான் நான் உங்களுக்கு இந்த பெயரை தருகிறேன்: இங்குள்ள மரங்களுடன் நட்பு கொள்ளத் தொடங்குங்கள், மிமீ? – அவர்கள் உங்கள் தோழர்கள்.
சில நேரங்களில் மரங்களுடன் நடனமாடுங்கள், மரங்களுடன் பாடுங்கள், சில சமயங்களில் மரங்களுடன் அமைதியாக இருங்கள். மனிதனை விட மரங்களுடன் அதிகம் தொடர்பு கொள்ளுங்கள், மேலும் மரங்களுடன் எவ்வாறு தொடர்புகொள்வது என்பதை நீங்கள் கற்றுக் கொண்டால், நீங்கள் மனிதர்களுடன் தொடர்பு கொள்ள முடியும். அவர்கள் கடினமான மக்கள் மற்றும் மரங்கள் மிகவும் அப்பாவி மக்கள் – மிகவும் புனிதர்கள்! –

ஓஷோ

சைவசித்தாந்த வினா -விடை

#திருச்சிற்றம்பலம்

#சைவசித்தாந்த #வினா #விடை

1. *சைவம் என்றால் என்ன*?

மனிதன் வாழ்வை வழிப்படுத்துவது சமயம்.

2. *சைவம் என்றால் என்ன*?

சைவம் என்றால் சிவ சம்பந்தமுடையது என்பது பொருள்.

3. *சைவ சமயம் எப்போது தோன்றியது*?

சைவ சமயம் அநாதியானது. அநாதி என்றால் ஆதி அற்றது (தொடக்கமில் காலம் தொட்டு) என்பது பொருள்.

4. *யார் சைவர்*?

சிவபெருமானை முழுமுதற் கடவுள் என உணர்ந்து வழிபடுபவரே சைவர்.

5. *சைவ சமயத்தின் முக்கிய நூல்கள் யாவை?*

பதினான்கு சாத்திரங்களும், பன்னிரண்டு திருமுறைகளும்.

6. *சமயக் குரவர்கள் யாவர்?*

1. திருஞான சம்பந்த நாயனார்

2. திருநாவுக்கரசு நாயனார்

3. சுந்தரமூர்த்தி நாயனார்

4. மாணிக்கவாசகர்

7. *அகச்சந்தானக் குரவர்கள் யாவர்?*

1. திருநந்தி தேவர்

2. சனற் குமாரமுனிவர்

3. சத்திய ஞான தரிசினிகள்

4. பரஞ்சோதி முனிகள்

8. *புறச்சந்தானக் குரவர்கள் யாவர்?*

1. ஸ்ரீ மெய்கண்டதேவ நாயனார்

2. அருள்நந்தி சிவாச்சாரியார்

3. மறைஞான சம்பந்தர் சுவாமிகள்

4. உமாபதி சிவாச்சாரியார்

9. *திருமுறை மற்றும் சாத்திரங்களின் அமைப்பு எவ்வாறு உள்ளது?*

திருமுறைகள் சிவபெருமானின் பெருமைகளை விளக்கும் புகழ் நூல்களாக் அமைந்திருக்கின்றன.

சாத்திரங்கள் சைவ சமயத்தின் கொள்கைகளை விளக்கும் பொருள் நூல்களாக அமைந்துள்ளன.

10. *திருமுறை என்ற சொல்லுக்குப் பொருள் யாது?*

முறை என்னும் சொல் நூல் என்னும் பொருளை உடையது. திருமுறை என்பது மாறாத செல்வத்தை மக்கள் எளிதாகப் பெறுவதற்கு வழிகாட்டும் நூல் என்பது பொருள்.

இந்நூல் 12 பகுதிகளாக தொகுக்கப் பெற்று பன்னிரு திருமுறை என்று போற்றப்படுகிறது.

11. *திருமுறைகள் பிரணவத்துள் அடங்கும் என்பதை விளக்குக?*

பன்னிரு திருமுறையில் முதல் பாடல் ‘தோடு’ என்னும் சொல்லுடன் தொடங்கி, இறுதிப் பாடலில் ‘உலகெலாம்’ என்ற சொல்லுடன் முடிகிறது. தோடு என்பதில் முதல் எழுத்து ஓ உலகெலாம் என்பதில் ஈற்றெழுத்து ம் ஆகும்.

