Archive | September 2014

சக்தி பெருக்கும் சக்கிரங்கள்-படித்ததில் பிடித்தது

கண்ணுக்கு தெரியாத சூட்சமா உலகத்தை பற்றி படித்ததை பகிர்ந்து உள்ளேன்

ஜனன மரண ரகசியம் சரீர தேவாலய ரகசியம் – கடப்பை பரஹம்ஸ ஸ்ரீ சச்சிதானந்த யொகிஷ்வரர்

பிராணாயாமம் எனும் மூச்சை மட்டும் வைத்த்து யோகா நிலை பற்றி
கடப்பை பரஹம்ஸ ஸ்ரீ சச்சிதானந்த யொகிஷ்வரர் மிக விளக்கமாகவும் எளிமையாகவும் கொடுத்துள்ளார்…இந்த புத்தகம் மிகவும் உதவியாக இருக்கும் யோகம் பயில விரும்புவர்களுக்கு ..–குரு அருள் சரணம்

IMG_20140930_143410

IMG_20140930_143439

IMG_20140930_143512

நட்சத்திரத்திற்குரிய வழிபாட்டுத் தலங்கள்

உ h p ய திருத்தலங்களைப்  பற்றி    இங்கே   கொடுத்துள்ளோம். இங்குள்ள  ஸ்தலங்கள் அனைத்தும்   பலப்பல யுகங்கள்  வரலாறு கொண்டவை.  இடையில் அழிவு ஏற்பட்டாலும், அதன் பிரதி  பிம்பங்களாய்  தன்னையே புதுப்பித்துக்  கொண்டவை. எத்தனையோ மகான்களும், ரிஷpகளும், தேவர்களும் வழிபட்ட இன்றளவும் நல்ல ஆன்மீக  அதிர்வுகளைக்  கொண்டு, தரிசிக்க  வரும் பக்தர்களுக்கு  அருள் பாலிப்பவை.
நட்சத்திரங்களுக்குரிய தேவதைகள், சூட்சும ரீதியாக இங்கே  தினமும் ஒரு  தடவையாவது தங்களுக்குரிய ஆலயம் சென்று  வழிபாடு  செய்கின்றன. மனிதராய்    பிறந்த  அனைவர்க்கும், அவரவர்  கர்மவினையே   லக்கினமாகவும், ஜென்ம  நட்சத்திரமாகவும்,  பனிரெண்டு   வீடுகளில்    நவக்கிரகங்கள்  அமர்ந்து, பெற்றெடுக்கும்      பெற்றோர்களையும்,      பிறக்கும்     ஊரையும்,      வாழ்க்கை துணையையும், வாழ்க்கையையுமே தீர்மானிக்கிறது.

கீழே  கொடுக்கப்பட்டுள்ள  அவரவர்க்குரிய நட்சத்திர தலத்தை உங்கள் ஜென்ம  நட்சத்திரம்    வரும்  தினத்தன்று, ஆத்ம  சுத்தியுடன் நம்பிக்கையுடன் வழிபட்டு  வாருங்கள்.  அதன்   பிறகு  உங்கள்   வாழ்வில் நிச்சயம்   ஒரு    புது வெளிச்சம் பிறக்கும்.

1.நட்சத்திரம்           : அஸ்வினி
ஆலயம்  : அருள்மிகு  பிறவி மருந்தீஸ்வரர்  திருக்கோயில்.
இருப்பிடம்       :   திருவாரூரில்  இருந்து  30  கி.மீ   தூரத்தில்   திருத்துறைப்பூண்டி
உள்ளது. பேருந்து  நிலையத்தில் இருந்து  ஒரு  கி.மீ தூரத்தில்  கோயில் உள்ளது.

2.நட்சத்திரம்           : பரணி
ஆலயம்  : அருள்மிகு  அக்னீஸ்வரர் திருக்கோயில்
இருப்பிடம்                :    மயிலாடுதுறையிலிருந்து  15  கி.மீ    நெடுங்காடு  வழியாக
காரைக்கால் செல்லும் வழியில் நல்லாடை என்னும்  ஊரில் உள்ளது.
 
3.நட்சத்திரம்           : கார்த்திகை
ஆலயம்  : அருள்மிகு  காத்ர  சுந்தரேஸ்வரர் திருக்கோயில்
இருப்பிடம்               :  மயிலாடுதுறையிலிருந்து பூம்புகார்  செல்லும் வழியில்  8 கி.மீ
தூரத்தில்  கஞ்சாநகரம் அமைந்துள்ளது. மெயின்  ரோட்டிலிருந்து பிரியும்  ரோட்டில்
அரை கி.மீ சென்றால் கோயிலை அடையலாம்

4.நட்சத்திரம்           : ரோஹிணி
ஆலயம்  : அருள்மிகு  பாண்டவதூதப்பெருமாள் திருக்கோயில்
இருப்பிடம்                :    காஞ்சிபுரம் ஏகாம்  பரேஸ்வரர்   கோயில்  எதிரில் உள்ள
சாலையில் கோயில் அமைந்துள்ளது.