12. *திருமுறைகளை முறையாக வகைப்படுத்தியவர் யாவர்*?

திருநாரையூரில் பொல்லாப் பிள்ளையாருக்குப் பூசைகள் செய்து அவரிடம் நேரடியாக உபதேசம் பெற்ற நம்பியாண்டார் நம்பிகள்.

இராசராச சோழர் காலத்தில் பொல்லாப் பிள்ளையார் அருளினால் நம்பியாண்டார் நம்பிகள், மறைத்து வைக்கப்பட்டிருந்த தேவாரங்களை எடுத்து தொகுத்து அருளினார்கள்.

13. *திருமுகப் பாசுரம் யார் அருளிச் செய்தது?*

திருமுகப்பாசுரம் சிவபெருமானால் அருளிச் செய்யப்பட்டது. இப்பகுதி பதினொராம் திருமுறையில் அமைந்திருக்கிறது.

14. *பஞ்சபுராணம் குறிப்பு தருக.*

மூவர் தேவாரங்களில் ஒரு பாடலும், திருவாசகத்தில் ஒரு பாடலும், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு மற்றும் பெரியபுராணத்தில் இருந்து ஒவ்வொரு பாடலுமாக மொத்தம் ஐந்து பாடல்கள் பாடுவது பஞ்சபுராணம் எனப்படும்.

15. *அகத்தியர் தேவாரத் திரட்டு – குறிப்பு தருக*

அகத்திய முனிவர் ‘அடங்கள் முறை’ முழுவதையும் சிவாலய முனிவருக்கு உபதேசித்து. அவற்றில் இருந்து 25 பதிகங்களை திரட்டி ஒரு நூலாக செய்து அருளினார். அந்நூலே அகத்தியர் தேவாரத் திரட்டு ஆகும். இதில் 8 நிலைகள் உள்ளன.

1. குருவருள்

2. பரையின் வடிவம்

3. அஞ்செழுத்து

4. கோயில் திறம்

5. சிவன் உருவம்

6. திருவடிகள் பெருமை

7. அருச்சனைச் சிறப்பு

8. அடிமைத் திறம்

16. *தேவார அருள்முறைத் திரட்டு -குறிப்பு தருக.*

மூவர் பெருமக்கள் அருளிச் செய்த தேவாரங்களை திருவருட்பயன் என்னும் சாத்திர நூலில் வரும் பத்து தலைப்புகளில் உமாபதிசிவம் ஒரு நூல் அருளியுள்ளார். அந்நூலுக்கு தேவார அருள்முறைத் திரட்டு என்று பெயர். அந்நூலில் 99 தேவாரப் பாடல்கள் உள்ளன.

17. *பன்னிரு திருமுறைகளில் மொத்தம் எத்தனை பாடல்கள்?*

18,497 பாடல்கள்.

18. *மூவர் பெருமக்கள் பாடிய மொத்த பதிகங்கள் எவ்வளவு?*

மொத்தம் பாடியவை கிடைத்தவை

திருஞான சம்பந்த சுவாமிகள் 16,000 383

திருநாவுக்கரசு சுவாமிகள் 49,000 312

சுந்தரமூர்த்தி சுவாமிகள் 38,000 100

——————————————————————————–

மொத்தம் 1,03,000 795

——————————————————————————–

19. *நால்வர் பெருமக்களின் அவதாரத் தலங்கள் எவை?*

திருஞான சம்பந்த சுவாமிகள் – சீர்காழி

திருநாவுக்கரசு சுவாமிகள் – திருவாமூர்

சுந்தரமூர்த்தி சுவாமிகள் – திருநாவலூர்

மாணிக்கவாசகர் – திருவாதவூர்

20. *நால்வர் பெருமக்கள் இப்பூவுலகில் வாழ்ந்த காலம் எவ்வளவு?*

திருஞான சம்பந்த சுவாமிகள் – 16 ஆண்டுகள்

திருநாவுக்கரசு சுவாமிகள் – 81 ஆண்டுகள்

சுந்தரமூர்த்தி சுவாமிகள் – 18 ஆண்டுகள்

மாணிக்கவாசகர் – 32 ஆண்டுகள்

21. *திருத்தொண்டர் தொகை ஆசிரியர் யார்?*

சுந்தரமூர்த்தி சுவாமிகள்.

22. *நாயன்மார்கள் மொத்தம் எத்தனை பேர்?*

அறுபத்து மூவர்.

23. *சாத்திரத்தில் தோத்திரம், தோத்திரத்தில் சாத்திரம் என்று கூறப்படும் நூல்கள் எவை?*

சாத்திரத்தில் தோத்திரம் – போற்றிப் பஃறொடை

தோத்திரத்தில் சாத்திரம் – திருமந்திரம்

24. *மெய்கண்டாருக்கு உபதேசம் செய்தது யார்?*

பரஞ்சோதி முனிகள்

25. *மெய்கண்டாரின் மாணாக்கர்கள் எத்தனை பேர்?*

49. அதில் தலையாய மாணவராக விளங்கியவர் சகல ஆகம பண்டிதர் என்று அழைக்கப்படும் அருள்நந்தி சிவாச்சாரியார். ‘துகளறுபோதம்’ என்ற நூலை அருளிச் செய்த சிற்றம்பல நாடிகளும் இவர் மாணாக்கரே.

26. *சிவஞான போதத்திற்கு காலத்தால் முற்பட்ட சாத்திர நூல்கள் யாவை?*

திருவுந்தியார் மற்றும் திருக்களிற்றுப்படியார்.

27. *அருள்நந்தி சிவம் அருளிச் செய்த நூல்கள் யாவை?*

1. சிவஞான சித்தியார்

2. இருபா இருபது

28. *சித்தாந்த அட்டகம் – விளக்குக*

பதினான்கு சாத்திரங்களில் உமாபதிசிவம் அருளிச் செய்த நூல்கள். மொத்தம் எட்டு. அந்த எட்டு நூல்களே சித்தாந்த அட்டகம் என வழங்கப்படுகிறது.

1. சிவப்பிரகாசம்

2. திருவருட்பயன்

3. உண்மை நெறி விளக்கம்

4. போற்றிப் ப·றொடை

5. கொடிக்கவி

6. வினா வெண்பா

7. சங்கற்பநிராகரணம்

8. நெஞ்சு விடுதூது

என்பவையே அந்த எட்டு நூல்கள்.

29. *ஞானாமிர்தம் என்ற நூலின் ஆசிரியர் யார்?*

வாகீச முனிவர்

30. *வேதங்கள் – குறிப்பு தருக.*

வேதம் சிவபிரானால் அருளிச் செய்யப்பட்டது. இது கர்மகாண்டம், ஞான காண்டம் என இரு பகுதிகளை உடையது. ரிக், யசுர், சாமம், அதர்வணம் என நான்கு வேதங்கள் உள்ளன. (அறம்,பொருள், இன்பம்,வீடு)

31. *ஆகமங்கள் – குறிப்பு தருக.*

ஆகமங்களும் சிவபிரானால் சிறப்பாக சைவர்களுக்கு அருளிச் செய்யப்பட்டன. சிவ ஆகமங்கள் 28 உள்ளன. சைவசமயம் வேதத்தைப் பொது எனவும், ஆகமத்தை சிறப்பு எனவும் கருதுகிறது.

32. *சமயங்கள் எத்தனை வகைப்படும்? அவை யாவை?*

அகச்சமயம், அகப்புறச்சமயம், புறச்சமயம், புறபுறச்சமயம் என நான்கு வகைப்படும்.

அகச்சமயம் அகப்புறச்சமயம்

1. பாடாணவாத சைவம் 1. பாசுபதம்

2. பேதவாத சைவம் 2. மாவிரதம்

3. சிவசமவாத சைவம் 3. காபாலம்

4. சிவசங்கிராந்தவாத சைவம் 4. வாமம்

5. ஈசுவர அவிகாரவாத சைவம் 5. பைரவம்

6. சிவாத்துவித சைவம் 6. ஐக்கியவாத சைவம்

புறச்சமயம் புறப்புறச்சமயம்

1. நியாயம் 1. உலகாயதர்

2. சாங்கியம் 2. சமணர்

3. யோகம் 3. செளத்திராந்திகர்

4. மீமாஞ்சை 4. யோகசாரர்

5. வேதாந்தம் 5. மாத்யமிகர்

6. பாஞ்சராத்திரம் 6. வைபாடிகர்

33. *சைவசித்தாந்தம் – ஒரு வார்த்தையில் விளக்கம் தருக.*

முடிந்த முடிபு.