5.நட்சத்திரம்           : மிருகசீரிஷம்
ஆலயம்  : அருள்மிகு  ஆதிநாராயணப் பெருமாள் திருக்கோயில்
இருப்பிடம்                :   தஞ்சாவூரிலிருந்து திருவாரூர்  செல்லும்  வழியில்   50  கி.மீ
தூரத்தில்   முகூந்தனூர்  உள்ளது  இந்த ஸ்டாப்பில்   இருந்து  ஒரு   கி.மீ   தூரம்
சென்றால் கோயிலை அடையலாம்.

6.நட்சத்திரம்           : திருவாதிரை
ஆலயம்  : அருள்மிகு  அபய வரதீஸ்வரர் திருக்கோயில்
இருப்பிடம்               : தஞ்சாவூரில்  இருந்து 70 கி.மீ  தூரத்திலுள்ள பட்டுக்கோட்டை
சென்று   அங்கிருந்து    12  கி.மீ    சென்றால்   அதிராம்பட்டினத்தில்   உள்ள  இந்த
ஆலயத்தை அடையலாம்.

7.நட்சத்திரம்           : புணர்பூசம்
ஆலயம்  : அருள்மிகு  அதிதீஸ்வரர் திருக்கோயில்
இருப்பிடம்               :   வேலூரிலிருந்து  கிருஷ;ணகிரி   செல்லும்  வழியில்  67 கி.மீ
தூரத்தில்   வாணியம்பாடி  உள்ளது. பஸ்  ஸ்டாண்டிலிருந்து 3  கி.மீ   தூரத்தில்
உள்ள பழைய வாணியம்பாடியில் கோயில் உள்ளது.

8.நட்சத்திரம்           : பூசம்
ஆலயம்  : அருள்மிகு  அட்சய புரீஸ்வரர் திருக்கோயில்
இருப்பிடம்                :   பட்டுக்கோட்டையிலிருந்து  ராமேஸ்வரம் செல்லும்  கிழக்கு
கடற்கரை சாலையில் 30 கி.மீ  சென்றால் விளங்குளம்  விலக்கு வரும். அங்கிருந்து
தெற்கே  2 கி.மீ  சென்றால்  கோயிலை அடையலாம்.  புதுக்கோட்டையில் இருந்து
பேராவூரணி வழியாகவும் விளங்குளத்தை அடைய வழியிருக்கிறது.

9.நட்சத்திரம்           : ஆயில்யம்
ஆலயம்  : அருள்மிகு  கற்கடேஸ்வரர் திருக்கோயில்
இருப்பிடம்                :   கும்பகோணத்தில்  இருந்து  சூரியனார்  கோவில்   செல்லும்
ரோட்டில் 11 கி.மீ  தூரத்தில்  உள்ள திருவிசநல்லூர்  சென்று  அங்கிருந்து   பிரியும்
ரோட்டில் 2 கி.மீ சென்றால் கோயிலை அடையலாம்.

10.நட்சத்திரம்         : மகம்
ஆலயம்  : அருள்மிகு  மகாலிங்கேஸ்வரர் திருக்கோயில்
இருப்பிடம்               :  திண்டுக்கல்லில் இருந்து நத்தம் செல்லும் ரோட்டில் 12 கி.மீ
தூரத்தில்    விராலிப்பட்டி  விலக்கு  உள்ளது.  இங்கிருந்து  2   கி.மீ    சென்றால்
கோயிலை அடையலாம்.

11.நட்சத்திரம்         :  பூரம்
ஆலயம்  : அருள்மிகு  ஸ்ரீஹரி தீர்த்தேஸ்வரர் திருக்கோயில்
இருப்பிடம்               :  புதுக்கோட்டையிலிருந்து பட்டுக்கோட்டை  செல்லும் வழியில்
7 கி.மீ சென்றால் வரும் திருவரங்குளம் என்னும்  ஊரில் ஆலயம் உள்ளது.
12.நட்சத்திரம்         : உத்திரம்
ஆலயம்  : அருள்மிகு  மாங்கல்யேஸ்வரர் திருக்கோயில்
இருப்பிடம்                 :     திருச்சி   சத்திரம்    பஸ்   ஸ்டாண்டிலிருந்து 22   கி.மீ
தூரத்திலுள்ள லால்குடி சென்று  அங்கிருந்து  5 கி.மீ  தூரத்திலுள்ள இடையாற்று
மங்கலம் என்னும்  ஊரில் உள்ளது.

13.நட்சத்திரம்         : ஹஸ்தம்
ஆலயம்  : அருள்மிகு  கிருபா கூபாரேச்வரர் திருக்கோயில்
இருப்பிடம்               :   கும்பகோணத்திலிருந்து மயிலாடுதுறை  செல்லும்  வழியில்
உள்ள குத்தாலத்திலிருந்து பிரியும்  ரோட்டில் 8 கி.மீ  தூரத்தில்  கோமல்  என்னும்
ஊரில் உள்ளது.
14.நட்சத்திரம்         : சித்திரை
ஆலயம்  : அருள்மிகு  சித்திரரத  வல்லபபெருமாள் திருக்கோயில்
இருப்பிடம்                   :        மதுரையில்   இருந்து    23     கி.மீ       தூரத்திலுள்ள
குருவித்துறைக்கு சென்று  அங்கிருந்து  3 கி.மீ தூரத்தில்  கோயில் உள்ளது.