34. *சைவ சித்தாந்தர் என்ற குறிப்பினைத்தரும் திருமுறை எது?*

திருமந்திரம்

“கற்பனைக் கற்று கலைமன்னும் மெய்யோகம்
முற்பத ஞானம் முறைமுறை நண்ணியே
சொற்பதங் கடந்து துரிசற்று மேலான
தற்பரம் கண்டுளோர் சைவசித்தாந்தரே”

35. *சைவ சித்தாந்த தத்துவத்தின் சிறப்பு யாது?*

1. தர்க்க ரீதியானது (Logic)

2. அறிவியற் பூர்வமானது (Scientific)

3. வரலாற்றுத் தொன்மையுடையது (Historic)

4. நடைமுறைக்கு இயைந்தது (Easy to Adapt)

5. உலகளாவியது (Universal)

6. முற்போக்குச் சிந்தனைகளை உடையது (Optimistic)

இன்னும் பல.

36. *சற்காரிய வாதம் – சிறுகுறிப்பு தருக.*

‘உள்ளது அழியாது, இல்லது தோன்றாது’ என்ற விஞ்ஞான அடிப்படையில் தான் சைவசித்தாந்த தத்துவம் தனது கொள்கைகளை நிலைநிறுத்துகிறது.

37. *அளவை – குறிப்பு தருக*.

நீட்டல் அளவை, நிறுத்தல் அளவை போல உலகப் பொருள்களை அளப்பதற்கு பலவிதமான அளவை முறைகள் இருப்பவை போல சமய உலகிலும் பல அளவைகள் பேசப்படுகின்றன. குறிப்பாக மூன்று அளவைகள்.

1. காட்சி அளவை – (பிரத்தியட்சப் பிராமணம்)

2. கருதல் அளவை – (அனுமானப் பிராமணம்)

3. உரை அளவை – (ஆகமப் பிராமணம்)

மேலும் பல அளவை முறைகள் இருப்பினும் பொதுவாக அவைஎல்லாம் மேற்சொன்ன மூன்றில் அடங்கும்.

38. *சைவசித்தாந்தம் கூறும் முப்பொருள்கள் யாவை?*

1. இறைவன் – பதி

2. உயிர் – பசு

3. மலம் – பாசம்

இம்மூன்று பொருள்களுக்கும் உரிய தொடர்பினை கீழ்வரும் திருமந்திரப் பாடல் விளக்குகின்றது.

“பதி பசு பாசம் எனப் பகர் மூன்றில்
பதியினைப் போல் பசு, பாசம் அநாதி
பதியினைச் சென்று அணுகா பசு பாசம்
பதி அணுகிற் பசு பாசம் நில்லாவே”

39. *முப்பொருள்களும் அறிவுடைப் பொருள்களா?*

இறைவன் – தாமே அறியும் பேரறிவு உடையவன்.

உயிர்கள் – அறிவிக்க அறியும் சிற்றறிவு உடையவன்.

மலங்கள் – அறிவித்தாலும் அறியாத சடப்பொருள்கள்.

40. *பொருள்களின் இரண்டு இயல்புகள் யாவை?*

பொருள்களுக்கு பொது இயல்பு, சிறப்பு இயல்பு என இரண்டு இயல்புகள் உண்டு.

பொது இயல்பு

ஒரு பொருளுக்கு மற்றொரு பொருளின் சார்பால் உண்டாகி, அச்சார்பு நீங்கிவிடும் போது நீங்கி விடும் இயல்பு.

(எ.கா) நீரில் வெம்மை

சிறப்பு இயல்பு

ஒரு பொருளுக்கு எச்சார்ப்புமின்றி இயற்கையாகவே அமைந்திருக்கும் இயல்பு.

(எ.கா) நீரின் குளிர்ச்சி

41. *இறைவன் செய்யும் ஐந்தொழில்கள் யாவை?*

படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல்.