15.நட்சத்திரம்         : சுவாதி
ஆலயம்  : அருள்மிகு  தாத்திரீஸ்வரர் திருக்கோயில்
இருப்பிடம்               :  சென்னை பூந்தமல்லியில் இருந்து தண்டுரை என்ற ஊருக்கு
செல்லும்   வழியில்   8   கி.மீ    தூரத்தில்    சித்துக்காடு  என்ற   ஊரில்   இத்தலம்
உள்ளது.

16.நட்சத்திரம்         : விசாகம்
ஆலயம்  : அருள்மிகு  முத்துக்குமாரசுவாமி திருக்கோயில்
இருப்பிடம்               :  செங்கோட்டை சென்று  அங்கிருந்து   7 கி.மீ  தூரத்திலுள்ள
திருமலைக்கோவிலை அடையலாம்.

17.நட்சத்திரம்         : அனுஷம்
ஆலயம்  : அருள்மிகு  மகாலட்சுமிபுரீஸ்வரர் திருக்கோயில்
இருப்பிடம்               :   மயிலாடுதுறையில்  இருந்து சீர்காழி  செல்லும்  வழியில்  7
கி.மீ தூரத்தில்  திரு நின்றியூர் என்னும்  ஊரில் இத்தலம் அமைந்துள்ளது.

18.நட்சத்திரம்         : கேட்டை
ஆலயம்  : அருள்மிகு  வரதராஜப்பெருமாள் திருக்கோயில்
இருப்பிடம்               :  தஞ்சாவூரில்   இருந்து கும்பகோணம்  செல்லும் வழியில்  13
கி.மீ    தூரத்திலுள்ள  பசுபதிகோயில்   பஸ்  ஸ்டாப்பில்   இருந்து  அரை  கி.மீ
தூரத்தில்  கோயில் உள்ளது.

19.நட்சத்திரம்         : மூலம்
ஆலயம்  : அருள்மிகு  சிங்கீஸ்வரர் திருக்கோயில்
இருப்பிடம்               :   சென்னை கோயம்பேட்டில்   இருந்து தக்கோலம்  செல்லும்
வழியில் 45 கி.மீ  தூரத்தில்  மப்பேடு என்ற ஊரில் உள்ளது. பூந்தமல்லியிலிருந்து
22 கி.மீ பேரம்பாக்கம் செல்லும் வழியில் மப்பேடு உள்ளது.

20.நட்சத்திரம்         : பூராடம்
ஆலயம்  : அருள்மிகு  ஆகாசபுரீஸ்வரர்  திருக்கோயில்
இருப்பிடம்               :   திருவையாறில்  இருந்து கல்லணை செல்லும்  வழியில்  4
கி.மீ   தூரம்  சென்றால்   கடுவெளியை  அடையலாம். பஸ் ஸ்டாப்  அருகிலேயே
கோயில் அமைந்துள்ளது.

21.நட்சத்திரம்         : உத்திராடம்
ஆலயம்  : அருள்மிகு  பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில்
இருப்பிடம்               :  சிவகங்கையில் இருந்து காரைக்குடி செல்லும் வழியில்  12
கி.மீ  தூரத்தில்  ஒக்கூர்  சென்று, அங்கிருந்து  பிரியும்  ரோட்டில் 3 கி.மீ  சென்றால்
பூங்குடி என்ற ஊரில் உள்ளது.

22.நட்சத்திரம்         : திருவோணம்
ஆலயம்  : பிரசன்ன  வெங்கடேசப்பெருமாள் கோயில்
இருப்பிடம்                :   வேலூரிலிருந்து  சென்னை செல்லும்  வழியில்   20  கி.மீ
தூரத்திலுள்ள  காவேரிப்பாக்கத்தில்   இறங்கி   அங்கிருந்து   பிரியும்   ரோட்டில் 2
கி.மீ   சென்றால்  திருப்பாற்கடலை அடையலாம். இவ்வூரில் இரண்டு  பெருமாள்
கோயில்கள்  இருப்பதால்    பிரசன்ன    வெங்கடேசப்பெருமாள்   கோயில்   என
கேட்டுச் செல்லவும்.

23.நட்சத்திரம்         : அவிட்டம்
ஆலயம்  : அருள்மிகு  பிரம்மஞான புரீஸ்வரர் திருக்கோயில்
இருப்பிடம்               :  கும்பகோணம் மகாமகக்குளம் மேற்குக் கரையிலிருந்து 4
கி.மீ தூரத்தில்  கொருக்கை என்னும்  இடத்தில் கோயில் அமைந்துள்ளது.

24.நட்சத்திரம்         : சதயம்
ஆலயம்  : அருள்மிகு  அக்னிபுரீஸ்வரர் திருக்கோயில்
இருப்பிடம்               :  திருவாரூர்; மாவட்டம் நன்னிலத்திலிருந்து நாகப்பட்டிணம்
செல்லும் வழியில் 10 கி.மீ தொலைவில் திருப்புகலூர் என்னும்  ஊரில் உள்ளது.

25.நட்சத்திரம்         : பூரட்டாதி
ஆலயம்  : அருள்மிகு  திருவானேஷ;வர் திருக்கோயில்
இருப்பிடம்                 :     திருவையாறிலிருந்து   17   கி.மீ     தூரத்தில்     உள்ள
திருக்காட்டுப்பள்ளி  சென்று  அங்கிருந்து   அகரப்;பேட்டை  செல்லும் ரோட்டில் 2
கி.மீ தூரம் சென்றால் ரங்கநாதபுரம் என்னும்  ஊரில் உள்ளது.

26.நட்சத்திரம்         : உத்திரட்டாதி
ஆலயம்  : அருள்மிகு  சகஸ்ரலட்சுமீஸ்வரர் திருக்கோயில்
இருப்பிடம்                :    புதுக்கோட்டையில் இருந்து   40   கி.மீ    தூரத்திலுள்ள
ஆவுடையார்கோவில் சென்று  அங்கிருந்து  திருப்புனவாசல் செல்லும் வழியில் 21
கி.மீ     தூரத்தில்    தீயத்தூர்    உள்ளது.  மதுரையில்  இருந்து   செல்பவர்கள்
அறந்தாங்கி   சென்று    அங்கிருந்து     திருப்புவனவாசல் செல்லும் பஸ்களில்
சென்றால் தீயத்தூர் என்னும்  இடத்தில் உள்ளது தூரம் 120  கி.மீ

27.நட்சத்திரம்         : ரேவதி
ஆலயம்  : அருள்மிகு  கைலாசநாதர் திருக்கோயில்
இருப்பிடம்                :   திருச்சியிலிருந்து  முசிறி   40  கி.மீ   சென்று   அங்கிருந்து
தாத்தய்யங்கார் பேட்டை   21  கி.மீ    செல்ல  வேண்டும்.  இங்கிருந்து  5  கி.மீ
தூரத்திலுள்ள காருகுடி

குருவின் தேவை எப்போது

            எண்ணில்லா பிறவிகளை பெற்ற நாம் இனியாவது பிறவாமல் இருக்கவே, பிறந்த இப்பிறவியில் மரணமடையாது இருக்கவே பாடு பட வேண்டும். பிறந்த இப்பிறப்பில் மரணமடையாது இருந்து விட்டால் உயிர் நம் உடலிலே தங்கி விட்டால் உயிராகிய ஒளி பெருகி உடலும் ஒளியாகி முக்தி பேறடையலாம்! ஞானம் பெறலாம்!

இது பற்றி கூற 4 வேதம் 18 புராணம் உபநிஷத்துகள் பல்வேறு சாஸ்திரங்கள் எண்ணற்ற ஞானிகளின் உபதேசங்கள் உள்ளன! களிமண்  போலே அறிவே இல்லாமல் பிறந்த நமக்கு இதை சொல்பவர் யார்? என்ன இருக்கிறது என்று தெரியாமலே சாவாரே அதிகம்! வேதத்தை அறிய முற்படுபவனுக்கோ ஆயிரம் தடைகள்! மொழிப்பிரச்சனை! ஜாதிபிரச்சனை! இதை எல்லாம் தாண்டி வந்தால் புரிய வைப்பது யார்? பரிபாசை ரகசியம் என மேலும் தடைகள்!

கடவுளை கண்டே ஆகவேண்டும் என்ற தீவிர வேட்கையே ஒருவனுக்கு கடவுளை அடைய வழிகாட்டும்! குரு மூலமாக!  யாரோ ஒருவரை
எதோ ஒன்றை தூண்டி அந்த இறைவனே ஆத்ம தாகம் கொண்டவனை கடைத்தேற வழிகாட்டுவார்!

நல்ல ஒரு குருவை காண்பிப்பார்! அவன்தான் பிழைத்தான்! இரட்சிக்கப்படுவான்!

இருக்கும் ஞான நூற்க்களோ ஏராளம்! மதமோ ஏராளம்!
சாதாரண மனிதன் எதை படிப்பான்! எதை பிடிப்பான்! குழம்பி விடுவான்! சரியான வழி காட்டுதல் இல்லை என்றால் பைத்தியம் தான் பிடிக்கும்! கேடுகெட்ட இந்த உலகத்தில் போலிகள் ஏராளம் ஏராளம்!
உண்மையான ஆன்ம தாகம் கொண்டவர் வாழ்வில் ஒழுக்கமாக நெறியானவர்களுக்கு  அவன் அருளால் நல்ல செய்திகள் காதில் விழும்!