42. *மும்மூர்த்திகள் யாவர்?*

படைத்தல் தொழிலைச் செய்யும் – பிரமன்

காத்தல் தொழிலைச் செய்யும் – திருமால்

அழித்தல் தொழிலைச் செய்யும் – உருத்திரன்

இவர்களே மும்மூர்த்திகள். இம்மும்மூர்த்திகளின் மேம்பட்டவர் சிவபெருமான். இவர்கள் சிவபெருமான் அருளினால் இந்தத் தொழிலைச் செய்யும் உருத்திரன் குணிஉருத்திரன். சிவபெருமான் மகாஉருத்திரன். இவ்வேறுபாட்டினை சிவஞான மாபாடியத்தில் சிவஞான சுவாமிகள் தெளிவாக விளக்குகிறார்கள்.

43. *இறைவனின் எண்குணங்கள் யாவை?*

1. தன் வயம் உடைமை.

2. தூய உடம்பு உடைமை.

3. இயற்கை உணர்வு உடைமை.

4. முற்றுணர்வு உடைமை.

5. இயல்பாகவே பாசமின்மை.

6. பேரருள் உடைமை.

7. முடிவில் ஆற்றல் உடைமை.

8. வரம்பில் இன்பம் உடைமை.

44. *உயிர்களைத் தோற்றுவித்தவர் யார்?*

உயிர்களை யாரும் தோற்றுவிக்கவில்லை. அவை தோற்றமில் காலந்தொட்டே இருப்பவை என்று சைவசித்தாந்தம் தெளிவாக விளக்குகிறது.

45. *உயிர்கள் எத்தனை வகைப்படும்?*

ஆணவமலம் மட்டும் உடைய விஞ்ஞான கலர், ஆணவம் மற்றும் கன்ம மலம் உடைய பிரளயா கலர், ஆணவம், கன்மம் மற்றும் மாயை என்ற மூன்று மலங்களும் உடைய சகலர் என உயிர்கள் மூவகைப்படும்.

46. *கேவலம், சகலம், சுத்தம் – குறிப்பு தருக.*

கேவலம்:

உயிர்கள் தம்மையும் அறியாமல், தமக்கு மேலே இறைவன் ஒருவன் இருக்கிறான் என்பதையும் அறியாமல், தன்னை ஆணவம் என்ற மலம் முழுமையாக மறைத்திருக்கின்றது என்பதை அறியாத உயிரின் நிலை.

சகலம்:

கேவலநிலையில் இருந்த உயிர்களுக்கு மாயை மற்றும் கன்மத் தொடர்பினால் அறியாமை சிறிது குறைந்த நிலை.

சுத்தம்:

உயிர்கள், பாச நீக்கம் பெற்று இறைவனின் திருவடிகளை அடைந்து பேரானந்தத்தை அனுபவிக்கும் நிலை.

47. *உயிர்கள் அனுபவிக்கும் ஐந்து நிலைகள்(ஐந்தவத்தை) யாவை?*

1. நனவு – சாக்ரம்

2. கனவு – சொப்னம்

3. உறக்கம் – கழுத்தி

4. பேருறக்கம் – துரியம்

5. உயிர்ப்பு அடங்கல் – துரியாதீதம்

48. *மலங்கள் எத்தனை வகை? அவை யாவை?*

ஆணவம், கன்மம், மாயை என்று மூன்று வகைப்படும். மாயேயம், திரோதாயி என்று இரண்டையும் சேர்த்து மலங்கள் ஐந்து என்றும் விரித்துச் சொல்வார்கள்.

49. *ஆணவ மலத்தின் வேறு பெயர்கள் யாவை?*

இருள்மலம், மூலமலம், சகசமலம் என்று எல்லாம் ஆணவமலம் நூல்களில் பேசப்படுகின்றன. சாத்திர நூல்களில் ‘இருள்’ என்ற சொல்லால் பேசப்படும்.

50. *கன்ம மலத்தின் காரியங்கள் யாவை?*

சஞ்சிதம், பிரார்த்தம், ஆகாமியம் என மூன்றாகும்.

சஞ்சிதம்: (பழவினை)

பலபிறவிகளில் சேர்த்த வினைக்குவியல்

பிரார்த்தம்: (நுகர்வினை)

இப்பிறவியில் அனுபவிப்பதற்காக இறைவனால் நமக்குத் தரப்பட்ட வினைகள் (நம்மால் முன்செய்த வினைகளின் ஒரு பகுதி)

ஆகாமியம்: (வருவினை)

இப்பிறவியில் நாம் புதிதாக செய்யும் வினைகள்.

51. *வினை என்றால் என்ன?*

நாம் செய்யும் செயல்களே வினை எனப்படும். வினைகள் நல்வினை, தீவினை என இரண்டு வகைப்படும்.

52. *இன்ப துன்பத்திற்கான காரணம் என்ன?*

முந்தைய பிறவிகளில் நாம் செய்த செயல்களுக்குத் தகுந்தவாறு பலன்களை இப்பிறவியில் அனுபவிக்கின்றோம். இறைவன் பெருங்கருணையின் காரணமாக நாம் செய்துள்ள மொத்த வினைகளையும் ஒரே பிறவியில் அனுபவிக்கத் தருவதில்லை. இப்பிறவியில் அனுபவிப்பதற்கு எனக் கொடுக்கப்பட்ட பிரார்த்த வினையின் வழி இப்பிறவியில் இன்ப துன்பங்களை அனுபவிக்கின்றோம். நாம் அனுபவிக்கும் இன்பதுன்பத்திற்குக் காரணம் நாம் முன்பு செய்த செயல்கள் தான் என சைவ சித்தாந்தம் தெளிவாக விளக்குகிறது.

53. *வினைக்குத் தகுந்தவாறு பலன்களை யார் நமக்குத் தருகிறார்கள்?*

வினைக்குத் தகுந்த பலன்களை வினைகளின் காரணமாகிய கன்மம் தர முடியாது. ஏனென்றால் அது சடப்பொருள். உயிர் தாமே சென்று வினைகளுக்குத் தகுந்த பலன்களை நுகர்வதில்லை. இறைவனே அந்த அந்த உயிர்கள் செய்த வினைக்குத் தகுந்த பலன்களைக் கூட்டி வைக்கிறான்.

54. *நாம் வாழும் இவ்வுலகைத் தோற்றுவித்தவர் யார்?*

மாயை என்னும் மலத்திலிருந்து உயிர்கள் நன்மை பெறும் பொருட்டு இறைவன் உலகத்தைப் படைத்தார்.

55. *மாயை – குறிப்பு தருக.*

மாயை என்பது மும்மலங்களில் ஒன்று. இம்மாயையின் காரியங்கள் 36 தத்துவங்களாக் விளங்குகின்றன. இம்மாயை சுத்தமாயை, அசுத்தமாயை என இரண்டு பகுதிகளாக நிற்கும். பிரகிருதி மாயை என்பது அசுத்தமாயைக்குள் அடங்கி நிற்கும். சுத்தமாயை, அசுத்தமாயை மற்றும் பிரகிருதி மாயை என மூன்றாகவும் கொள்வர். நாம் வாழும் இவ்வுலகம் பிரகிருதி மாயையில் இருந்து தோற்றுவிக்கப்பட்டது.

56. *சைவ சித்தாந்த சாத்திரங்களில் மணிமுடி நூலாக விளங்குவது எது?*

சிவஞான போதம், சிவஞான சித்தியார் இதனுடைய வழிநூல் எனவும், சிவப்பிரகாசம் இதனுடைய சார்பு நூல் எனவும் போற்றப்படும்.

57. *கடவுளுக்கும், உயிருக்கும் உள்ள தொடர்பு சைவ நூல்களில் எவ்வாறு சொல்லப்படுகிறது?*

‘அத்துவிதம்’ என்ற சொல்லினால் குறிக்கிறார்கள்.

58. *சைவ சித்தாந்தம் காட்டும் அத்துவிதம் யாது?*

இறைவன் ஒன்றாய், வேறாய் மற்றும் உடனாய் உயிர்களோடு கலந்து இருக்கின்றான். அந்தந்தப் பொருளுக்கு அந்தந்த பொருளாய் – அதுஅதுவாய் நிற்பதுவே ஒன்றாய் நிற்றல் ஆகும். இறைவன் உயிர்களுக்கு அறிவிக்கும் பொருட்டு உயிர்களின் வேறாய் நிற்கின்றான்.

உயிர்கள் தாம் விரும்பியவற்றை செய்வதற்கு இறைவனுடைய துணை தேவைப்படுகிறது. எனவே, உயிர்களோடு உடனாய் கூடி நிற்கின்றான்.

59. *சைவ சமயம் கூறும் வழிபாட்டு முறைகள் யாவை?*

குரு, லிங்க, சங்கம, வழிபாடு.