கர்மத்தால் தடுமாறும் அவன் செய்த புண்ணியத்தால் வைராக்கியத்தால் உண்மை அறிவான்! பல வித போராட்டங்களுக்கு பிறகு ஞானம்
பெறுவான்! ஏனெனில் முற்பிறவி பலவற்றில் செய்த கர்மத்தை எங்கே கொண்டு தொலைப்பான்?!  தவம், தவத்தால் தான் கொஞ்சங்கொஞ்சமாக கர்மதிரை விலக வேண்டும்!

குருவருள் இந்த சமயத்தில் தான் பரிபூரணமாக இருக்கணும்! குருவருளால் தான் கடைத்தேற முடியும்! குருவில்லா வித்தை பாழ்! குரு பார்க்க கோடி வினை தீரும்! குருவே பரப்பிரம்மம். அந்த இறைவனே ஆத்ம சொருபமாக குருவாக உன்னை காத்து  அருள்வார்! குரு மூலம் எதை கற்கணுமோ அதை கல்! கற்றபடி நில்! நின்றால் நிலைப்பாய்! நீ அவனாவாய்! நீயே அதை உணர்வாய்! எதைப்படிப்பது குருவை படி! பிடி!

Copy from http://sagakalvi.blogspot.in/
-ஞான சற்குரு சிவசெல்வராஜ்

ஜபமூல மந்திரங்கள்

கணேச பக்தர்களுக்கு :    ஓம் கம் கணபதயே நம:
ஷண்முக பக்தர்களுக்கு:    ஓம் சரவணபவாய நம:
விஷ;ணு பக்தர்களுக்கு:    ஓம் நமோ நாராயணாய
சிவ பக்தர்களுக்கு:    ஓம் நமசிவாய
கிருஷ;ண பக்தர்களுக்கு:    ஓம் நமோ பகவதே வாஸுதேவாய
ராம பக்தர்களுக்கு:    ஸ்ரீ ராம்
நிர்குணஉபாசகர்களுக்கு:    ஓம் அல்லது ஸோஹம்
ஹரிஹர பக்தர்களுக்கு:    ஓம்ஓம் நமசிவாய ஓம் நமோ நாராயனாய
ஓம் நமோ நாராயனாய ஓம்ஓம் நமசிவாய

அபிஷhர தோஷம்-செய்வினை தோஷம்

அபிஷhர தோஷம் என்பது செய்வினை தோஷம் ஆகும். மாந்திரிகத்தை பயன்படுத்தி தனக்கு பிடிக்காதவர்களை அழிவுக்கு கொண்டு செல்வது. தேவதைகளை அடிமைப்படுத்தி ஏவல் விடுவது. செய்வினையால் பாதிக்கப்பட்டவர்கள் 12 வருடகாலம் பாதிக்கப்படுவர், யார் செய்தார்களோ அவர்கள் 98 வருடகாலம் பாதிக்கப்படுவர், இவர்களது வம்சா வழியும் முன்னேற்றம் அடையாது. ஆக யாரும் செய்வினை தோஷத்தில் ஈடுபடாமல் இருப்பதே உத்தமம். பலர் கஷ;டப்படும் போது செய்வினை செய்துவிட்டார்களோ என்று அச்சப்படுவர் இது தேவையற்ற அச்சமே, செய்வினை ஏவலை வெகு சுலபமாக செய்துவிட முடியாது, ஊர் தெய்வ உத்திரவு, குல தெய்வ உத்திரவு, ஜாதகத்தில் இருக்கும் கிரஹ நிலைகள் இவற்றை அறிந்து தான் செய்வினை ஏவலில் ஈடுபடமுடியும்.
விளைவு : செய்து வைத்த உணவு நிறம் மாறும், உணவில் மனித உறுப்பு கிடக்கும், உணவில் துர்நாற்றம் கிளம்பும், பசு மாடு இறக்கும், இரவில் கதவு தட்டப்படும், பயங்கரமான உருவம் கனவில் வந்து பயமுறுத்தும், கூரையில் மனிதர் ஓடுவது போல் இருக்கும், கற்கள் வீசப்படும், தீப விளக்கு எரியாது, இனம் புரியாத கொடூர நோய் உருவாகும், சேர்த்து வைத்த செல்வம் பாழாகும், மனநிம்மதி இருக்காது, பிழைக்க வழியின்றி மனம் பேதலிக்கும், தன்னிலை மறப்பார்கள், சிரிப்பார்கள், ஓடுவார்கள்.
6. திருஷ;டி தோஷம்; : திருஷ;டி தோஷம்; என்பது தனது ஆசை நிறைவேறாமல் எவர் ஒருவர் இறக்கின்றாரோ அவர் ஆன்மா சாந்தி அடையாமல் தனது உறவினர்களையோ அல்லது அவரது கிரஹ நிலைகள் ஒட்டியவரையோ பற்றிக் கொள்வது
விளைவு : நல்ல ஆசைகளை கொண்டு பல சாதனைகளை படைக்க வேண்டும் என்று ஆவலில் இருப்பவர்கள் திடீரென்று இறக்க நேரிடும் போது ஆன்மா சாந்தி அடையாமல் அந்த ஆசையை உயிருடன் இருக்கும் ஒருவர் மூலம் நிறைவேற்றி கொள்வார்கள். இதன் விளைவாக சிறிய வயதாக இருப்பவர்கள் பெரிய, பெரிய விசயங்களை சொல்வார்கள், எந்த கேள்வி கேட்டாலும் ஏற்கனவே பார்த்தது போல் சொல்வார்கள், நாம் அவர்களை பார்த்து வியப்பில் இருப்போம். இந்த நிலை அந்த சிறுவர்களிடம் ஒரு குறிப்பிட்ட காலம் வரையில் இருக்கும் பிறகு மறைந்து விடும்.
கெட்ட ஆசைகள் உள்ளவர்களின் ஆன்மா சாந்தியடையாமல் மற்றவர்களை பிடித்துக் கொண்டால் பல தொல்லைகளை கொடுத்து விடுவார்கள். இதையே பேய்பிடித்தல் என்று சொல்வார்கள். இந்நிலை உள்ளவர்கள் படும் துன்பம் பெரும் துன்பமாக இருக்கும் தானே சிரித்தல், விழிகளை உருட்டுதல், உயிருடன் விலங்குகளை கடித்து இரத்தத்தை குடித்தல், ஓடுதல், பழையவர்களின் பெயரை சொல்லி கூப்பிட்டு திட்டுதல், அடித்தல் போன்ற வெறியான செயல்களில் ஈடுபடுவார்கள்.