குரு வழிபாடு: நம்மிடம் உள்ள அறியாமையைப் போக்கும் ஞான ஆசிரியரையே சிவமாகவே கருதி வழிபடுவதாகும்.

லிங்க வழிபாடு: திருக்கோயிலுக்குச் சென்று சிவபெருமானை லிங்க திருமேனியில் வழிபடுதல்.

சங்கம வழிபாடு: சிவனடியார்களை சிவமாகவே கருதி வழிபடுவது.

60. *சரியை, கிரியை, யோகம், ஞானம் – விளக்குக*

சரியை: உடலால் வழிபடுவது.

கிரியை: உடலாலும், உள்ளத்தாலும் வழிபடுவது.

யோகம்: உள்ளத்தால் வழிபடுவது.

ஞானம்: எங்கும் எதிலும் இறையருளையே காண்பது.

61. *திருவைந்தெழுத்து விளக்கம் தருக.*

திருவைந்தெழுத்து என்பது சிவாயநம என்னும் மந்திரமாகும்.

சி-சிவன்

வ-சக்தி(அருள்)

ய-உயிர்

ந-மறைப் பாற்றல்

ம-ஆணவ மலம்

என்று ஒவ்வொரு எழுத்தும் ஒவ்வொரு பொருளைக் குறித்து நிற்கிறது.

திருவைந்தெழுத்து மூவகைப்படும். நமசிவாய, சிவாய நம, சிவயசிவ என்பவை. இம்மந்திரமே பஞ்சாட்சர மந்திரம் என்று கூறப்படும்.

62. *தீக்கை என்றால் என்ன?*

தீக்கை என்பது தீட்சை என்னும் வடமொழி சொல்லின் திரிபு ஆகும்.

தீ-கெடுத்தல் ஷை-கொடுத்தல்

பாசப்பற்றைக் கெடுத்து மோட்சத்தை கொடுப்பது தீட்சை எனப்படும்.

இது மூன்று வகைப்படும் அவை

1. சமயம் 2. விசேடம் 3. நிருவாணம்

63. *இருவினை ஒப்பு என்றால் என்ன?*

நல்வினையின் பயனாகிய இன்பத்தில் விருப்பும், தீவினையின் பயனாகிய துன்பத்தில் வெறுப்பும் கொள்ளாது. அவற்றால் உள்ளம் வேறுபடாது, இரண்டையும் ஒன்றுபோல் கருதி அவற்றின்மேல் பற்று இல்லாமல் நிற்கும் நிலையே இருவினை ஒப்பு எனப்படும்.

64. *மலபரிபாகம் என்றால் என்ன?*

கணக்கற்ற பிறவிகளில் ஆணவமலத்தின் சக்தி உயிர் அறிவை தடைப்படுத்தியும் திரிபுபடுத்தியும் செயல்படுவதால் படிப்படியே மெலிவடைந்து பின் மறைத்தலை செய்யமாட்டாத நிலையை அடையும். உயிர் அறிவை தடுத்து வைத்திருந்த அதன் பிணிப்பு நெகிழ்ந்து நீங்கும் நிலை அடையும். இந்நிலையே மலபரிபாகம் எனப்படும்.

65. *சத்திநிபாதம் என்றால் என்ன?*

மலரிபாகம் சிறிது, சிறிதாக நிகழ, நிகழ அதற்கு ஏற்ப இதுகாறும் உயிரில் மறைத்து இருந்து பக்குவப்படுத்தி வந்த இறைவனது திரோதான சக்தியும் சிறிது, சிறிதாக தன் தன்மை மாறி அருள் சக்தியாக உயிரின் கண் விளங்கித் தோன்றும். அந்நிகழ்ச்சியே சத்திநிபாதம் எனப்படும்.

66. *சத்திநிபாதத்தின் வகைகள் யாவை?*

மந்ததரம், மந்தம், தீவிரம், தீவிரதரம் என நான்கு வகைப்படும்.

67. *முத்தி என்றால் என்ன*?

ஒவ்வொரு சமயமும் அதன் வழிபடு தெய்வம், வழிபாட்டு முறைகள் மற்றும் அடிப்படை நூல்கள் போன்ற சில அடிப்படைக் கருத்துக்களை சொல்கிறார்கள். அவற்றில் இன்ப, துன்பங்களை அனுபவிக்கும் உயிரின் முடிவான நிலை முக்தி என்று சொல்லப்படுகிறது.