சித்த வைத்தியத்தில் நோயணுகா விதி

சித்த வைத்தியத்தில் நோயணுகா விதிகள் என்று ஒன்றுண்டு.அதாவது நோய் அணுகுவதற்கு முன்னர் அதை வரவிடாமல் தடுப்பதுதான் நோயணுகா விதி.

வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரி முன்னர்
வைத்தூறு போலக் கெடும்.
                          -திரு வள்ளுவர்-
நோயணுகா விதிகள் என்றால் என்ன என்றும் அதை எப்படி வரவிடாமல் தடுப்பது என்றும் கீழே விவரமாகக் கொடுத்துள்ளேன்.பஞ்ச பூத சக்திகளை எப்படி நம் உடலில் தேவையான அளவிற்கு மட்டும் சேர்ப்பது என்ற ரகசியம் தெரிந்தால் நோயே இல்லை.


ஔவையிடம் முருகன் கொடியது என்ன என்று கேட்கிறார்.


அதற்கு ஔவைப்பிராட்டி கூறுகிறார்
கொடியது கேட்கின் நெடியவெவ்வேலோய்!
கொடிது கொடிது வறுமை கொடிது!
அதனினுங் கொடிது இளமையில் வறுமை!
அதனினுங் கொடிது ஆற்றொணாக் கொடு நோய்!
அதனினுங் கொடிது அன்பிலாப் பெண்டிர்!
இன்புற அவர் கையி லுண்பது தானே!
என்பார் அவ்வளவு கொடியது நோய்.


மிகினும் குறையினும் நோய் செய்யும் நூலோர்
வளி முதலாவெண்ணிய மூன்று.
                           -திரு வள்ளுவர்-


வளி(காற்று),அக்னி(பித்தம்),சிலேற்பனம்(நீர்), கூடினாலும் குறைந்தாலும் நோய் உண்டாகும்.ஐந்துக்கு இரண்டு பழுதில்லாமல் பண்ண வேண்டும் என்பார்கள் கிராமத்தில்.


மண்,நீர்,காற்று,நெருப்பு,ஆகாயம் ஆகிய பஞ்ச பூதங்கள் ஐந்துக்கு, இரண்டு மட்டுமே பழுதில்லாதது.மற்றவை மூன்றும் பழுதுள்ளது.மனிதன் மரணித்தால் ஆகாயம் உயிரோடு ஓடிப்போகும்.வாசியாக வாசித்துக் கொண்டிருக்கும் காற்று ஓடிப் போகும்.காற்றில்லாவிட்டால் நெருப்பும்(உடல் சூடு அணைந்து,உடல் சில்லிட்டுப் போகும்) ஓடிப் போகும்.


மண்ணும் நீரும் மட்டும் பிணமாகக் கிடக்கும்.இந்த பிணத்துடன் மீந்திருக்கும் வாயு வீங்கல்(அல்லது வெடி வாயு) வாயுவான தனஞ்ஜெயன்.அது உடலுடன் தங்கியிருந்து உயிர் போன பத்தாவது நாழிகையிலிருந்து உடலை வீங்க வைத்து வெடிக்க வைத்து உடலை அழிக்கும்.
ஒரு ஜென் பௌத்தக் கதை:-
இரு சீடர்கள் பேசிக் கொண்டார்கள்.

முதலாமவன் சொன்னான் என் குருநாதரைப் போல உன் குருநாதரால் அற்புதங்களும் அதிசயங்களும் செய்ய முடியுமா,என்று கேட்டான் முதல் சீடன்.