68. *சைவ சித்தாந்தம் காட்டும் முக்தி யாது?*

உயிர்கள், மலநீக்கம் பெற்று இறைவனுடைய திருவடிகளில் ஒன்றாய் கலந்து பேரானந்தத்தை அனுபவித்தல். இந்நிலைக்கு சிவமாம் தன்மை என்று பெயர். சிவமாம் தன்மை என்று சொன்னாலும் சிவனோடு சமமாய் நிற்றல் என்பது பொருள் அல்ல. இறைவனுக்கு அடிமையாய் ஐந்தொழில்கள் செய்யும் ஆற்றல் அற்றதாய் என்றும் பேரானந்தத்தை மட்டுமே அனுபவித்துக் கொண்டு இருக்கும். முக்தி பெற்ற உயிர்கள் மீண்டும் பிறவிக்கு வருவதில்லை.

69. *சீவன் முக்தர் – குறிப்பு தருக.*

முக்தி பெற்றும் இவ்வுடலோடு இவ்வுலகில் வாழும் ஆன்மாக்களுக்கு சீவன் முக்தர்கள் என்று பெயர்.

70. *தசகாரியம் என்றால் என்ன?*

ஞான சாதனையில் முன்னேறும் ஆன்மாக்களிடத்து நிகழும் பத்து வகை செயல்பாடுகளாகும்.

தத்துவரூபம்

தத்துவ தரிசனம்

தத்துவ சுத்தி

ஆன்ம ரூபம்

ஆன்ம தரிசனம்

ஆன்ம சுத்தி

சிவ ரூபம்

சிவ தரிசனம்

சிவயோகம்

சிவபோகம்

#திருச்சிற்றம்பலம்

இறைவனின் கோபம்..!_

_இறைவனின் கோபம்..!_
×××××××××××××××

புழுவின் கோபம்
திமிர்தலோடு சரி…
பறவையின் கோபம்
கீறுதலோடு சரி…
மிருகத்தின் கோபம்
முட்டுதலோடு சரி…
மனிதனின் கோபம்
அன்றோடு சரி….
இறைவனின் கோபம்
என்று முடியுமோ..?

இறைவா….!

உன் கோபத்தின் உச்சம்-
கோயிலை மூடினாய்…
மசூதியை மூடினாய்..
ஆலயத்தை மூடினாய்…
வீடுகளை மூடினாய்….
உலகையே மூடினாய்…!

ஆம்;

உழைப்பை நிறுத்தினாய்….
ஊதியத்தை நிறுத்தினாய்…
பழகுதலை நிறுத்தினாய்…
ஒருவரை ஒருவர்-
பார்த்தலையும் நிறுத்தினாய்..
மொத்தத்தில்-
இயக்கத்தையே நிறுத்தினாய்…!

இறைவனே…!
தவறுதான்…!

ஆணவம் அடைந்தோம்..
கர்வத்தில் மிதந்தோம்…
உண்மையை மறந்தோம்…
நன்மையை மறந்தோம்….
பொதுநலம் மறந்தோம்….
சுயநலம் மிகுந்தோம்…
தவறுதான்…!

இறைவா….!

புனிதம் துறந்தோம்…
மனிதம் மறந்தோம்…
ஊரை மறந்தோம்..
உறவை மறந்தோம்…
பெற்றோரையே-
மதிக்க மறந்தோம்..
இறைவா உன்னையே-
துதிக்க மறந்தோம்…!

தவறுதான்….
தவறேதான்…!

கூட்டுக்குள் முடங்கிய
புழுவினைப் போலே
வீட்டுக்குள் முடங்கினோம்..

கண்ணுக்குத் தெரியா இறைவனே…!
உள்ளுக்குள் எங்களை சிறை வைத்தாயே….
மண்ணுக்குள் எங்களைப்
புதைத்தது போலே….!

இறைவா…!

இதுபோல தண்டனையை
நீ தந்ததில்லை…
முந்தைய
இதுவரை கண்டதில்லை…!

உணர்கிறோம்…
கொரோனாவின்காரணத்தை
உணர்கிறோம்…

எம்–
பாவத்தை மன்னித்துக் கொள்….!
உன்-
கோபத்தை முடித்துக் கொள்..!

படித்ததில் பிடித்தது