இரண்டாம் சீடன் சொன்னான் என் குருநாதர் பசி எடுக்கும் போது சாப்பிடுகிறார்,தாகம் எடுக்கும் போது தண்ணீர் குடிக்கின்றார்,தூக்கம் வரும்போது தூங்குகின்றார், என்றான்.

 

முதலாமவன் சொன்னான் இதைத்தான் எல்லோரும் செய்கிறார்களே இதில் என்ன அதிசயம் இருக்கிறது என்றான்.

இரண்டாமவன் சொன்னான் என் குருநாதர் பசி எடுக்கும் போது மட்டும்தான் சாப்பிடுவார்,சாப்பிடும் போது வேறு எந்த எண்ணத்தையும் எண்ண மாட்டார்.(EATING MEDITATION)


தாகம் எடுக்கும் போதுமட்டும்தான் தண்ணீர் குடிப்பார்.அப் போது வேறு எந்த எண்ணத்தையும் எண்ண மாட்டார்.(DRINKING MEDITATION)

 

தூக்கம் வரும்போது தூங்குவார்.{(அறிதுயில்) தூங்காமல் தூங்கிச் சுகம் பெறுதல்(MEDITATION ON SLEEP)}.

 

இதையே சித்தர்கள் “”மாடுதான் ஆனாலும் ஒரு போக்குண்டு மனிதனுக்கு அவ்வளவு தெரியாதப்பா???”” என்பார்கள். மாடு தண்ணீர் குடிக்கப் போனால் அதற்கு தண்ணீர் மட்டும்தான் தெரியும், மாட்டின் சொந்தக்காரன் நின்றால்கூட அது கவனிக்காது மிதித்துவிட்டு சென்றுவிடும். அதன் சிந்தனை நோக்கம் வேறாக இருக்காது. அது போல மனிதனுக்கு அவ்வளவு தெரியாமல்தான் துன்பத்திலும் துயரத்திலும் உழலுகின்றான்.   

 

உடலை வளர்த்த பஞ்ச பூதங்களும் உயிர் பிரிந்த பின் பஞ்ச பூத பெருஞ் சக்திகளுடனே சேர்ந்துவிடும்.இந்த பஞ்ச பூத சக்திகளை பிரியாமல் எவ்வளவு காலம் வைத்திருக்கிறோமோ,அவ்வளவு காலம் உயிர் உடலில் நிலைத்திருக்கும். அவைகளில் மாறுபாடு இல்லாமல் பார்த்துக் கொண்டால் உடலில் வியாதிகள் (நோய்கள்) உண்டாகா!!!!!!அந்த வழிகளையே கீழே விவரித்திருக்கிறேன்.     


1)உணவு(மண்):-
(அ):-
சாப்பிடுவதற்கு முன் பிரார்த்தனை செய்ய வேண்டும்.
(ஆ):-
பசி இல்லாத போது சாப்பிடக் கூடாது.
(இ):-
உணவில் ஆறு சுவைகள் இருக்க வேண்டும். முதலில் இனிப்பு சாப்பிட வேண்டும்.
(ஈ):-
நாக்கால் சுவையை ருசித்த பின்னரே விழுங்க வேண்டும். ஆறு சுவைகளையும் திகட்டும் வரை உண்ண வேண்டும்.
(உ):-
சாப்பிடும் பொழுது கண்களை மூடி உதட்டை பிளக்காமல் (வாயை மூடியபடி மெல்ல வேண்டும்) மென்று கூழ் போல் அரைத்து பின் விழுங்க வேண்டும். 
(ஊ):-
சாப்பிடுவதற்கு அரை மணி நேரம் முன்பும் பின்பும் நீர் அருந்தக் கூடாது.
(எ):-
சாப்பிடுவதற்கு முன்பும் பின்பும் மூன்று முறை உள்ளங் கையில் நீரை உறிஞ்சிக் குடிக்க வேண்டும்.  
(ஏ):-
குளித்த பின் 45 நிமிடங்களுக்கு பிறகு மட்டுமே சாப்பிட வேண்டும்.சாப்பிட்ட பிறகு 2 1/2 மணி நேரத்திற்கு குளிக்கக் கூடாது. 
(ஐ):-
சாப்பிடும் முன் கை, கால், முகம் கண்டிப்பாக கழுவ வேண்டும். 
(ஒ):-
டி.வி பார்த்துக் கொண்டு சாப்பிடக் கூடாது.
(ஓ):-
பேசிக் கொண்டே சாப்பிடக் கூடாது.
(ஔ):-
கால்களைத் தொங்க வைத்துக் கொண்டு சாப்பிடக் கூடாது.
(க):-
அம்மா தன் பிள்ளைகளுடன் அமர்ந்து சாப்பிடக் கூடாது. 
(ங):-
புத்தகம் படித்துக் கொண்டே சாப்பிடக் கூடாது.
(ச):-
முதல் ஏப்பம் வந்தவுடன் சாப்பிடுவதை நிறுத்திவிட வேண்டும்.


2)குடி தண்ணீர்(நீர்):-

(அ):-
தண்ணீரை கொதிக்க வைத்து குடிக்கக் கூடாது.
(ஆ):-
தாகம் எடுத்த உடனே தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.
(இ):-
மினரல் வாட்டர் பயன் படுத்தக் கூடாது.
(ஈ):-
நீரை பில்டர் செய்யக் கூடாது.
(உ):-
நீரை மண் பானையில் குறைந்தது 2 மணி நேரம் வைத்திருந்து பின் பயன் படுத்த வேண்டும்.
(ஊ):-
தாகம் இல்லாமல் நீர் அருந்தக் கூடாது.
(எ):-
சிறுநீர் கழித்தால் உடனே தண்ணீர் அருந்த வேண்டும்.
(ஏ):-
நீரை அண்ணாந்து குடிக்கக் கூடாது. மெதுவாக சப்பி குடிக்க வேண்டும்.  


3)ஓய்வு தூக்கம் (ஆகாயம்):-
(அ):-
வடக்கே தலை வைத்து படுக்கக் கூடாது.
(ஆ):-
டீ, காபி குடிக்க கூடாது.
(இ):-
வெறும் தரையில் படுக்கக் கூடாது.
(ஈ):-
உடல் உழைப்பு உள்ளவர்கள் குறைந்தது 6 மணி நேரம் தூங்க வேண்டும்.
(உ):-
மனதுக்கும், புத்திக்கும் வேலை கொடுப்பவர்கள் குறைந்த பட்சம்  6 மணி நேரம் ஓய்வு எடுக்க வேண்டும்.
(ஊ):-
தூக்கத்திற்கும் ஓய்வுக்கும் உள்ள வித்தியாசத்தை தெரிந்து கொள்ளுங்கள்.
(எ):-
இரவில் பல்விளக்கி படுத்தால் நன்றாக தூக்கம் வரும்.
(ஏ):-
தாடைக்குக் கீழ் தடவிக் கொடுத்தால் நன்றாக தூக்கம் வரும்.
(ஐ):-
தலையில் உச்சிக்கும்,சுழிக்கும் நடுவில் மசாஜ் செய்தால் நன்றாக தூக்கம் வரும்.


4)காற்று (வாயு):-
(அ):-
கொசுவர்த்தி,ஆல் அவுட்,குட் நைட் பயன்படுத்த கூடாது.
(ஆ):-
வீடு, அலுவகம், தொழிற்சாலை, படுக்கை அறை எங்கும்,எப்போதும் காற்றோட்டத்துடன் இருக்க வேண்டும் .
(இ):-
தூங்கும் போது ஜன்னல்களை அடைத்து வைத்து தூங்கக் கூடாது. 
(ஈ):-
கொசு கடிக்காமல் இருக்க கொசு வலையை பயன்படுத்தலாம்.


5) உழைப்பு (நெருப்பு):-
(அ):-
பசித்தால் மட்டுமே சாப்பிட வேண்டும்.
(ஆ):
A/C MACHINE ஐ 37’C ல் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
(இ):
உழைப்புக்கேற்ற உணவு (அல்லது) உணவுக்கேற்ற உழைப்பு வேண்டும்.
(ஈ):-
தினமும் உடலில் உள்ள அனைத்து இணைப்புக்களுக்கும் வேலை தர வேண்டும்.
(உ):-
இரத்தம் ஓட இதயம் உதவும்.ஆனால் நிணநீர் ஓட்டம் ஓட உடல் உழைப்பு மட்டுமே உதவும். 
(ஊ):-
உடல் உழைப்பு இல்லாதவர்களுக்கு உடலில் நிணநீர் ஓட்டம் இருக்காது.இதுதான் பல நோய்களுக்கு காரணம் .


ஐந்து திபேத்திய யோக அசைவுகளைச் செய்யுங்கள்.அவை உடலில் பல வித்தியாசங்களை உண்டாக்கும்.நோயிலிருந்து விடுவிக்கும்.எந்தக் காரியமானாலும் இருபத்தியோரு முறை இறை சன்னதியை நமது முன்னோர்கள் சுற்றச் சொல்வார்கள், அதயேதான் திபேத்திய யோக முறைகளிலும் கடைப்பிடிக்கிறார்கள்.

இவற்றையேதான் திரு ஹீலர் பாஸ்கர் வலியுறுத்திக் கூறுகிறார்.அந்த விடயங்களைக் கேளுங்கள். நோயின்றி வாழுங்கள்.

ஹீலர் பாஸ்கர் அவர்களின் இந்த இணைப்பைப் பார்வையிடுங்கள். 
http://anatomictherapy.ning.com/events/the-art-of-self-healing-1
அவர் வெளியிட்டுள்ள அந்த ஐந்து DVD க்களை வாங்கி,போட்டுப் பார்த்து கேட்டு, அவைகளக் கடைப் பிடித்தால் உங்கள் வீட்டில் ஆரோக்கியம் பொங்கும்.நோய் போகும்